கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘இந்து ஃபோபியா’: இந்துத்துவர்களின் அரிய கண்டுபிடிப்பு!

இஸ்லாமோ ஃபோபியா, செமிட்டிய எதிர்ப்புணர்வு (anti semitism) என்பனபோல் தூலமாக நிறுவப்படாத, தெளிவாக வரையறை செய்யப்படாத ஒரு புதிய சொல் இந்து ஃபோபியா. இதை சமீப காலமாக மேற்குலகில் வாழும் இந்துத்துவ வட்டாரம் தொடர்ந்து பரப்பி வந்தது. தற்போது சங்கி ஊடகங்களைத் தாண்டி இந்தியாவிலுள்ள பல மையநீரோட்ட ஊடகங்களில் இவ்வார்த்தைப் புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிந்தையில் ஆயிரம் வினாக்கள் – ரமீஸ் பிலாலி

ஸூஃபி மகான்களை இஸ்லாம்-நீக்கம் செய்து காட்டுவது என்பது இஸ்லாமோ ஃபோபியாவைப் பரப்புவதன் ஓர் அங்கமாக இவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஸூஃபிகளின் ஞானச் செல்வங்களை முஸ்லிம்களே மறுதலிக்கும்படிச் செய்வதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. அதே சமயம், ஸூஃபிகள் எல்லாம் இஸ்லாத்தின் கட்டுப்பாடான சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்னும் பொய்ப் பிம்பத்தையும் கட்டமைத்துவிட முடிகிறது. இப்படி ஒரே கல்லில் இரண்டு அல்லது மேற்பட்ட மாங்காய்கள் விழுகின்றன.

மேலும் படிக்க
காஞ்சா அய்லய்யா கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மத நிந்தனைச் சட்டம்: இஸ்லாமும் சமத்துவம் எனும் கருத்தாக்கமும் – காஞ்சா அய்லய்யா

கிறிஸ்தவ உலகம் தன் கோளாறைப் புரிந்துகொள்வதுடன், இந்தியக் கிறிஸ்தவத்துக்குள் தீண்டாமையை ஒழிப்பதில் அது ஏன் தோற்றுப்போனது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆக, தெய்வ நிந்தனை என்பதை ஒரு குறிப்பிட்ட கடவுளின் அல்லது இறைத்தூதரின் மீதான தாக்குதலாக மட்டும் பார்க்காமல், கடவுள் விஷயத்தில் மனிதர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் நாம் அவ்வாறே நோக்க வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்தே கடவுள் மற்றும் தெய்வ நிந்தனைகளின் பல்வேறு வடிவங்கள் குறித்த கருத்தாடல் விரிவடைய வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புரட்சியாளர் ஃபைஸ் அஹ்மது ஃபைஸை இஸ்லாம் நீக்கம் செய்தல்

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல முற்போக்கு வட்டாரங்களில் ஃபைஸை ஒரு கம்யூனிசக் கவிஞராகவே பார்க்கின்றனர். இந்தியாவிலுள்ள கம்யூனிசக் கட்சிகள் ஃபைஸின் கவிதைகளைக் கொண்டாடுவதுடன், தம் கொள்கைப் பிரச்சாரங்களுக்குத் தேவையான கவர்ச்சியான பல முழக்கங்களைக்கூட அவரின் கவிதைகளிலிருந்து வடித்தெடுத்துக்கொள்கின்றன. முதன்மையான இடதுசாரிக் கட்சிகள் தம் அரசியல் தேவைக்காக அவரின் கவிதைகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றன.

ஃபைஸின் புரட்சிகரக் கவிதைகளுக்கும், அவரின் சமயமான இஸ்லாத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று சிலர் கருது​கின்றனர்; வேறு சிலரோ கவிதைகளிலிருக்கும் இஸ்லாத்தின் செல்வாக்கைத் தற்செயலான ஒரு விபத்தாகக் காண்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சாயாக்கடை விஜயனும் மொய்து கீழிச்சேரியும்

இந்தப் பெரும் போக்கு சராசரி உறைவில் உடைவை ஏற்படுத்தி சாதித்தவர் விஜயன். வாழ்வின் கடைசி வாரங்கள் வரை அயல் நில உலாவில்தான் இருந்திருக்கின்றார். செல்வருக்கும் சாதிக்கக் கிடைக்காத ஒன்று. தன் நேசத்திற்கு முன்நிபந்தனைகள் எதுவும் கோராத வைக்கம் முஹம்மது பஷீர், வாடிக்கையாளரின் மானம் காக்கும் கே.ஆர்.விஜயன், கோடி ரூபாய்களை தள்ளி நிறுத்திய மொய்து கீழ்ச்சேரி – இது போன்றவர்கள்தான் சுற்றுலாவிற்கும் பயணத்திற்குமான வேறுபாட்டை தங்கள் வாழ்வைக் கொண்டு வரையறுப்பதோடு வாழ்வின் வரம்புகளை விரித்துப் பரத்துபவர்களும்கூட.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மாநாடு திரைப்படமும் முஸ்லிம்களும்

