கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்

Loading

இந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கும்பல் கொலைகளை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

Loading

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

Loading

இன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன?

Loading

1.”வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் தேசத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.
2. இந்தப் போராட்டங்களின் பின்னின்று இயக்குவது NGO-க்கள்.
3.அந்நிய சக்திகள் NGO-க்கள் மூலம் இதைச் செய்கின்றன.

இந்தக் கருத்து அந்த இதழில் ‘வணிகம்’ பற்றிப் பேசுகிற பக்கம் ஒன்றில் இன்று அவசர அவசரமாக வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன?

இந்தியாவில் செயல்படும் எந்த அமைப்பின் கருத்து இது?

இதை இப்போது யார் அதிகம் பேசிக் கொண்டுள்ளனர்?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எண்வழிச் சாலை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு முதலான “வளர்ச்சித் திட்டங்களை” எதிர்க்கிறவர்கள் யார்? எதிர்க்கிறவர்களைச் சமூக விரோதிகள் எனச் சொல்பவர்கள் யார்?

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தலித்கள் ஏன் சாதி அடையாளத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும்?

Loading

‘இந்து’ எனும் சமூக அடையாளத்துக்குள் நம்மை மூழ்கடிப்பதே அவர்களின் நோக்கம். அந்த அடையாளத்தின் தலைமையாகவும் குரலாகவும் அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்வார்கள். ஆம், தலித்களை இந்துமயப்படுத்தியே தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் தீவிர (ரேடிகல்) தலித்களும், பழங்குடிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்து அடையாளத்தை மறுக்கவும் எதிர்க்கவும் செய்கிறோம். உண்மையில் நாம் இந்துக்களல்ல. பிறகு ஏன் நாம் அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்? நம் சொந்த அடையாளங்களை நாம் ஏன் இழக்கவேண்டும்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்

Loading

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்துத்துவவாதிகளுக்கு அமைப்பு பலம் இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தமிழ் வெகுஜனங்கள் இந்துத்துவத்தோடு முரண்படும் அவசியம் இருப்பதால் பிஜேபி எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கெனவே மேலாண்மையில் இருக்கும் கருத்தியலுக்கு உட்படாது ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பான Radical ஆன விவாத விதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கும் பெரியார் மரபும் இங்கு இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

காந்தி கொலைக்கான காரணம் என்ன?

Loading

“காந்தியின் எதிரிகள் யார் என்கிற கேள்விக்கு இன்றைய இளைஞர்கள் குறிப்பாக இயக்கங்கள் சார்ந்த இளைஞர்களின் பதில்கள் பல உண்மைகளைக் கணக்கில் கொள்ளப்படாமல் சொல்லப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இவர்கள் உருவாக்கக்கூடிய பட்டியலில் அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி எதிர்ப்பு போராளிகள், கம்யூனிஸ்டுகள், பிரிட்டிஷ் ஆட்சி என்கிற வரிசையின் இறுதியாகவே இந்துத்துவவாதிகள் அமைவர். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. வரிசையைத் தலைகீழாக மாற்றிப்போட்டாக வேண்டும். இந்துத்துவவாதிகள் என்கிற சற்றே அகன்ற அரசியல் அடையாளத்தைக் காட்டிலும் வருணாசிரமிகள், பார்ப்பனர்கள் என்றே காந்தி எதிர்ப்பாளர்களின் பட்டியல் தொடங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகள் எல்லாம் காந்தி எதிர்ப்பாளர்களே ஒழிய, காந்தியைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடுமையாக விமர்சித்தவர்களே ஒழிய காந்தியின் எதிரிகள் அல்லர்.”

– அ. மார்க்ஸ்

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்

Loading

சிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்!

Loading

எது புரட்சி? மாற்றத்தைத் தருவது தானே புரட்சி? தீண்டப்படாத மக்களைப் பொருத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது. ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்

Loading

பக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.

மேலும் படிக்க