இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 1)
![]()
இருப்பிற்கும் இல்லாமைக்குமான தூரத்தை மனித அறிவால் விளக்க முடியாது. இந்த உலகம் எவ்வாறு வந்தது? இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது? தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் “ஆகு” என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். இந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவில்லையெனில் நம்மால் எந்த விளக்கத்தையும் கூற முடியாது அல்லது மெய்யியலாளர்களைப்போன்று காரிருளில் தடுமாறித் திரிவோம். இருப்பிற்கும் இல்லாமைக்குமிடையே இருக்கின்ற தூரத்தைப்போன்ற உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் இடையே தூரம் காணப்படுகின்றது. தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு விளக்கம் அளிக்க முடியாது. “அவனே ஒவ்வொன்றையும் படைத்து பின்னர் வழிகாட்டினான்.”
மேலும் படிக்க