குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தற்கொலை

Loading

இறைநம்பிக்கையாளர்கள் இறைவன் மீது எந்தச் சமயத்திலும் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். இந்த நம்பிக்கை மிக எளிய நம்பிக்கைததான் என்றாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் வலுவானது. இதுபோன்ற நம்பிக்கைகளே வாழ்க்கையே அழகுபடுத்தும். அதனை எளிதாகக் கடப்பதற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தூக்கமும் மனம் அடையும் அமைதியும்

Loading

இரவில் வெளிப்படும் மனிதன் வேறு. பகலில் வெளிப்படும் மனிதன் வேறு. பகல் அவனை வெட்ட வெளிச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது. அவன் தவறு செய்ய அஞ்சுகிறான், வெட்கப்படுகிறான். இரவு அப்படியல்ல. அது அவனை மூடி மறைக்கிறது. இரவுக்குள் செல்லச் செல்ல அவனது மிருக உணர்ச்சி கூர்மையாகிக் கொண்டே செல்கிறது. அது அவனது அறிவை மழுங்கடிக்கும் எல்லை வரை செல்கிறது. இரவில் விரைவாகத் தூங்கும் மனிதர்கள் பாக்கியவான்கள். தூக்கம் பெரும் திரையாக உருவெடுத்து அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாக மாறிவிடுகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

சத்தியத்தைக் கண்டடைதல்

Loading

சத்தியத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை ஒருவனின் உள்ளத்தை ஆக்கிரமித்துவிட்டால் அவன் அதற்காக எதையும் இழக்கத் தயாராகி விடுகிறான். அவனுடைய பதவி, புகழ், செல்வம் மற்றும் அவன் அனுபவிக்கும் இன்னபிற உலகியல் வசதிகள் யாவும் அவனுக்கு அற்பமானவையாக மாறிவிடுகின்றன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

சமநிலையின் சூட்சுமம்

Loading

இந்த உலகில் காணப்படும் சமநிலையும் இஸ்லாத்தில் காணப்படும் சமநிலையும் படைத்த இறைவனால் அன்றி வேறு யாராலும் ஏற்படுத்த முடியாதவை. மனிதனின் இயலாமைகளில் இதுவும் ஒன்று. அவனால் இப்படிப்பட்ட ஒரு சமநிலையை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்

Loading

தேடல்தான் நம் வாழ்வை அர்த்தப்படுத்தும். சலிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றும். ஓரிடத்தில் தேங்கிவிட்டால் விரைவில் அழுக்கடைந்து விடுவோம். வாழ்க்கையின் அலுவல்கள் நம்மை தின்னத் தொடங்கிவிடும். ஆழமான வாசிப்பு நம் அறியாமையை நமக்கு உணர்த்துகிறது. மேம்போக்கான வாசிப்பு நம்மை செருக்கில் ஆழ்த்துகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விமர்சனமும் பாராட்டும் சாதாரணமான விசயங்களா?

Loading

விமர்சனம் செய்வதும் பாராட்டுவதும் சாதாரணமான விசயங்கள் அல்ல. விமர்சனம் ஒரு மனிதனின் தவறுகளை அடையாளம் காட்டுகிறது. அவனைப் பண்படுத்துகிறது. அதன் மூலம் அவன் செம்மையாக்கப்படுகிறான். பாராட்டு அவனை ஊக்கப்படுத்துகிறது. அவனது பாதையில் கிடக்கும் தடைகளைத் தாண்டும் உத்வேகத்தை அவனுக்கு அளிக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அறிவுரையும் சட்டமும்

Loading

இஸ்லாம் சொல்லக்கூடிய போதனைகள் மனித இயல்புக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர்கிறேன். ஒரு மனிதன் முன்முடிவுகளின்றி, அரசியல் நிலைப்பாடுகளின்றி திறந்த மனதோடு அவற்றை உள்ளபடியே அணுகினால் அவை அவன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விவகாரத்திற்கும் அப்படியே கச்சிதமாக பொருந்தக்கூடியவையாக இருப்பதை உணர முடியும். இது இஸ்லாம் இறைமார்க்கம் என்பதற்கான சான்றுகளில் ஒன்று.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

புனைவுகள் என்னும் பெருவெளி

Loading

கதைகள், நாவல்கள் வழியாக நாம் மனிதர்களையே வாசிக்கிறோம். மனிதனின் அன்றாட வாழ்வின் நிகழ்வுகள், அவனுடைய புறச்சூழல்கள், அவை அவனுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அவனுடைய அகத்திலும் புறத்திலும் அவன் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவனுடைய மன அவஸ்தைகள், அவனுடைய இலட்சியவாத கனவுகள், அவன் நிகழ்த்த விரும்பும் சாகசங்கள், அவனுடைய இயல்புகள் ஆகியவை கதைகள், நாவல்களின் வழியாகவே மிகக் கச்சிதமாக பதிவு செய்யப்படுகின்றன. இந்த இடத்தில்தான் கதைகளும் நாவல்களும் வெறுமனே புனைவுகள் என்பதைத் தாண்டி அவை மனித வாழ்வை வாசிப்பதற்கான மகத்தான பொக்கிஷங்கள் என்ற அடிப்படையில் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

குற்றவுணர்வு என்ன செய்கிறது?

Loading

மனிதனின் அகத்திற்கும் புறத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அகத்தில் உள்ளதே புறத்திலும் வெளிப்படும். நாவு சொல்லும் பொய்யையும் புறத்தோற்றம் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவரது முகத்தைப் பார்த்தே அவர் உண்மையாளரா, பொய்யரா என்பதை நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள முடியும். பல சமயங்களில் ஒருவரது முகத்தைப் பார்த்தே நாம் அவரைக் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆன்மாவின் வெளிச்சமும் இருளும் அவரது முகத்திலும் பிரதிபலிக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மனிதனின் இயலாமை வெளிப்படும் தருணம்

Loading

வேகத்தடைகள் நம் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அவை வேகத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடாமல் நம்மைக் கட்டுப்படுத்தி வேகத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன. நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களும் அவை போன்றவைதாம். அவை நம் கர்வத்தைக் கட்டுப்படுத்துகின்றன. நம்மைப் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கும் அந்தப் பேராற்றலை நமக்கு நினைவூட்டுகின்றன. வாழ்க்கையின் அலுவல்களில் மூழ்கி நம்மை நாமே தொலைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவைதாம் நம்மை மீட்டுக் கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க