கட்டுரைகள் 

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்-1

Loading

ஒரு மனிதன் தான் செய்யும் பாவத்தை பாவம் என உணர்தலே அவன் அதிலிருந்து விடுபடுவதற்கான முதல் அடி. எந்தச் சமயத்திலும் அதனை அவன் நியாயப்படுத்தி விடக்கூடாது. அதற்கான நியாய வாதங்கள் அவனுக்குள் உருவாகிவிட்டால், அவற்றை அவன் வெளிப்படுத்தத் துணிந்து விட்டால் அவன் அடுத்த நிலைக்குச் சென்றுவிடுவான். அது வெளியேறுவதற்கு சற்று கடினமான நிலை. ஒருவன் தனக்கு நோய் இருப்பதை உணர்ந்தால்தானே அதற்கான சிகிழ்ச்சையை அவன் முன்னெடுக்க முடியும்.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

ஒரு சிறிய பிரார்த்தனை

Loading

மனிதர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி ஒருவன் பாவங்களில் மூழ்கியிருப்பான் எனில் தனக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை தன் திறமையின் விளைச்சலாகக் கருதிக்கொண்டிருப்பான் எனில் அவன் தனக்கான துன்பங்களை தானே தேடிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

பலவீனர்கள் அல்ல உதவியாளர்கள்

Loading

பெண் குழந்தை பொன்னையும் கொண்டு வரும் என்று நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் சொல்லும் நம் வாழ்பனுபவம் கற்றுத்தந்த பாடங்களில் ஒன்றுதானே. எல்லாம் தன் முயற்சியின், தன் திறமையின், தன் உழைப்பின் விளைவுதான் என்ற எண்ணம் மிக விரைவில் ஒருவனை நிராசையில் ஆழ்த்திவிடலாம். கர்வம் தனக்கு எதிரான நிராசையையும் கொண்டு வரும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன?

Loading

இஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை. அது மானிட சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மார்க்கம். நாடு, இனம், மொழி என எந்த வரையறையும் அதனைக் கட்டுப்படுத்தாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

உலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

Loading

தன்னிடம் இருப்பவற்றை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகள் என்பதை உணராதவன் அவற்றை தன் திறமையின் விளைச்சலாகக் கருதி கர்வம்கொள்வான். அவற்றைப் பெற்றிராத மற்றவர்களை இழிவாகக் கருதுவான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மனிதனைப் பண்படுத்தும் மார்க்கம்

Loading

இஸ்லாம் மனிதனின் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்த அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. அவனுடைய தீய உணர்வுகளுடன் போராடும்படி அவனுக்குக் கட்டளையிடுகிறது. அது மனம் எல்லா வகையான உணர்வுகளும் பொங்குமிடம்தான் என்பதையும், ஒவ்வொன்றும் எல்லை மீறவே விரும்பும் என்பதையும் அவனுக்கு உணர்த்தி, அவற்றை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதற்கான சரியான வழிமுறைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. 

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வெற்றியைத் தீர்மானிப்பது எது?

Loading

அசத்தியத்தின் கரங்கள் ஓங்கும்போது வெளிப்படையான காரணிகள் அதற்குச் சாதகமாகவே தென்படும். அவற்றைக் கண்டு நம்பிக்கையாளர்கள் நிராசையடைந்து விடக்கூடாது. சத்தியம் எல்லாவற்றையும் மிகைக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்தது என்பதையும், அது எல்லா தர்க்கங்களையும் தாண்டி மனித மனதிற்குள் நேரடியாக ஊடுருவிச் செல்லக்கூடியது என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வாழ்வென்பது யாதெனில்…

Loading

வாழ்க்கை என்பது வெறுமனே அனுபவித்தல் மட்டுமல்ல. அப்படியான ஒரு வாழ்க்கையும் மரணமும் ஒன்றுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் இறுதியில் வெறுமையையும் விரக்தியையும் தவிர வேறெதுவும் மிஞ்சப் போவதில்லை. வாழ்வதென்பது இயந்திரங்கள் செயல்படுவதைப்போன்று செயல்படுவது அல்ல. அப்படிப்பட்டவர்களை காலம் விரைவில் மறக்கடித்துவிடும். அவர்களும் தங்களைத் தாங்களே மறந்துவிடுவார்கள். வாழ்க்கை தீராத அறிதலையும் கண்டடைதலையும் வேண்டி நிற்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை

Loading

மதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர அது உருவாக்கும் எந்தக் கேள்விகளுக்கும் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் – 2

Loading

மனிதனுக்கு ஆரோக்கியம் அளப்பரிய செல்வமாகும். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமானவனாக ஒருவன் ஒரு நாளை அடைவதைவிட பெரும் பேறு எதுவும் இல்லை. எந்தவொன்றும் நம்மை விட்டுச் செல்லும்போதுதான் அதன் அவசியத்தை நன்குணர்கிறோம். மனிதன் இழப்பின்போதுதான் இருப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்கிறான். தினமும் நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் கற்றுத்தரும் பின்வரும் பிரார்த்தனையை சற்று கவனமுடன் வாசித்துப் பாருங்கள். இந்த பிரார்த்தனையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஆஃபியா’ என்ற வார்த்தை முழுமையான ஆரோக்கியத்தைக் குறிக்கும். ‘அல்அஃப்வு’ நம்முடைய பாவங்களை அவன் கண்டுகொள்ளாமல் மன்னித்து விடுவதைக் குறிக்கும். முதலில் அவனிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு பின்னர் ஆரோக்கியத்தைக் கேட்கிறோம். இரண்டையும் ஒருசேர கேட்க வலியுறுத்தப்பட்டிருப்பதற்கான சூட்சுமம் இரண்டிற்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதையே காட்டுகிறது:

மேலும் படிக்க