babri masjid, gyanvapi masjid காணொளிகள் குறும்பதிவுகள் 

அன்று பாபர் மசூதி, இன்று ஞானவாபி மசூதி, நாளை..?

Loading

இன்று உத்தரப் பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் ஞானவாபி மசூதியைக் கட்டினார் என்று சொல்லி, அதற்கெதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்குக்கு எதிரான ஞானவாபி பள்ளிவாசல் நிர்வாகத்தின் மனுதான் நாளை விசாரணைக்கு வருகிறது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான 450 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 அன்று இந்துத்துவ பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. சரியாக 27 ஆண்டுகள் கழித்து, 2019 நவம்பர் 9ஆம் தேதி மசூதியைத் தகர்த்த அந்த இந்துத்துவ வன்முறை கும்பலிடமே மசூதி அமைந்திருந்த நிலம் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் பாஜக அரசை அறக்கட்டளை அமைத்து கோவில் கட்டிக்கொள்ளுங்கள் என்று ஒரு அநீதியான தீர்ப்பை வழங்கியது. 5 ஏக்கரில் முஸ்லிம்களுக்கு வேறொரு நிலம் ஒதுக்கப்பட்டது. கொடுமை…

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மானுட வாழ்வின் சுழற்சி: சூறத்துல் ளுஹாவின் ஒளியில்

Loading

மனித வாழ்வு கவலைகளால் மட்டுமோ அல்லது மகிழ்ச்சியால் மட்டுமோ சூழ்ந்ததல்ல. மாறாக அது கவலையும் மகிழ்ச்சியும் மாறிமாறி இடம்பெறும் வாழ்வியல் சுழற்சி. எதுவும் இங்கு நிலைக்கப்போவதில்லை. உண்மையில் வாழ்க்கை ஒரு சோதனையே எனும் குர்ஆனியக் கண்ணோட்டத்தை அத்தியாயம் அல்ளுஹாவின் ஒளியில் விளக்குகிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சவூதி அறபியா ஃபலஸ்தீனுக்கு முழு ஆதரவு வழங்காதது ஏன்?

Loading

1973ல் அறபு-இஸ்ரேல் போர் நடந்தபோது சவூதியை ஆட்சிபுரிந்த மன்னர் ஃபைசல் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தார். அது அவர்களுக்கு பொருளாதார ரீதியான அடியைக் கொடுத்தது. உலக அரங்கில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியது. இதுபோல் ஒரு சரியான, தாக்ககரமான நடவடிக்கையை MBS எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீன்-இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்தம்: விளைவுகள் என்ன?

Loading

இந்தத் தாக்குதல் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதைக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூற இது ஒன்றும் கிரிக்கெட் போட்டி அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இஸ்ரேல் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே உண்மை.

மேலும் படிக்க
கவிதைகள் முக்கியப் பதிவுகள் 

போராடும் ஃபலஸ்தீன மக்களுக்காக ஐந்து கவிதைகள் — பீட்டர்

Loading

1. “யுத்தம் நிறுத்து!” என்றபாப் மார்லியின் ‘ஒருநாள்’ பாடல்உலகமுழுதும் பரவுகிறது இப்போது;அதில் உண்மையின் கூறு உண்டு.ஆனால், இந்த நாட்டில் யார் தொடங்கியது போரை?எத்தனை ஆண்டுகள், எதற்காக?யார் நிறுத்துவது?வெறிகொண்ட சண்டைகளை போர் என்றுபெயர் இட்டு ஊதிவிட்டது யார் ?அமெரிக்காவின் இசுரேலைத்தான் கேட்க வேண்டும்.இதோ, ஏவுகணை வீச்சில்ஆஸ்பத்திரியை அழித்துஐந்நூறு பேரைக் கொல்லுதுஇனவெறி இசுரேல்.எரிந்துபோன பெண்கள்பீதியூட்டும் யுத்தக் காட்சி ;மண்ணை முத்தமிட்டு மரிக்கும் குழந்தைகள்பாசிசத்தின் யுத்த சாட்சி! 2. மண் எரிந்தாலும்நாட்டைவிட்டு ஓடமாட்டார் காஸா மக்கள்.இத்தனைக் காலமும் ஆதரவாய்அரபு மக்கள் நிற்பது எத்தனை உண்மையோஅரபு ஆட்சி அதிகாரம் கேட்காது என்பதும்பச்சை உண்மை.இனிமேலும் இது கையறுந்த திகைப்பல்ல,“எங்களைக் கொல்லஉங்களால் முடியாது!” என்றஎன் தாயின் கைதிறந்த சாபம்! 3. ”இனி இது தொடரக்கூடாது”சிறுவர்களின் எதிர்காலம் கேட்கிறது.2000-ல் சிறுவன் முஹம்மது அத்துரானி கொலை தொடங்கி“ஏவுகணையில் நாங்கள் சிக்குவது நிச்சயம்.எனது பொருளெல்லாம் நண்பர்களுக்கு” என்று தீட்டிவைத்தநேர்மை என்ற…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆணவத்திலிருந்து அவமானம் வரை: இஸ்ரேலை உலுக்கிய அந்த பத்து மணிநேரம்

