கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது?

Loading

தமிழில் தேவர் சமூகப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து வந்திருந்திருக்கின்றன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்கு சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சாத்தியம் இல்லாத தேசியம்

Loading

தேசியவாதம் போதையைக் கொடுக்கிறது. சுயநலம்தான் அதன் ஆதாரமாக இருக்கிறது. தேசியவாதத்தை எத்தகைய நியாயமும் இல்லாத ஒன்றாக தாகூர் பார்த்தார் என்றால் அதற்குக் காரணம், எந்தவொரு தேசியவாதத் திட்டத்திலும் எப்போதும் அதன் மையமாக அதிகாரத்திற்கான முனைப்புதான் இருந்துவந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது என்பதனால்தான். அவரைப் பொறுத்தமட்டில், ‘தேசியம் மிகக் கச்சிதமாக உருவாக்கியிருப்பது அதிகார அமைப்பைத்தானே தவிர, ஆன்மிக லட்சியவாதத்தை அல்ல. இது, அதன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் மிருகம்போல் இருக்கிறது…’.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

திராவிட அரசியலும் முஸ்லிம்களும்

Loading

விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது?

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

முஸ்லிம் மக்களுக்கு அம்பத்கர் எதிரானவரா?

Loading

கல்வி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், பிழைப்புவாத தலித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிகள் ஆகியவற்றின் மூலம் தலித் மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை முஸ்லிம் எதிர்ப்பாளராக அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறது. சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்து மதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்ப பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்புச் செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்

Loading

இஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை

Loading

மதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர அது உருவாக்கும் எந்தக் கேள்விகளுக்கும் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்

Loading

“இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப் பன்மைத்தன்மையை அழித்து அதை ஒருபடித்தன்மையாக மாற்றும் முயற்சிகள் எல்லை மீறினால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து.”

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

எந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது

Loading

மனித வாழ்வுக்கு கலை அவசியமானது என்பேன். கலைகள் எல்லாம் உயர் மனிதப் பண்புகளை நம்முள் விதைக்கக்கூடியவை. எதிர்மறை மனிதப் பண்புகளை நம்மிடமிருந்து அகற்றுவதற்கு கலை, இலக்கியங்கள் அவசியத் தேவை. உண்மையில், கலைகளின் செயல்பாடும் நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

ஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை

Loading

ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட “சட்டவிரோத பங்களாதேசிக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “பங்களாதேசி முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம்கள் அனைவருடைய குடியுரிமையையும் காவு வாங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்

Loading

இந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க