தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறையச்சமுடையோரின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

அல்லாஹ் அறிவித்த மறைவானவற்றின்மீது நம்பிக்கைகொள்வது மனிதன் அடையக்கூடிய உயர்ந்த நிலையாகும். தம் புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டுமே நம்பும் விலங்குகளின் நிலையைக் கடந்து புலனுணர்வுகளால் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த குறிப்பிட்ட அளவைவிட பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதை உணரும் மனிதனாகிறான். இது பிரபஞ்சத்தின் உண்மைநிலை குறித்து, தனது உண்மைநிலை குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படக்கூடிய ஆற்றல்களின் உண்மைநிலையைக் குறித்து, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலின் உண்மைநிலை குறித்து மனிதன் கொண்டுள்ள கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். அதேபோன்று இது பூமியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றமுமாகும். புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டும் நம்புவோரும் அகப்பார்வையோடும் ஆழ்ந்த ஞானத்தோடும் இந்தப் பிரபஞ்சத்தை அணுகுவோரும் சமமாக மாட்டார்கள். இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக முடியாது. அகப்பார்வையுடையோர் தங்களின் குறுகிய வாழ்நாளிலே புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றைவிடவும் இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது, விசாலமானது என்பதையும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் உண்மை இதனைவிட பெரியது என்பதையும் அதனிடமிருந்தே இது வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து கொள்வார்கள். இறைவனைக் குறித்த உண்மைநிலையை பார்வைகளால் அடைந்துவிட முடியாது. அறிவால் அறிந்துகொள்ள முடியாது.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 2)

நிச்சயமாக உறுதியான அடிப்படைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட கண்ணோட்டம் மிக அவசியமானது. அது எல்லாவற்றையும் அறிந்த, தான் நாடியதைச் செய்யக்கூடிய ஒருவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். அவன் வாழ்க்கையின் எல்லா தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்கக் கூடாது. இச்சைகளோ தாக்கங்களோ அவன் வகுத்த மதிப்பீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அது முழுக்க முழுக்க அவசியமானதாக, பாதுகாப்பானதாக, இயல்பான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதாக, நிலையான மையத்தைச் சுற்றி இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது நேரான, பாதுகாப்பான, நிலையான நோக்கத்தை அடையும் இயக்கமாக இருக்க வேண்டும். அதுதான் சீரான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 1)

மனிதன் இந்தப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்டுள்ளான் என்பது என்றும் மாறாத உண்மை. அதில் அவன் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான். பூமியை உழுது விவசாயம் செய்யக்கூடியவனாக வெளிப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சூழலும் அனுபவமும் அந்தக் கட்டத்தில் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக விவசாயத்தையே ஆக்கியது. அதேபோல் அவன் அணுவைப் பிளப்பவனாக, பிரபஞ்சத்தின் இரகசியத்தை கண்டறிவதவதற்காக செயற்கைக்கோளை அனுப்புபவனாக வெளிப்படுகிறான். இதுவும் அதுவும் இவற்றிற்கு இடையிலுள்ளவையும் இவற்றிற்கு பின்னால் வரக்கூடியவையும் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தின் வெவ்வேறு வடிவங்கள். அவை எப்போதும் கூடுதலுக்கும் விசாலத்திற்கும் உட்பட்டவை. ஆனால் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட கிலாஃபா – பிரதிநிதித்துவம் எந்நிலையிலும் மாறாதது. அதன் மாறாத தேட்டம், மனிதனுக்கும் இறைவன் வகுத்த வழிமுறைப்படி அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திற்குமிடையே எதுவும் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதையும் இந்தப் பூமியில் மனிதனின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வண்ணம் அவனைவிட எதுவும் உயர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த உலகிலுள்ள எல்லா பொருள்களையும்விட மனிதனே உயர்ந்தவனாவான். அவனே அவற்றிற்குத் தலைவனாவான்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 5) – சையித் குதுப்