Loading

இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் அதன் உளவு மற்றும் இராணுவத் துறைகளின் தோல்விக்கும் அப்பாற்பட்டது; இஸ்ரேலுக்கு இதுவோர் அரசியல், உளவியல் பேரழிவு ஆகும். வெல்ல முடியாத அரசு என்று மார்தட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, இத்தாக்குதல் அதன் பலவீனத்தையும் படுமோசமான இயலாமையையும் காட்டியுள்ளது. ஃபலஸ்தீனை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, மத்தியக் கிழக்கு பகுதிக்கு தன்னை புதிய தலைமையாக ஆக்கிக்கொள்வதற்கான அதன் திட்டங்களுக்கும் இது பேரிடியாய் அமைந்துள்ளது.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறை சீர்திருத்தங்களும் சில அபத்தங்களும்

Loading

வெறும் நெருக்கடியைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிலை, அவர்களின் உரிமைகுறித்து கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு

Loading

இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய நாடுகளைப் போல் அனைத்து மதங்களையும் விலக்குவது அல்ல; மாறாக அவ்வனைத்தையும் சமமாக நடத்துவது எனக் கூறப்பட்டு வந்தாலும் இங்கு ஏன் பெரும்பான்மையினரின் அடையாளங்கள் இயல்பாகவும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் சந்தேகக் கண்கொண்டும் பார்க்கப்படுகின்றன? இந்திய தேசியம் ‘உள்ளடக்கும் தேசியம் (Inclusive Nationalism)’ என்றால் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம் போன்ற வார்த்தைகள் சிறுபான்மையினரை மையப்படுத்தி இருப்பதன் தேவை என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாண, இருவேறு துருவங்களான தேசியம், அரசு ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன தேச அரசு எனும் கருத்தாக்கத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் அடிப்படைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டுரை அதைக்குறித்தான புதிய கண்திறப்பை நமக்கு கொடுக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளவுபட்டதில்லை முஸ்லிம் சமூகம்” - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலோ, அ.கலையரசன்

Loading

வட இந்தியாவில் சாதி அமைப்பானது இந்து, முஸ்லிம் சமூகத்தின் உட்பிரிவுகளுள் ஏற்படுத்தியுள்ள வர்க்க முரண்பாட்டை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சாதி அமைப்பின் குறைவான தாக்கத்தை இக்கட்டுரை நிறுவுகிறது. மேலும், முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் பாகுபாட்டைப் பயன்படுத்தி தனது வாக்குவங்கியை நிறுவ முயலும் பாஜகவின் தந்திரத்தை புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

மேலும் படிக்க
உரைகள் கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

முஃதஸிலா சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

Loading

இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் பகுத்தறிவு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய முஃதஸிலாகள் குறித்தான நேர்மறையான அணுகுமுறையை இக்கட்டுரை வழங்குகிறது. மேலும், குர்ஆன் படைக்கப்பட்டதா?, அல்லாஹ்வின் தன்மை போன்றவற்றில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளின் நியாயங்களையும் தெளிவுபடுத்துகிறது. ஒட்டுமொத்தமாக இக்கட்டுரை நமது வரலாற்றை முன்முடிவுகளுடன் கருப்பு-வெள்ளையாக அணுகாமல் அதன் நியாயங்களை புரிந்துகொள்வதனுடாக முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையை வேண்டிநிற்கிறது.

மேலும் படிக்க