கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 1

Loading

ஆன்மிகத்தின் மையமே மனம்தான். மனதை ஒருமுகப்படுத்துவதற்கு, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அது ஒன்றே மிகச் சிறந்த வழி. லௌகீகம் கலக்காத உண்மையான ஆன்மீகம் உங்கள் ஆன்மாவுக்கான ஒத்தடம். உங்களின் ஆன்மா உயர வேண்டுமெனில் அது தேவையற்ற கவலைகளிலிருந்தும் பயங்களிலிருந்தும் விடுபட வேண்டுமெனில் அது நிம்மதியை உணர வேண்டுமெனில் ஆன்மீகத்தின் பக்கம் அடைக்கலம் ஆவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வாழ்க்கையும் வலிகளும்

Loading

தர்க்கங்களால் சூழப்படாத எளிய நம்பிக்கையே சிறந்தது. அது ஒரு சிறு குழந்தை தன் தாயின் மீது வைக்கும் நம்பிக்கையைப்போல. உண்மையில் அதுதான் சரியான நம்பிக்கையும்கூட. அனைத்து அதிகாரங்களும் அவன் கைவசம்தானே உள்ளது. நம்மிடம் இருப்பவைகூட நம் அனுமதிகொண்டு இயங்குபவை அல்லவே. நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்போது காப்பாற்றுபவன் அவனே. நாம் நோயுற்றால் குணமளிப்பவனும் அவனே. அவனைத் தவிர வேறு எங்கும் நமக்கு அடைக்கலம் இல்லை என்பதை நம் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

கருத்து மோதல்கள்

Loading

எல்லாவற்றையும் எதிர்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. முட்டி மோதி நாம் சரியானவற்றை அடையலாம். தகுதியானவை நிலைபெறுகின்றன. மற்றவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. கருத்துகள் மாறக்கூடியவை. அவை கால, இட சூழல்களுக்கேற்ப மனநிலை அடையும் மாற்றங்களுக்கேற்ப மாறிக்கொண்டேயிருக்கின்றன. கருத்துகளோடு நம் ஈகோவை கலந்துவிட்டால், அவற்றை அரசியல் நிலைப்பாடுகளாக மாற்றிவிட்டால் அவற்றிலிருந்து விடுபடுவது கடினம். அப்போது அவை நம்மை சிறைப்படுத்தும் சிறைச்சாலைகளாக மாறிவிடுகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நினைவலைகளும் புதுப்புது அனுபவங்களும்

Loading

எல்லாம் ஒரு கனவுபோல நிகழ்ந்துவிடுகின்றது. கனவுக்கும் நிஜத்திற்கும் மத்தியிலுள்ள மெல்லிய திரை சில சமயம் அகற்றப்பட்டுவிடுகிறது. நாம் எதிர்பார்க்காதவற்றையும் வாழ்வு கொண்டு வந்துவிடுகிறது. எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்கள் சில சமயங்களில் நம் கண்ணோட்டங்களைக்கூட மாற்றிவிடுகின்றன. வாழ்வு அதன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. நாம் வலுக்கட்டாயமாக அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தர்க்கத்திற்கு அப்பால்

Loading

கனவுகள் எப்படி தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவையோ அப்படித்தான் நம் வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்வுகளும். அப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளத்தான் செய்வார்கள். பெரும்பாலோர் அவற்றை கவனிப்பதில்லை அல்லது அவற்றைக் குறித்து சிந்திப்பதில்லை. மிகச் சிலரே அவற்றிற்குப் பின்னாலிருக்கும் மறைகரம் குறித்து சிந்திக்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பொறாமையும் அகங்காரமும்