‘இயற்கை’ என்றால் என்ன? அது இந்த பிரபஞ்சத்தின் பருப்பொருளா? இந்தப் பருப்பொருளின் உண்மைநிலை என்ன? அவர்கள் பருப்பொருள் என்று கூறுவதை நிலையான ஒன்றாக எண்ணினால் அதன் உண்மை நிலையை வரையறுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கும். பருப்பொருள் குறைகிறது, அதிகரிக்கிறது எனில் அதிகரிப்பதுதான் இயற்கையா? அதுதான் பருப்பொருளா? அல்லது இந்த அதிகரிப்பு நிகழும் வடிவம்தான் பருப்பொருளா? இந்தக் கடவுள் ஒரு நிலையில் நிலைத்திருப்பதில்லை! அவர் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறார், முன்னேறுகிறார்! இவற்றில் எந்த நிலையில் அது மனித அறிவைப் படைக்கும் திறனைப் பெறும்? அதுதான் தன் வடிவத்தை என்றும் இயங்கக்கூடியதாகப் படைத்துள்ளதா? கதிர்களிலிருந்து அணுவை நோக்கி, அணுவிலிருந்து பருப்பொருளை நோக்கி… அணுவிலிருந்து கதிர்களை நோக்கி! இந்தக் கடவுள் எப்போது படைக்கும் திறனைப் பெற்றது? எந்த நிலையில்? எவனது அறிவை இயற்கை படைத்ததோ அந்த மனிதனைப் படைத்தது யார்? அந்த இயற்கை ஆரம்பத்திலேயே அதனைப் படைத்ததா? அல்லது அவனது இருப்பிற்குப் பின்னர் அவனது அறிவைப் படைத்ததா?

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 4) – சையித் குதுப்

மனிதன் இறைவனிடமிருந்து பெற்ற இஸ்லாமியக் கண்ணோட்டம் தூய அருட்கொடையாகும். அது அறியாமைமிகுந்த, பலவீனமான மனிதனை பலனில்லாமல் வீணாகக் களைப்படைவதிலிருந்து காப்பாற்றி அவனது ஆற்றல்களை அவனுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான பணிகளில் பயன்படச் செய்தது. அந்த அருட்கொடையை மனிதனுக்கு வழங்கிய இறைவன் அதையே அவனுக்கு ஆதாரமாக, அளவுகோலாக ஆக்கியுள்ளான். அது, மனிதன் அதனைப்பெற்று அதனடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன் வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் அதனையே அளவுகோலாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான். ஆனால் மனிதர்கள் இந்த அருட்கொடையை விட்டுவிட்டதனால் வழிகெட்டுத் தடுமாறித் திரிந்தார்கள். சிரிப்பூட்டக்கூடிய, அழுகையை உண்டாக்கக்கூடிய கண்ணோட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்கினார்கள். அவை அவர்களின் வாழ்வை சீர்குலைத்ததோடு பெரும் குழப்பத்திலும் காரிருளிலும் அவர்களைத் தள்ளிவிட்டன.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 3) – சையித் குதுப்

மனிதன் பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிக்கேற்பவே அவன் படைக்கப்பட்டுள்ளான். (பூமியில் இறைவனின் பிரதிநிதியாகச் செயல்படுவதே அவன் ஆற்ற வேண்டிய பணியாகும்) பொருள்களின் விதிகளை அறிந்து அவற்றை வசப்படுத்துவதில் மனிதன் முன்னேறிச் செல்கிறான். ஆனால் அதேபோன்று அவனால் தன்னைக்குறித்த உண்மைநிலையை அறிந்துகொள்ள முடியவில்லை. மனிதப் படைப்பின் இரகசியங்கள், வாழ்வு மற்றும் மரணம் குறித்த இரகசியங்கள் மறைவாகவே உள்ளன. அவற்றைக்குறித்து சிறிதளவுகூட அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

அல்பகறா (பசுமாடு) அத்தியாயம் – முன்னுரை (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

