the kashmir files review tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: இந்திய சினிமாவின் ‘புதிய பாய்ச்சல்’!

காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்பட்ட திரையரங்குகளின் வாசல்களில் இஸ்லாமிய வெறுப்பு முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன; “துரோகிகளை அழிக்க வேண்டும், பழிதீர்க்க வேண்டும்” போன்ற முழக்கங்கள் வெகு இயல்பாக எழுப்பப்படுவது இந்தியாவில் இன்று பரவியிருக்கும் வெறுப்புச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன. அதே 90களின் இறுதியில் தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் சேனலில் பொது நிதியைக் கொண்டு ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. இது இந்தியாவில் ராமர் அரசியல் வலுவாகக் காலூன்ற வழிவகுத்தது. பாபர் மசூதிக்கு எதிரான கரசேவைக்கு ஆள் சேர்க்கவும் இது பயன்பட்டது. அதுபோல, இன்று காஷ்மீர் ஃபைல்ஸ் படம் இந்துத் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் உண்மைக்குப் புறம்பான அம்சங்கள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் எண்ணிக்கை, கொல்லப்பட்டோர் எண்ணிக்கை, அன்று பாஜக ஆதரவு ஒன்றிய அரசின் ஆட்சி இருந்தது முதலான பல்வேறு அம்சங்கள் இப்படத்தில் பிழையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான தகவல் பிழைகளையெல்லாம் தாண்டி, இஸ்லாமிய வெறுப்பை உற்பத்தி செய்யும் தனது நோக்கத்தை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது இந்தப் படம்.

மேலும் படிக்க
இமாம் அல் கஸ்ஸாலி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இமாம் கஸ்ஸாலியும் குவாண்டம் கொள்கையும் (1)

தோற்றங்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பொருட்கள் இறைவனின் விருப்பத்திற்கிணங்க செயலாற்றுகின்றனவா? மேலும், பொருட்கள் நிரந்தரமில்லாதவையா? அவற்றை இறைவன் தொடர்ச்சியாகப் படைப்பதால் மட்டுமே பொருட்கள் இருக்கின்றனவா? கஸ்ஸாலியின் கூற்றுப்படி, இவ்வனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், ஆம். தோற்றமளிக்கும் பொருட்கள் நிரந்தரத்தன்மை கொண்டவையல்ல. அப்பொருட்களின் சார்புநிலைகள் காரணங்களோடு தொடர்புடையவை. ஒவ்வொரு நிகழ்வும் மற்றொரு நிகழ்வுக்குக் கொண்டு செல்பவையானாலும் அக்காரணங்கள் இறைவனுடைய பண்புகளின் விளைவாகும்! இறைவன் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் தொடர்ச்சியாகப் படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் படைப்பதை நிறுத்திவிட்டால் பொருட்கள் எதுவும் இருக்காது. எந்தப் பொருளும் இல்லாமலாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பஞ்சாப்: ஆம் ஆத்மியின் வெற்றியும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் – ப்ரீத்தம் சிங்

பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தது, ஆம் ஆத்மி கட்சி மீதுள்ள அன்பினால் அல்ல. மாறாக மேட்டுக்குடியினரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து கட்டுப்படுத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பாணி குறித்துப் பலத்த சந்தேகங்கள் உள்ளன. பஞ்சாபியர்கள் டெல்லி தர்பாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நீண்ட வரலாற்று மரபு உள்ளது. கேஜ்ரிவாலும் அவரது டெல்லி கூட்டாளிகளும், பஞ்சாபி அரசியல் பண்பாட்டின் இந்த அம்சத்தின் முக்கியத்துவத்தைத் தாமதமாக உணர்ந்திருந்தாலும், இறுதியில் பகவந்த் மானை ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்தனர். மான், எந்த நிர்வாகத் திறமைக்கும் பெயர் பெற்றவராக இல்லாவிட்டாலும், ஊழலற்ற, எளிமையான வாழ்க்கை முறைக்கும் செயல்பாட்டிற்கும் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

கெஜ்ரிவாலின் டெல்லி ஆட்சி மீது ஈர்ப்புக் கொண்டு, பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்ற கதையைப் பரப்பும் பல வர்ணனையாளர்களைப் போலல்லாமல், மானின் நேர்மையும் பிரபலமும்தான் பஞ்சாபி மக்களை ஆம் ஆத்மிக்கு ஈர்த்துள்ளது.

