கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

றமளான்: நம்பிக்கையின் மாதம்!

றமளான் மாதம் முழுவதும் தராவீஹ் தொழுகும் முஸ்லிம்களுள் பலர் மற்ற நாட்களில் பள்ளிவாசல்களில் நுழைவதுகூட அரிதாகிப்போவது ஏன்? முஸ்லிம்கள் றமளான் முழுவதும் நோன்பிருக்கிறார்கள்; அவர்களில் எந்த ஒருவரும் ஏன் தனிமையில் இருக்கும்போதுகூட உணவருந்துவதோ தண்ணீர் பருகுவதோ இல்லை? மற்ற நாட்களில் குர்ஆனைத் திறந்தும் பார்க்காத பலரால் எப்படி றமளானில் தினமும் அதை ஓத முடிகிறது?

மற்ற நாட்களில் இல்லாத வகையில் முஸ்லிம்களிடையே றமளானில் நிகழும் இப்படியான மாற்றம் வியப்பூட்டக்கூடியது. அந்த மாற்றம் அற்புதமானதும் அழகானதும்கூட! உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் றமளான் மாதத்தில் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் வணக்க வழிபாடுகளை அதிகரிப்பதிலும் பிரார்த்தனைகளின் மூலம் தங்களின் இறைவனது நெருக்கத்தை அடைய முயற்சிப்பதிலும் மிக அதிகமாக ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். அதேபோல், பாவச் செயல்களிலிருந்து விலகி தவ்பா செய்து இறைவனது பக்கம் மீள முயல்வதையும் நாம் கண்கிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 7

மனிதர்களில் ஒவ்வொருவரையும் ஒருவகையில் அவர் இன்ன இயல்பினர், அவருக்கு இன்னின்ன தனித்தன்மைகள், பலவீனங்கள் இருக்கின்றன, அவர் இப்படித்தான் செயல்படுவார் என்றெல்லாம் மிக எளிதாக வகைப்படுத்திவிடலாம். இந்த வகையில் நாம் அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை சரியாகக் கணிக்கலாம். ஆனால் இன்னொரு வகையில் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். சில சமயங்களில் அவர்கள் நம் கணிப்புகளை, எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடுவார்கள். அவர்களின் சில செயல்பாடுகள் நம்மை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லலாம் அல்லது பேரதிர்ச்சியில் ஆழ்த்தலாம். இந்த வகையில் மனிதன் ஒரு புரியாத புதிர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே -3

எது மனிதனை அதிகம் அச்சுறுத்துகிறதோ, எதை அவன் அதிகம் விரும்புகிறானோ, எதை அவன் அதிகம் வெறுக்கிறானோ அவற்றைப் பற்றியெல்லாம் அவன் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கிறான். பேசிப் பேசி விருப்பையும் வெறுப்பையும் தீர்த்துக் கொள்கிறான்; அச்சத்திலிருந்து விடுபட முனைகிறான். பேச்சு ஒன்றுதானே மிக இலகுவான வழி.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 2

ஒரு ஆன்மா தனக்கு ஒத்திசைவான, தனக்குப் பிரியமுள்ள இன்னொரு ஆன்மாவிடம் மொழியின்றி பேசுகிறது. அது என்ன சொல்ல, என்ன செய்ய விரும்புகிறது என்பதை சொல்லாமலேயே அறிந்துகொள்கிறது. நாம் பேசும் மொழி நம் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம். பல சமயங்களில் அது உள்ளத்திற்கு மாற்றமானவற்றையும் வெளிப்படுத்துகிறது. உள்ளத்தின் மொழி அப்படியல்ல. அது உள்ளதை உள்ளபடியே உணர்த்திவிடும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 1

ஆன்மிகத்தின் மையமே மனம்தான். மனதை ஒருமுகப்படுத்துவதற்கு, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அது ஒன்றே மிகச் சிறந்த வழி. லௌகீகம் கலக்காத உண்மையான ஆன்மீகம் உங்கள் ஆன்மாவுக்கான ஒத்தடம். உங்களின் ஆன்மா உயர வேண்டுமெனில் அது தேவையற்ற கவலைகளிலிருந்தும் பயங்களிலிருந்தும் விடுபட வேண்டுமெனில் அது நிம்மதியை உணர வேண்டுமெனில் ஆன்மீகத்தின் பக்கம் அடைக்கலம் ஆவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தற்கொலை

இறைநம்பிக்கையாளர்கள் இறைவன் மீது எந்தச் சமயத்திலும் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். இந்த நம்பிக்கை மிக எளிய நம்பிக்கைததான் என்றாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் வலுவானது. இதுபோன்ற நம்பிக்கைகளே வாழ்க்கையே அழகுபடுத்தும். அதனை எளிதாகக் கடப்பதற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

சத்தியத்தைக் கண்டடைதல்

சத்தியத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை ஒருவனின் உள்ளத்தை ஆக்கிரமித்துவிட்டால் அவன் அதற்காக எதையும் இழக்கத் தயாராகி விடுகிறான். அவனுடைய பதவி, புகழ், செல்வம் மற்றும் அவன் அனுபவிக்கும் இன்னபிற உலகியல் வசதிகள் யாவும் அவனுக்கு அற்பமானவையாக மாறிவிடுகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மனிதனின் இயலாமை வெளிப்படும் தருணம்

வேகத்தடைகள் நம் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அவை வேகத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடாமல் நம்மைக் கட்டுப்படுத்தி வேகத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன. நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களும் அவை போன்றவைதாம். அவை நம் கர்வத்தைக் கட்டுப்படுத்துகின்றன. நம்மைப் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கும் அந்தப் பேராற்றலை நமக்கு நினைவூட்டுகின்றன. வாழ்க்கையின் அலுவல்களில் மூழ்கி நம்மை நாமே தொலைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவைதாம் நம்மை மீட்டுக் கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

ஈமானும் ஈமானிய அனுபவங்களும்

ஈமானிய அனுபவங்கள் என்று நான் குறிப்பிடுவது இறைவனின் உதவியை, அருகாமையை, தோழமையை, கண்காணிப்பை, பராமரிப்பை ஆற்றலை, அவன் அமைத்த நியதிகளை நம்பிக்கையாளன் உணர்வதாகும். அவன் எந்த நிலையிலும் உதவியின்றி கைவிடப்படமாட்டான். அவன் எதிர்பாராத, அறியாத புறத்திலிருந்து அவனுக்கு உதவிகள் வந்துகொண்டேயிருக்கும். இக்கட்டான, சிரமமான சூழலில்கூட வெளியேறுவதற்கு மிக இலகுவான வழியை அவன் பெறுவான். இறைசார்ந்த வாழ்க்கையில் மட்டுமே இத்தகைய அனுபவங்கள் சாத்தியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பமும் இஸ்லாமிய இயக்கமும்

சாத்வீகமான, அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் ஆரம்பத்தில் கோமாளிகளாக, கோழைகளாக சித்தரிக்கப்பட்டலாம். ஆனால் பிற்பாடு அவர்கள்தாம் நிலைத்திருப்பார்கள். அறிவுப்பூர்வமான எதுவும் நீண்ட தர்க்கத்திற்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்படும். உணர்ச்சிகளைத் தூண்டுபவர்கள் உடனடி விளைச்சல்களை அறுவடை செய்யலாம். ஆனால் அவர்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது.

மேலும் படிக்க