இந்திய சினிமாவில் முஸ்லிம்கள் குறித்த பதிவு எப்படியிருந்திருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முஸ்லிம்கள் வலதுசாரிகளாலும் லிபரல்களாலும் எப்போதும் வன்முறையாளர்களாக, பெண் வெறுப்பாளர்களாக, மத வெறியர்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்த சூழலில், மாநாடு திரைப்படம் இந்தப் போக்கிற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

இன்றைக்கு இந்திய அரசியல் முஸ்லிம்களை மையப்படுத்தி சுற்றிச்சுழல்வதை நாம் அறிவோம். அவர்கள்மீது அச்சத்தையும் துவேசத்தையும் ஏற்படுத்துவதன் வழியாகவே இந்துத்துவமும் பெரும்பான்மைவாதமும் தம் இருப்பை வலுப்படுத்தியிருக்கும் நிலையில், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரான படமாகவும் மாநாடு வெளிவந்திருக்கிறது. முஸ்லிம்கள்மீது காவல்துறை பொய் வழக்கு புனைவது, அரசியல் லாபங்களுக்காக மதக் கலவரம் தூண்டப்படுவது முதலான விஷயங்களை அது அழுத்தமாக பலமுறை பதிவு செய்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பழவேற்காடு அறபு வம்சாவளிகளும் பழங்காலப் பள்ளிவாசலும்

இந்த அறபுக் குடும்பம் ஹிஜ்ரி 235ல் (கி.பி.852) மக்காவை விட்டு புறப்பட்டதாகவும் 500 ஆண்டுகள் கடலிலும், கடற்கரையோரங்களில் இடைநிறுத்தம் செய்து கடைசியாக ஹிஜ்ரி 750 (கி.பி.1350) வாக்கில் இங்கு பழவேற்காடு வந்து சேர்ந்ததாகவும் கூறினார். இது மிகச் சரியாக இப்னு பதூதா (1304 -1368) தென்னிந்தியாவுக்கு வந்து சேர்ந்த காலத்தோடு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. மதுரை வரை வந்த இப்னு பதூதா இங்கு ஏற்கனவே அறபுக் குடியேற்றங்களைக் கண்டு திகைத்துப் போய் எழுதி வைத்ததும் வரலாறு.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘ஆன்டி இண்டியன்’ படத்தின் அரசியல் என்ன?

பாட்சாவின் சடலத்தைக் கொண்டு முஸ்லிம்கள் – சங்கிகள் – கிறிஸ்தவர்கள் இடையில் ஏற்படும் சிக்கலும் முறுகலும்தான் ஆன்டி இண்டியன் படத்தின் மையக்கரு. படத்தின் தொடக்கம் முதலே முஸ்லிம்கள் பிரச்னைக்குரியவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். சங்கிகள் மீம் கண்டெண்ட் பாணியில் சில இடங்களில் பகடி செய்யப்படுகிறார்கள். முட்டாளாக, நகைப்புக்குரியவர்களாக அவர்களைச் சித்தரிக்கிறது படம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்: சட்ட வல்லுநர்கள் சொல்வதென்ன?

சட்டப்படி ஒரு ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டால் அவரை விடுதலை செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஒருவர் தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்ட பிறகு அவர் என்ன குற்றம் செய்தார் என்பதைப் பார்க்க வேண்டிய தேவையில்லை. தண்டனைக் காலம் முடியும் முன்னரேகூட ஒருவரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அரசியலமைப்பின் 161வது விதியின் கீழ் அதிகாரம் உள்ளது. ஒரு சிறைவாசியின் நடத்தைக்கான நற்சான்று இருப்பதே விடுதலை செய்வதற்கு போதுமானது. இவ்வாறு விதிகள் தெளிவாக இருந்தாலும் சிறைவாசிகள் விடுதலை என்பது பாரபட்சமாக, தன்னிச்சையாகத்தான் இதுவரை கையாளப்பட்டு வந்திருக்கிறது என்கிறார் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

“இஸ்லாம் அன்பையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட மதம்” – பெரியாரின் மீலாது விழா உரை

இஸ்லாம் ஒரு சமத்துவக் கொள்கை கொண்ட மதமாகும். அதாவது, முகமதிய மதத்தில் மக்களுக்குள் பிறவியில் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது. பணக்காரன், ஏழை, படித்தவன் படியாதவன்; இளைத்தவன் பலசாலி என்கின்ற வித்தியாசமில்லாமல் சகலருக்கும் வாழ்வில் சகல உரிமையும் அளிக்கின்றது. மேலும், முகமதிய மதம் ஒற்றுமையையே அதிகமாய்க் கொண்டிருக்கிறது. அதாவது அந்த மதத்தைச் சேர்ந்த ஒரு தனி மனிதனுக்கு ஒரு சிறு தீங்கு அந்நியனால் செய்யப்பட்டாலும், உடனே அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி தங்களுக்கு வந்ததுபோல் கருதி அவனுக்கு உதவி செய்ய அவசரமாய் முந்துகின்றார்கள்.

மேலும் படிக்க