இதன் குறிப்பிடத்தக்க உட்பொருள் என்னவென்றால், கெஜ்ரிவால் மான்னையும் பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசாங்கத்தையும் கைப்பாவையாக ஆக்கிக் கட்டுப்படுத்துவதாகக் கருதப்பட்டால், காங்கிரஸ்-அகாலி மேட்டுக்குடிகள் தோற்பதற்கு வழிவகுத்த மக்கள் சினம் கெஜ்ரிவாலை நோக்கியும் திரும்பக்கூடும்.

மேலும் படிக்க
இஸ்லாமிய கல்வி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனியமும் இஸ்லாமியக் கல்விமுறையின் வீழ்ச்சியும் – ஃபைசல் மாலிக்

முன்னுரை அளவிலாக் கருணையாளனும், இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் CNNல் 2009ம் ஆண்டு வெளியான Generation Islam எனும் ஆவணப்படத்தில் ‘பாகிஸ்தானில் இஸ்லாமியக் கல்வி’ என்ற பகுதியில், “பழங்காலத்தில் அடைபட்டிருக்கும் ஒருவித இஸ்லாத்தையே பல மதரசாக்கள் பயிற்றுவிக்கின்றன. கணிதம், அறிவியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுவதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு ஒரு என்ஜிஓ பணியாளரை “பாகிஸ்தானின் மதரசாக்களை நவீனமாக்கும் போரில் முன்னணியிலிருப்பவர்” [1] எனப் பாராட்டியது. மதரசாக்களை [2] நவீன யுகத்துக்கு முந்தைய முஸ்லிம் கலாச்சாரத்தின் எச்சமாகவும், சமகாலத்துக்குத் தொடர்பற்றவையாகவும், நவீன உலகிற்கு முரணானவையாகவும் சித்தரித்தது இந்த ஆவணப்படம். முஸ்லிம் உலகம் கல்வியில் எதிர்கொள்ளும் சவால்களுக்குக் காரணம் அது கல்வியை “நவீனமாக்காததே” என நாம் பரவலாக ஊடகங்களிலும் அறிவுஜீவி வட்டாரங்களிலும் அரசுசார் நிறுவனங்களிலும் [3] காணும் கருத்தைப் பிரதிபலிப்பதாக இப்படம் அமைந்தது. இப்படிச் சொல்வதன் வழியாக முஸ்லிம் உலகின் பல…

மேலும் படிக்க
karnataka hijab issue tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப் விவகாரம்: பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவிகள் சொல்வதென்ன? (நேரடி ரிப்போர்ட்)

தொடர்ச்சியாக பள்ளி நிர்வாகம், ஊடகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளை மேன்மேலும் தொந்தரவுக்கு உள்ளாக்குவதைப் பார்க்க முடிகிறது. ஹிஜாபுக்காகப் பேசும் மாணவிகள் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கும் அளவுக்குத் திறமைவாய்ந்தவர்கள் அல்ல, அவர்கள் எப்போதும் அதை அணிந்திருந்தவர்களும் அல்ல என்றெல்லாம் ஆசிரியர்களே அவர்களைச் சாடுவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையே பழிக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவது தொடர்கிறது. மாணவிகள் இதற்கு உரிய வகையில் பதிலடி தரவும் செய்கிறார்கள். கல்வியிலும் அதற்கு அப்பாலும் தாங்கள் எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறோம் என்பதை சொல்லிக் காட்டுகிறார்கள். ஊடகங்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளையே குறிவைத்துத் தாக்குகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சில தொலைக்காட்சி சேனல்கள் ஆலியா என்ற ஒரு மாணவியைக் இலக்காக்கின. அவர் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஹிஜாபுடன் பங்கேற்றவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அவரிடம், எப்போது ஹிஜாப் போட ஆரம்பித்தீர்கள், நீங்கள் ஹிஜாபைக் கழட்டியதே கிடையாதா, எத்தனை ஆண்டுகளாக இதைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்றெல்லாம் ஊடகங்கள் கூச்சலிட்டன.

