குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தாலிபான் ஆட்சியை சர்வதேசச் சமூகம் ஏன் ஏற்க வேண்டும்?

Loading

பல்லாண்டுகால வெளிநாட்டுத் தலையீடுகளால் ஆஃப்கானிஸ்தான் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்துள்ளது. முதலில் ரஷ்யாவாலும், பிறகு அமெரிக்கா, பிரிட்டிஷ், நேட்டோ ஆகியவற்றாலும் அது பாதிப்புக்குள்ளானது. இந்தக் காலனியத் தலையீடுகளெல்லாம் அந்நாட்டையே நாசமாக்கி விட்டிருக்கின்றன; உயிரிழப்புகளையும் அழிவையும் தவிர அவை ஈட்டியது வேறொன்றுமில்லை. காலனியச் சக்திகள் தோற்க வேண்டியவைதாம்; ஏனெனில், தம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சட்டபூர்வ உரிமை ஆஃப்கானியர்களுக்கு மட்டுமே இருக்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம்களை மற்றமையாக்கும் லிபரல் சொல்லாடல்கள்

Loading

ஆக, பொதுவாக முஸ்லிம் empowerment-யும், குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஆற்றல்படுத்தலையும் ஊக்குவிக்கும் காரணியாக முஸ்லிம் சமூகத்தின் சமய-சமூகக் கட்டமைப்புகள் செயல்பட முடியும். பொதுவாக முஸ்லிம் சமூகத்தையும், குறிப்பாக முஸ்லிம் பெண்களையும், பலவீனப்படுத்தும் வெளிகளாக ‘பொது’வெளிகளும் செயல்பட முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் புரிதல்கள் எதுவும் இல்லாமல் முஸ்லிம் backwardness-ஐ ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் அகவயச் சிக்கல்களாக நிரல்படுத்துவது ஒரு முஸ்லிம் விரோதச் செயல்பாடு இல்லையா? முஸ்லிம் மற்றமையாக்கத்தின் ஆற்றல் வரட்டுத்தனமான இந்துத்துவச் சொல்லாடல்களுக்குள் இல்லை. மாறாக, முஸ்லிம் மற்றமையாக்கத்தின் உயிர், நவீனமாகவும் மதச்சார்பற்றதாகவும் தெரியும் லிபரல் சொல்லாடல்களுக்குள்தான் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சமூகத் தொண்டர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு: அமித்ஷா பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லா

Loading

பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடியவரும் பீமா கோரேகான் வழக்கில் சிறைவைக்கப்பட்டவருமான அருட்தந்தை ஸ்டேன் சுவாமி (84) இன்று மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார். நீண்ட நாட்களாக அவரின் உடல்நிலையையும் கொரோனா பரவலையும் கருத்தில் கொண்டு அவருக்குப் பிணை வழங்குமாறு கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இதையொரு நிறுவனக் கொலை என்கின்றனர் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். இது தொடர்பாக மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகத் தொண்டர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் இன்று மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த செய்தி ஆறாத் துயரத்தை அளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வந்தவர் ஸ்டேன் சுவாமி. ஆதிவாசி மக்களின் நிலத்தைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களை நடத்திக்…

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

முஸ்லிம் வெறுப்புக் குற்றத்தை பூசி மெழுகும் உ.பி. போலிஸ்

Loading

காஸியாபாத்தைச் சேர்ந்த 72 வயதான முஸ்லிம் முதியவர் அப்துல் சமது சைஃபி தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. “ஜெய் ஸ்ரீராம்” என முழங்குவதற்கு அவர் கட்டாயப்படுத்தப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது தாடியையும் நறுக்கி அவமானப்படுத்தியது ஒரு கும்பல்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

பாவத்தின் வசீகரம்

Loading

பாவத்திற்கு ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் அது மேலோட்டமான வசீகரம். அதனுள்ளே வெறுமையும் நிராசையும் அழிவும் இருக்கிறது. உண்மையில் அது நமக்கு நாமே செய்யும் தீங்கு. அதனுள் செல்லச் செல்ல நாம் நம் சுயத்தை இழந்துவிடுவோம். நம்மை நாமே மறந்து விடுவோம். அடிமைபோன்று செயல்படத் தொடங்கிவிடுவோம்

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தீய இச்சையின் பிடியிலிருந்து விடுபட

Loading

மனம் ஏதேனும் ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாகும்போது அது தன்னுடைய சுதந்திரத்தை இழக்கிறது. அந்த பழக்கத்தை இயல்பான ஒன்றாக, அது தன் வாழ்க்கையோடு இயைந்த ஒன்றாக மனம் எண்ண ஆரம்பிக்கிறது. இந்த இடத்திலிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது. அவன் அதற்கான நியாய வாதங்களை முன்வைக்கிறான். கோட்பாட்டளவில் அதனை நியாயப்படுத்தும் கருத்தியல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கத் தொடங்குகிறான்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

போதிப்பவனும் போதிக்கப்படுபவனும்

Loading

அறம் போதிப்பவர்களின், மார்க்கம் சொல்பவர்களின் தவறுகள் மட்டும் ஏன் இந்த அளவு பூதாகரமானவையாகப் பார்க்கப்படுகின்றன? ஆம், அறம்போதிப்பவர்களை அம்பலப்படுத்தி பார்ப்பதில் மனிதர்களுக்கு ஒரு குரூரமான ஆனந்தம் இருக்கிறது. அதனால்தான் மற்றவர்களைவிட அவர்களின் தவறுகள் பூதாகரமானவையாக சித்தரிக்கப்படுகின்றன. தொடர்ந்து அவை குறித்து பேசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இன்னொரு அம்சமும் இருக்கிறது. அறம்போதிக்கும் அந்த மனிதர்களின் கீழ்மைகளைக் கொண்டு தங்களின் கீழ்மைகளை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள் மனிதர்கள். அவர்களுக்கு அதில் ஒருவித ஆறுதலும் மகிழச்சியும் உள்ளது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

நோன்பும் மனக்கட்டுப்பாடும்

Loading

நோன்பின் மூலம் நீங்கள் தக்வா உடையவர்களாக ஆகலாம் என்று இறைவன் கூறுகிறான். தக்வா என்றால் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதும் தடுக்கப்பட்ட வழிகளைவிட்டு தவிர்ந்திருப்பதும் ஆகும். தக்வா என்பது இயல்பு நிலை. இந்த உலகில் ஒரு மனிதன் இங்கும் அங்கும் தடுமாறித் திரியாமல், ஏதோ ஒன்றுக்கு அடிமையாகிவிடாமல் இயல்பு நிலையில் நீடித்திருந்தாலே போதுமானது. உண்மையில் அதுதான் வெற்றி.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஆண்மை தவறேல்!

Loading

ஆண்மை என்பதை ஏதோ நம் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வுகொண்டு மருக வேண்டிய ஓர் ஆதி பாவம் போல் சித்தரிக்கிறது இன்றைய கலாச்சாரம். ஆனால், நாம் ஒழுங்குபடுத்தி, வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு கொடை அது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

உலகை ஆளும் புதிய மதம்!

Loading

Pew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின் நிலையென்ன, 77 சதவீதம் இருப்பவர்களுள் எத்தனை பேர் இஸ்லாமிய உலக நோக்குடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறார்கள்? சில தலைமுறைகள் கடந்த பின்னர் நிலைமை என்னவாகும் என்பன விடை காண வேண்டிய வினாக்களாய் நம்மிடையே உள்ளன.

மேலும் படிக்க