கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அஹ்லுஸ் சுன்னாஹ்வின் பார்வையில் கர்பலா

Loading

முஹர்றம் 10ம் தேதி ஹிஜ்ரி 61ம் ஆண்டு (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய வரலாற்றில் உச்சகட்ட கொடூரங்கள், சோகங்கள் நடந்தேறியதை வரலாற்றுப் பக்கங்கள் படம்பிடித்திருக்கின்றன. அந்தப் பக்கங்களைக் கடந்து செல்லுகையில் எப்படிப்பட்ட இரும்பு மனிதராக இருந்தாலும் அவரின் கண்கள் குளமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஹிஜ்ரி 61ம் ஆண்டு கர்பலாவில் நடந்த படுகொலைகள் காஃபிர்களால் நடத்தப்பட்டதன்று; மாறாக, கலிமா மொழிந்த முஸ்லிம்களால் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட முக்கியமானது, அல்லாஹ்வின் தூதருடைய (ﷺ) ஈரக்குலையான அன்னை ஃபாத்திமாவின் ஈரக்குலை இமாம் ஹுசைன் (றலி) மீதும், நபியின் குடும்பத்தார் (அஹ்லுல் பைத்) மீதும் நடந்தேறிய மாபெரும் அநீதம் அது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தாலிபான்களை மையப்படுத்தி மீண்டும் சூடுபிடிக்கும் இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

Loading

தாலிபான்களை மையப்படுத்தி இஸ்லாமிய வெறுப்புத் தொழில் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தாலிபான்களின் முந்தைய செயல்பாடுகள் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலாளர்களுக்குப் பெரும் தீனி. தாலிபான்கள் தங்களின் முந்தைய கடும்போக்குத்தனத்துடன் இப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் உளமாற விரும்புகிறார்கள்போலும். அப்போதுதான் இஸ்லாமிய ஷரீஆ மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்துக் கொண்டேயிருக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்போலும். இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் இந்த அளவு மூர்க்கமான தாக்குதல்கள் அவர்கள் அதன் மீது கொண்டிருக்கும் கடுமையான வெறுப்பையே காட்டுகின்றன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

“ஆஃப்கானிஸ்தானிலிருந்து ஏகாதிபத்திய சக்திகள் பாடம் பெற வேண்டும்” – JIH தேசியத் தலைவர் கருத்து

Loading

ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பல்லாண்டுகளாக அங்கு தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் அமைதியற்ற சூழலுக்கும், ரத்தக் களரிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், அந்த நாட்டில் அமைதியும் இணக்கமும் பாதுகாப்பும் நிலைபெறுவதற்கும் ஆஃப்கன் மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதற்கும் இந்த மாற்றங்கள் துணை நிற்கும் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தாலிபான் ஆட்சியை சர்வதேசச் சமூகம் ஏன் ஏற்க வேண்டும்?

Loading

பல்லாண்டுகால வெளிநாட்டுத் தலையீடுகளால் ஆஃப்கானிஸ்தான் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்துள்ளது. முதலில் ரஷ்யாவாலும், பிறகு அமெரிக்கா, பிரிட்டிஷ், நேட்டோ ஆகியவற்றாலும் அது பாதிப்புக்குள்ளானது. இந்தக் காலனியத் தலையீடுகளெல்லாம் அந்நாட்டையே நாசமாக்கி விட்டிருக்கின்றன; உயிரிழப்புகளையும் அழிவையும் தவிர அவை ஈட்டியது வேறொன்றுமில்லை. காலனியச் சக்திகள் தோற்க வேண்டியவைதாம்; ஏனெனில், தம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சட்டபூர்வ உரிமை ஆஃப்கானியர்களுக்கு மட்டுமே இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சமநிலையற்றுப் பாயும் ‘குருதி’: சில விமர்சனக் குறிப்புகள்

Loading

இந்துத்துவ இளைஞனின் வன்முறைகள் வெறுமனே வார்த்தைகளில் மட்டுமே விவரிக்கப்படுகின்றன. ஆனால் லாயிக், கரீம் மற்றும் இன்னொரு முஸ்லிம் இளைஞன் ஆகியவர்கள் கொடூரத்தின் எந்த எல்லைக்கும் செல்பவர்களாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். இந்துத்துவ இளைஞன் கிராமத்து ஏழைப் பூசாரியின் பேரன். லாயிக்கோ முஸ்லிம் அடிப்படைவாத இயக்கத்தில் சேர்ந்து, அது தடைசெய்யப்பட்டவுடன் வெளிநாடு செல்லும் அளவுக்கு வசதியானவன். எல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்னை, இந்துத்துவ இளைஞன் எந்த அமைப்பைச் சேர்ந்தவனாகவும் காட்டப்படுவதில்லை. ‘இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக’ உணர்ந்து வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தவன். ஆனால் லாயிக்கோ இஸ்லாமிய வன்முறை அமைப்பில் செயல்படுபவன். வெளிநாட்டில் இருந்ததன்மூலம் அவனுக்கு வெளிநாட்டு ஆயுதக்குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்கான மௌனமும் பிரதியில் உண்டு.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

