குறும்பதிவுகள் 

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்

Loading

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும். சலிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றும். ஓரிடத்தில் தேங்கிவிட்டால் விரைவில் அழுக்கடைந்து விடுவோம். வாழ்க்கையின் அலுவல்கள் நம்மை தின்னத் தொடங்கிவிடும். ஆழமான வாசிப்பு நம் அறியாமையை நமக்கு உணர்த்துகிறது. மேம்போக்கான வாசிப்பு நம்மை செருக்கில் ஆழ்த்துகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

காவல்துறை ரவுடிசம் செய்தால் பரவாயில்லையா?

Loading

இதைவிட பன்மடங்கு கோர முகம் காவல்துறைக்கு உண்டு. தூத்துக்குடியையும் மெரினா போராட்டத்தையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தானே? அப்பாவித்தனமாக காவல்துறையின் வரம்புமீறலை நியாயப்படுத்தாதீர்கள். நீதிமன்றம், சட்டம் எல்லோருக்குமானது. இதில் காவல்துறைக்கு விதிவிலக்கு கிடையாது. குடிமக்கள் மட்டுமல்ல போலீஸ்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் அது ரவுடிசம்தான்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் கண்டிக்கத்தக்கப் பேச்சு!

Loading

தலித்களுக்கு எதற்காக ஒரு அரசியல் கட்சி? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் பாமக போன்ற சாதியக் கட்சிகளே பலனடைகின்றன. எனவே அது ஒரு ‘மைய நீரோட்ட’ கட்சியின் தலைமையை ஏற்று அதனுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். நிலவுகிற அரசியல் சூழலில் இப்படியெல்லாம் ஒடுக்கப்படும் தரப்பிடம் ஒருவர் அபத்தமாக அட்வைஸ் செய்தால் அவற்றை நாம் ஏற்போமா?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மசோதாக்களை எதிர்த்து வாக்களிக்கும் துணிச்சல் திமுகவுக்கு இருக்கிறதா? – திருமுருகன் காந்தி

Loading

வாக்களிப்பது என்பது ஆவணபூர்வமாக அதைப் பதிவு செய்வதாகும். ஆனால், அந்தப் பதிவை திமுக செய்யவில்லை. பாஜக-வுக்கு அது முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வரலாற்றில் பதிவாகும். அதையே நாங்களும் குற்றம்சாட்டுகிறோம். அடுத்து UAPA மசோதா வரப்போகிறது. என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்?

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விமர்சனமும் பாராட்டும் சாதாரணமான விசயங்களா?

Loading

விமர்சனம் செய்வதும் பாராட்டுவதும் சாதாரணமான விசயங்கள் அல்ல. விமர்சனம் ஒரு மனிதனின் தவறுகளை அடையாளம் காட்டுகிறது. அவனைப் பண்படுத்துகிறது. அதன் மூலம் அவன் செம்மையாக்கப்படுகிறான். பாராட்டு அவனை ஊக்கப்படுத்துகிறது. அவனது பாதையில் கிடக்கும் தடைகளைத் தாண்டும் உத்வேகத்தை அவனுக்கு அளிக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அறிவுரையும் சட்டமும்

Loading

இஸ்லாம் சொல்லக்கூடிய போதனைகள் மனித இயல்புக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர்கிறேன். ஒரு மனிதன் முன்முடிவுகளின்றி, அரசியல் நிலைப்பாடுகளின்றி திறந்த மனதோடு அவற்றை உள்ளபடியே அணுகினால் அவை அவன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விவகாரத்திற்கும் அப்படியே கச்சிதமாக பொருந்தக்கூடியவையாக இருப்பதை உணர முடியும். இது இஸ்லாம் இறைமார்க்கம் என்பதற்கான சான்றுகளில் ஒன்று.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

புனைவுகள் என்னும் பெருவெளி

Loading

கதைகள், நாவல்கள் வழியாக நாம் மனிதர்களையே வாசிக்கிறோம். மனிதனின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், அவனுடைய புறச்சூழல்கள், அவை அவனுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அவனுடைய அகத்திலும் புறத்திலும் அவன் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவனுடைய மன அவஸ்தைகள், அவனுடைய இலட்சியவாத கனவுகள், அவன் நிகழ்த்த விரும்பும் சாகசங்கள், அவனுடைய இயல்புகள் ஆகியவை கதைகள், நாவல்களின் வழியாகவே மிகக் கச்சிதமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்த இடத்தில்தான் கதைகளும் நாவல்களும் வெறுமனே புனைவுகள் என்பதைத் தாண்டி அவை மனித வாழ்வை வாசிப்பதற்கான மகத்தான பொக்கிஷங்கள் என்ற அடிப்படையில் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

குற்றவுணர்வு என்ன செய்கிறது?

Loading

மனிதனின் அகத்திற்கும் புறத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அகத்தில் உள்ளதே புறத்திலும் வெளிப்படும். நாவு சொல்லும் பொய்யையும் புறத்தோற்றம் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவரது முகத்தைப் பார்த்தே அவர் உண்மையாளரா, பொய்யரா என்பதை நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள முடியும். பல சமயங்களில் ஒருவரது முகத்தைப் பார்த்தே நாம் அவரைக் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆன்மாவின் வெளிச்சமும் இருளும் அவரது முகத்திலும் பிரதிபலிக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மனிதனின் இயலாமை வெளிப்படும் தருணம்

Loading

வேகத்தடைகள் நம் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அவை வேகத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடாமல் நம்மைக் கட்டுப்படுத்தி வேகத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன. நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களும் அவை போன்றவைதாம். அவை நம் கர்வத்தைக் கட்டுப்படுத்துகின்றன. நம்மைப் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கும் அந்தப் பேராற்றலை நமக்கு நினைவூட்டுகின்றன. வாழ்க்கையின் அலுவல்களில் மூழ்கி நம்மை நாமே தொலைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவைதாம் நம்மை மீட்டுக் கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

ஈமானும் ஈமானிய அனுபவங்களும்

Loading

ஈமானிய அனுபவங்கள் என்று நான் குறிப்பிடுவது இறைவனின் உதவியை, அருகாமையை, தோழமையை, கண்காணிப்பை, பராமரிப்பை ஆற்றலை, அவன் அமைத்த நியதிகளை நம்பிக்கையாளன் உணர்வதாகும். அவன் எந்த நிலையிலும் உதவியின்றி கைவிடப்படமாட்டான். அவன் எதிர்பாராத, அறியாத புறத்திலிருந்து அவனுக்கு உதவிகள் வந்துகொண்டேயிருக்கும். இக்கட்டான, சிரமமான சூழலில்கூட வெளியேறுவதற்கு மிக இலகுவான வழியை அவன் பெறுவான். இறைசார்ந்த வாழ்க்கையில் மட்டுமே இத்தகைய அனுபவங்கள் சாத்தியமாகும்.

மேலும் படிக்க