அன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிரமங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அல்பாத்திஹா: ஆரம்பம் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

அல்லாஹ்வைக்குறித்து, அவனது பண்புகள் குறித்து, அவன் படைப்புகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து சரியான கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதற்கு இஸ்லாம் மேற்கொண்ட நீண்ட நெடிய முயற்சியை திரும்பிப் பார்ப்பவர் – குர்ஆனின் வசனங்கள் இந்த முயற்சியை படம்பிடித்துக் காட்டுகின்றன – மனித சமூகத்தில் மண்டிக்கிடந்த தவறான கொள்கைகள், தீய கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் குவியல்களை அறியாமல் இஸ்லாம் மேற்கொண்ட இந்த நீண்ட நெடிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியாது. அந்தக் குவியல்களை ஆராய்ந்து பார்ப்பது இந்த முயற்சியின் அவசியத்தைத் தெளிவுபடுத்தும். மனிதனின் மனதை இத்தகைய பல்வேறு வகையான கடவுள்கள், கண்ணோட்டங்கள், யூகங்கள், புராணங்கள் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு இஸ்லாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதும் தெளிவாகும்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

திருக்குர்ஆனின் நிழலில் – முன்னுரை

திருக்குர்ஆன் ஓர் நித்தியத்துவப் பிரதி. அருளப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா விரிவுரைகள் அதற்கு. உலகம் சுழன்று கொண்டிருக்கும் வரை அவை தொடர்ந்த படியேதான் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில். அற்புதமான தரிசனங்களை தந்தபடியே இருக்கும். மனிதன் தனது சிந்தனை என்ற பிஞ்சுக் கைகளால் இறைஞானப் பெருங்கடலை அள்ளிப்பருகி விடுவதற்கான அசாத்திய முயற்சி. இலக்குகளை அடையுந்தோறும் நீண்டுகொண்டே செல்லும் முடிவுறாப் பயணம். அத்தகைய திருக்குர்ஆன் வியாக்கியான மரபில் சையித் குதுபின் ‘திருக்குர்ஆனின் நிழலில்’-க்கு மறுக்கமுடியாத ஓர் இடம் எப்போதும் உண்டு. முன்முடிவுகளின்றி காலியான திறந்த மனத்தோடு திருக்குர்ஆனுடன் உரையாடி, உறவாடி அவர் தன் நெஞ்சத்தில் நிரப்பிக் கொண்ட ஒளியை ஏனைய மனிதர்களோடு பகிர்ந்துகொள்ள எடுக்கப்பட்ட பிரயத்தனத்தில் உதித்த இந்த தஃப்சீரை அழகுற தமிழுக்கு பெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம், வல்ல இறைவனின் உதவியை மட்டுமே நம்பி….

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 2) – சையித் குதுப்

மனிதச் சிந்தனை இந்தக் கண்ணோட்டத்தை உருவாக்காவிட்டாலும் அது மனிதனின் செயல்படும் தளத்திற்கு எதிரானதல்ல. அதனைப் பெற்று அதனடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே மனிதனின் பணி. நாம் ஏற்கனவே முன்னுரையில் குறிப்பிட்டவாறு இதனை தீர்மானிக்கப்பட்ட வேறு வகையான மதிப்பீடுகளைக்கொண்டு மதிப்பிடவோ வேறொரு கண்ணோட்டத்தைக்கொண்டு அணுகவோ முடியாது. மனிதன் தனக்குத் தேவையான மதிப்பீடுகளையும் அளவுகோல்களையும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டே அவன் தன்னைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையான விசயங்களை அவன் இறைவேதத்திலிருந்தே பெற வேண்டும். வேறு எந்த ஒன்றிலிருந்தும் அவற்றைப் பெறக்கூடாது. இது ஒன்றே அவனது நிகழ்கால வாழ்க்கையில் அவன் காணும் சிந்தனைகள், கண்ணோட்டங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கான அளவுகோல். இதன்மூலம் அவன் சரியானதையும் தவறானதையும் அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க