salai basheer novel kasabath நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத் – நுகர்வியத்திற்கு எதிரான குரல்

சாளை பஷீர் தன் வரலாற்றிலிருந்தே காயல்பட்டினத்தின் கடந்த கால வரலாற்றை, தன்னைச் சூழ உள்ள மனிதர்களை, தன் சுயத்தின் நீட்சியை முகிழ்க்கச் செய்கிறார். அவரது கதை மாந்தர்களில் வெள்ளந்தி மனிதர்கள், எளியவர்கள், புத்தகப் பிரியர்கள், அடுத்தவரைச் சுரண்டி வாழ்பவர்கள், அடுத்தவர்களுக்கு உதவுபவர்கள், சம்பாத்தியமே வாழ்க்கை என அலைபவர்கள் எனப் பல்வேறு மனிதர்கள் வந்து போகிறார்கள். அவர் பாத்திர வடிவமைப்பை மிகக் கச்சிதமாக அமைத்திருப்பது அவரின் அனுபவத்தின் துணை கொண்டே. நாவலில் வரும் முதல் கதாபாத்திரமான தாவூதப்பா முதல் இறுதிக் கதாபாத்திரமான குட்டை ஷாஃபி வரை எந்தக் கதாபாத்திரமும் புனைவில் உருவாக்கப்படவில்லை என்பது மிகத் தெளிவு. மிகவும் தத்ரூபமாக அவர்களை எங்கள் மனக்கண் முன்பு நிறுத்துகிறார் சாளை பஷீர்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: நாவல் வாசிப்பனுபவம்

தமிழ் நாவல் உலகு எனும் வீட்டில் புதியதொரு ஜன்னலை திறந்துவிட்டுள்ளது கிரானடா என்று சொன்னால் அது மிகையான கருத்தல்ல. ”அசாதரணமாதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின் தொடர்ந்து செல்வதன் ஊடாக, பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகு நுட்பமாக நெய்தெடுக்கிருக்கிறது கிரானடா” எனப் பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்திற்கு நியாயம் செய்துள்ளது இந்த நாவல்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

புனைவுகள் என்னும் பெருவெளி

கதைகள், நாவல்கள் வழியாக நாம் மனிதர்களையே வாசிக்கிறோம். மனிதனின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், அவனுடைய புறச்சூழல்கள், அவை அவனுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அவனுடைய அகத்திலும் புறத்திலும் அவன் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவனுடைய மன அவஸ்தைகள், அவனுடைய இலட்சியவாத கனவுகள், அவன் நிகழ்த்த விரும்பும் சாகசங்கள், அவனுடைய இயல்புகள் ஆகியவை கதைகள், நாவல்களின் வழியாகவே மிகக் கச்சிதமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்த இடத்தில்தான் கதைகளும் நாவல்களும் வெறுமனே புனைவுகள் என்பதைத் தாண்டி அவை மனித வாழ்வை வாசிப்பதற்கான மகத்தான பொக்கிஷங்கள் என்ற அடிப்படையில் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும் படிக்க