All Posts
ஒரு காஸா குழந்தையின் உயில்!
![]()
“நான் உயிர்த் தியாகி ஆகிவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் இது எனது உயில்: எனக்காக நீங்கள் அழ வேண்டாம்; ஏனென்றால் உங்கள் அழுகை எனக்கு வலி தருகிறது. என் உடைகள் தேவையுடையவர்களுக்குக் கொடுக்கப்படும் என்று நம்புகிறேன். என் பொருட்கள் றஹஃப், சாரா, ஜூடி, லானா, பதூல் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். என்னுடைய மணிகளை அஹ்மதுக்கும் றஹஃபுக்கும் கொடுத்துவிடுங்கள். எனது மாதாந்திரத் தொகை 50 ஷெகல்களில் 25ஐ றஹஃபிற்கும், 25ஐ அஹ்மதுக்கும் கொடுக்க வேண்டும். என்னுடைய கதைப் புத்தகங்களையும் பாடப் புத்தகங்களையும் றஹஃபிற்கும், விளையாட்டுச் சாமான்களை பதூலிற்கும் கொடுத்துவிடுங்கள். என் சகோதரன் அஹ்மதைத் திட்ட வேண்டாம். தயவுசெய்து என்னுடைய இந்த விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.”
மேலும் படிக்கநவீன கருத்தியல்கள் மீதான விமர்சனம்
சூறத்துல் ஃபாத்திஹாவுக்கு ஒரு புதிய விளக்கவுரை
![]()
The Straight Path: How Surah al-Fatiha Addresses Modern Ideologies நூலில் நாஸிர் ஃகான், சூறத்துல் ஃபாத்திஹாவை பத்து பகுதிகளாகப் பிரித்து சமகாலத்தி்ல் குறிப்பிடத் தக்களவில் தாக்கம் செலுத்திவரும் கருத்தியல்களான நாத்திகம் (Atheism), பொருள்முதல்வாதம் (Materialism), இயற்கைச் சமயவாதம் (Deism), மதச்சார்பின்மைவாதம் (Secularism), பலகடவுள் கொள்கை (Polytheism), இயற்கைவாதம் (Naturalism), சார்பியல்வாதம் (Relativism), முற்போக்குவாதம் (Progressivism), தாராளவாதம் (Liberalism), பின்நவீனத்துவம் (Postmodernism) போன்றவற்றை விமர்சன ரீதியாகவும் ஆழமாகவும் பகுப்பாய்ந்து எழுதி்யுள்ளார்.
மேலும் படிக்கஒரு தமிழ் முஸ்லிமின் இலங்கைப் பயண அனுபவப் பதிவு (பகுதி 1)
![]()
தமிழக அரசியல் பண்பாட்டு சூழலில் இலங்கை முஸ்லிம்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி என்பது ஏன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களை பிற தமிழர்களோடு இணைத்து அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான். அத்தகைய கேள்வியின் அடியாக உள்ள அனுமானம் மத அடையாளத்திலிருந்து தனி தேசிய இன அடையாளம் உருவாக முடியாது என்று கருதுவதும்தான். இன அடையாளம் என்பது மதம், மொழி, பிரதேசம் போன்ற சமூக வித்தியாசங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழமைவுக்குள் உருவாகி வருவதே.
மேலும் படிக்கதாமிரப்பட்டணம்: தமிழ் எழுத்தில் எழுதப்படாத முதல் தமிழ் நாவல்
![]()
புகழ் வாய்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் பாரசீக எழுத்தாளரான பாக்கிர் யஸீது இப்னு மாலிக் அத்தாயி என்பவர் அறபி மொழியில் எழுதிய நெடுங்கவிதையொன்றைத் தழுவி ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் பெயர் கொண்ட நாவலை அர்வி அல்லது அறபுத் தமிழில் எழுதினார்.
மேலும் படிக்கசின்வாரின் கைத்தடி!
![]()
“உயிர்த் தியாகிகள் சிந்திய ரத்தத்திற்கு உண்மையாளர்களாக இருங்கள். சுதந்திரத்திற்காக பாதை அமைத்த அவர்களின் தியாகங்களை அரசியல் லாபங்களுக்காக வீணாக்கிவிடாதீர்கள். நமது முன்னோர்கள் தொடங்கியதை முடிப்பது நமது வேலை. விலை எவ்வளவு இருந்தாலும் இந்தப் பாதையை விட்டும் தவறிவிடாதீர்கள். இந்த நிலம் நமக்கு எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் இப்போதும் எப்போதும் உறுதியின் உறைவிடமாக காஸா இருக்கும்.” – யஹ்யா சின்வார்
மேலும் படிக்கவங்கதேசப் புரட்சி: சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மாணவர் எழுச்சி!
![]()
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பியோடி இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார். இப்போது அங்கு இடைக்கால அரசு அமைந்து அதில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் பொறுப்பேற்றிருக்கிறார். இவ்வளவு பெரிய மாற்றம் வங்கதேசத்தில் நிகழ்ந்ததற்குக் காரணமாக அமைந்தது அங்கே ஏற்பட்ட மாணவர் எழுச்சிதான்.
மேலும் படிக்ககலவர பூமியாக மாறிய பிரிட்டன்
![]()
மேற்குலகிலும் மற்ற பல நாடுகளிலும் வலதுசாரித் தீவிரவாதம்தான் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது. அரசியல், ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இளைஞர்களை மூளைச் சலவை செய்து வன்முறையைத் தூண்டுகின்றனர். இதற்கு எதிராக உலகம் முழுவதும் பலமான குரல் எழ வேண்டும். அந்தந்த நாடுகளில் இருக்கும் அரசுகள் வலதுசாரித் தீவிரவாதத்தை தனிக் கவனமெடுத்து முறியடிக்க வேண்டும். இனவாதத்தையும், இஸ்லாமிய வெறுப்பையும் முற்றாக வேரறுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நாடுகள் ‘உண்மையான வளர்ச்சி’யை நோக்கிச் செல்ல முடியும்.
மேலும் படிக்கஇஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?
![]()
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 10 மாதத்துக்குள் இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஃகஸ்ஸாவில் இருந்த அவரின் மூன்று மகன்களைக் கொன்றது இஸ்ரேல்.
இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாகியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்று பலருக்கும் கேள்வி இருக்கும். குறிப்பாக இதற்கு 4 காரணங்களைச் சொல்லலாம்.
மேலும் படிக்கஇஸ்மாயில் ஹனிய்யாவின் உயிர்த் தியாகமும், ஃபலஸ்தீனப் போராட்டத்தின் எதிர்காலமும்
![]()
ஜூலை 31 நள்ளிரவில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவுத் தலைவரும் ஃபலஸ்தீனின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹனிய்யா படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பு ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், ஹனிய்யாவை படுகொலை செய்தது இஸ்ரேல்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
மேலும் படிக்க