ஒரு சொல் (சிறுகதை)

Loading

“இருபத்தஞ்சு வருஷம் கால் நூற்றாண்டு உழச்சுப்போட்டுதான் இக்கிறேன். மாசச் செலவுக்கு இல்லன்னு சொல்லி யார்ட்டயும் போய் நின்னதில்ல. இன்னிக்கு இந்த மாதிரி சிக்கல். புது முயற்சி எடுத்தா கொஞ்ச நாளய்க்கு நடக்குது, அப்புறம் வாய் பாக்க வேண்டியீக்குது. அல்லாஹ்தான் தரணும். காச உண்டாக்க முடியலன்டா எவன்டயும் போய் நிக்க மாட்டேன். அது மட்டும் உறுதி. பேசாம தோல்விய ஒத்துக்கிட்டு மல்லாக்கப் படுத்துறுவேன்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் மதரசாக்கள் – நிழலும் நிஜமும்

Loading

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இன்னும் 8.5 கோடி குழந்தைகள் பள்ளியையே எட்டிப் பார்க்காத நிலையில், மதரசாக்கள் தன்னளவில் அறிவொளியைப் பரப்பியே வருகின்றன. அதிலும், மதரசாக்களில் பயில்பவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களாகவும் பெண்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கான உணவு, உறையுள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளோடு அவர்களுக்கான கல்வியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு இல்லையென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காத தற்குறிகளாகத்தான் ஆவார்கள். நவீனச் சிந்தனை என்ற போர்வையில் மதரசாவை மட்டும் குறிவைத்துத் தாக்குபவர்கள் சிறுபான்மைச் சமுதாயத்திற்கு எதைக் கையளிக்கப்போகிறார்கள்?

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

அத்தர் (சிறுகதை)

Loading

வெள்ளை உடை தரித்த இரண்டு வீரர்கள் கையில் வாளுடனும் நீண்ட தலைப்பாகையுடனும் காவல் இருக்க, பச்சைத் தலைப்பாகையுடன் நீண்ட வெள்ளைத் தாடியுடன் இஸ்லாமிய ஸூஃபிப் பெரியவர் அகர் கட்டைகளிலான தஸ்பீஹ் மாலையை உருட்டிக்கொண்டிருந்தார். அருகில் மற்றொரு உருவம். ‘மினல்லாஹி இலல்லாஹி… மினல்லாஹி இலல்லாஹி…’ அதன் முதல் மணியை அவரது கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவில் உருட்டியபோது நான் ஓடையிலிருந்து தூக்கியெறியப்பட்டு அவர்களுக்குச் சமீபமாக நின்றுகொண்டிருந்தேன். மலாயன் புலிக்குட்டிகள் நான்கு ‘உர்ரெனச்‘ சுற்றிக்கொண்டிருந்தன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மதரசாக் கல்வித் திட்டம் – நேற்றும் இன்றும்

Loading

முகலாயர் காலத்தில், குறிப்பாக அக்பரின் காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் மதரசாக்களில் ஒருசேர கல்வி பயில ஊக்குவிக்கப்பட்டனர். ஏழ்மை அறிவுத் தேட்டத்திற்கான தடைகல்லாக இருக்கக் கூடாது என்பதற்காக மேல்படிப்பு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் நடைமுறையும் முதன்முதலாக மதரசாக்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மதரசாக்களின் மாணவர்கள் நல்லொழுக்கம், கணிதம், அளவையியல், வேளாண்மை, வடிவியல், எண்சோதிடம், வானவியல், அரசியல், பொதுநிர்வாகம், மருத்துவம், தர்க்கவியல், இயற்பியல் உள்ளிட்ட 18 வகையான பாடங்களைக் கற்றுத்தேற வேண்டியிருந்ததாக அபுல்ஃபஜல் தனது அய்ன் இ அக்பரியில் குறிப்பிடுகிறார். நவீன பாரதத்தின் தந்தை, இந்து மதச் சீர்திருத்த சிற்பி என்று புகழப்படும் ராஜாராம் மோகன்ராய் இத்தகைய இஸ்லாமியக் கலைக்கூடத்தில் பயின்றவரே.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

சங்குத்தவம் (சிறுகதை)

Loading

”இந்தக் காலத்தில் அறபியை மட்டும் படிச்சாப் போதுமா? உலகம் பூரா இங்கிலீஷ்காரன் தன்னோட பாஷையைத் திணிச்சி வச்சிருக்கான்… அதுலேர்ந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று மக்கள் கூடியிருந்த நிஜாமியா வளாகத்தில் நான் காலையில் முழங்கியபோது ஊர் மக்களுக்குக் கலககாரனாகத் தெரிந்தேன். ”கால் காசு படிப்புனாலும் இங்கிருந்து இராம்நாட் கிறிஸ்துவ ஸ்வார்ட்ஸ் ஸ்கூலுக்குத்தான் போகணும்” என்றேன்.

மேலும் படிக்க