Loading

மனதின் பேராசையையும் அகங்காரத்தையும் வெல்வதுதான் ஆன்மீகத்தின் நோக்கம். நம்மைச் செயல்படத் தூண்டும் காரணிகளாக இருக்கும் அகங்காரத்தையும் பேராசையையும் அகற்றி அந்த இடத்தில் இறைதிருப்தியை அமர வைப்பதுதான் இஸ்லாம் கூறும் ஆன்மீகத்தின் நோக்கம். இந்த நிலைதான் மனிதன் ஆன்மீகத்தின் உச்ச நிலை. இறைதிருப்தியே அவனை செயல்படத் தூண்டுகிறது. அகங்காரமோ பேராசையோ அல்ல. நாம் அகங்காரத்திற்கு முன்னால்தான் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறோம். பணிவுக்கு முன்னால் அகங்காரத்தை வெளிப்படுத்த மாட்டோம். புகழை விரும்பாதவர்களை நாம் புகழ்வதும் புகழ்வெறி கொண்டவர்களை நாம் சிறுமைப்படுத்த எண்ணுவதும் இதனால்தான். நம்முடைய செயல்பாடுகளுக்குப் பின்னால் இறைதிருப்தி இருந்தால் மட்டுமே நாம் ஒத்திசைந்து செல்ல முடியும். ஒரு அகங்காரம் இன்னொரு அகங்காரத்தை சகித்துக்கொள்ளாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

இந்துத்துவமும் பொதுஎதிரி கண்ணோட்டமும்

Loading

மதத்தின் துணைகொண்டே பிராமணர்கள் இந்திய மக்களிடைய ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் தங்களின் மதத்தின் வழியாகவே தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டினார்கள். குலதெய்வ வழிபாட்டைத் தவிர மதம் குறித்து எந்தவொரு நிலையான கண்ணோட்டத்தையும் கொண்டிராதவர்களிடம் தங்களின் மதமே அனைவருக்கும் உரிய மதம் என்ற சிந்தனையை பரப்பியதில் அவர்கள் பெருமளவு வெற்றி கண்டார்கள் என்றே தெரிய வருகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மரணம் என்னும் எதார்த்தம்

Loading

மரணம் பற்றிய நினைவு வாழ்வின் மீதான பற்றைக் குறைக்கிறது. வாழ்வின் எதார்த்தத்தைப் புரிய வைக்கிறது. அதனைப் புரிந்துகொண்ட மனிதன் கிடைத்திருக்கும் குறுகிய வாழ்வை சரியான முறையில் வாழவே விரும்புவான். அதனால்தான் நபியவர்கள் தம் தோழர்களுக்கு மீண்டும் மீண்டும் மரணம் குறித்து நினைவூட்டிக் கொண்டேயிருந்தார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அதிகாரமும் அநியாயமும்

Loading

அதிகாரம் இடம்பெயரக்கூடியது. அது யாரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருக்காது. இன்று ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் நாளை ஒடுக்கப்படுபவர்களாக மாறலாம். இன்று ஒடுக்கப்படுபவர்கள் நாளை ஆட்சியாளர்களாக மாறலாம். அதிகாரம் எப்படி பறிக்கப்படுகிறது? அது எப்படி கைமாறுகிறது? என்பதின் உண்மைநிலையை நாம் அறிய மாட்டோம். வெளிப்படையான காரணங்களை நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அவைதாம் உண்மையான காரணிகளாக இருக்குமானால் ஒடுக்கப்படுபவர்கள் எப்போதும் ஒடுக்கப்படுபவர்களாக, ஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

உறவுப் பாலத்தின் அடித்தளம்

Loading

உறவுகள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிலைபெறுகின்றன. அந்த நம்பிக்கையில் விழும் சிறு கீறல்கூட அடித்தளத்தை ஆட்டம்காணச் செய்துவிடும். நம்பிக்கைத் துரோகம் ஒட்டுமொத்தமாக கட்டடத்தையே தகர்த்துவிடும். உறவுகளின் வழியேதான் நாம் வாழ்க்கையை சலிப்பின்றி, வெறுமையின்றி, பயமின்றி பாதுகாப்புணர்வோடு கடந்து செல்ல முடியும். தனிமையுணர்வும் வெறுமையும் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடக்கூடியவை. அவை நம் வாழ்வை அர்த்தமற்றதாக ஆக்கிவிடக்கூடியவை.

மேலும் படிக்க