சமூகச் செயல்பாட்டாளர் சஃபூரா ஸர்கார், “முன்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்தார்களா, இல்லையா என்பது இங்கு பொருட்டல்ல. எனது அடிப்படை உரிமையை நான் எடுத்துக்கொள்வதற்கு எந்தக் கால வரையறையும் கிடையாது” என்கிறார். ஹிஜாப் அணிவதைத் தெரிவு செய்யும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் இங்கு மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

மேலும் படிக்க
hijab issue tamil கட்டுரைகள் காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப் விவகாரம்: இந்து தேசியவாதத்துக்குத் தீனி போடும் பெண்ணியவாதிகள்

ஹிஜாப் சர்ச்சையாக்கப்படுவதை எப்படி புரிந்துகொள்வது?
தேர்தல் கணக்குகளுக்காகவும் பாஜக அரசின் பொருளாதாரத் தோல்வியை மறைக்கவும்தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றதா?
இந்து தேசியவாதத்துக்கு எப்படி பெண்ணியவாதம் தீனி போடுகிறது?
தேச அரசு எனும் வடிவம் அதனளவில் கொண்டிருக்கும் சிக்கல் என்ன?
போன்ற முக்கியமான விஷயங்கள் இந்நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
Kareem Graphy கட்டுரைகள் காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: எது பொதுப் பண்பாடு?

இந்து தேசியவாதிகளால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது சர்ச்சையாக்கப்படுவது தொடர்பாக OH Tamil யூடியூப் சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த நேர்காணல்.

மேலும் படிக்க
media one c dawood கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

“பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸை விமர்சித்ததற்காக ‘மீடியா ஒன்’ இலக்காக்கப்பட்டிருக்கிறது” – நிர்வாக ஆசிரியர் சி.தாவூத்

“எங்களது ஆசிரியர் குழுவின் கொள்கை முடிவுகள் ஒன்றிய அரசின் கொள்கைகளை, சிஏஏ – என்ஆர்சி விவகாரங்களில் உட்பட, விமர்சிப்பதாக அமைகிறது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஸின் வகுப்புவாத அரசியலையும் விமர்சித்து வருகிறோம்” என்று சொல்லும் தாவூத், இவ்வாறு இருந்தபோதிலும் செய்தி சேகரிப்பதில் புறவயமான அணுகுமுறையைத் தாங்கள் மேற்கொள்வதாக குறிப்பிடுகிறார்.

“அரசின் கொள்கைகள் மீதான எங்கள் விமர்சனத்தில் புறவயமான அணுகுமுறையையும் உண்மையையும் கடைப்பிடிக்கிறோம். விமர்சனபூர்வமாக இருப்பதுதானே ஊடகத்தின் பணி” என்று தெரிவிக்கும் அவர், 2020, 2021ல் டெல்லியின் எல்லைப்புறங்களில் விவசாயிகள் போராட்டம் வெடித்தபோது, களத்திலிருந்து மீடியா ஒன் பல்வேறு கோணங்களையும், காட்சிகளையும் ஒளிபரப்பியதாகச் சொல்கிறார்.

மேலும், மீடியா ஒன் ஒளிபரப்பை நிறுத்த தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு கேரளாவின் ஊடகப் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க
bajrang dal tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து ஆதிக்கவாதத்தின் சராசரி முகம் : ஒரு பஜ்ரங் தள ஊழியருடன் உரையாடல் – மோயுக் சாட்டர்ஜீ

அகமதாபாத்தில் சில பஜ்ரங் தள ஊழியர்களுடன் பணியாற்றிய சொந்த அனுபத்திலிருந்து நேரடிப் பதிவாக ஆசிரியர் இதை எழுதியிருக்கிறார். இந்தியா முழுக்க வலதுசாரி ஆயுதக் குழுக்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் செய்திகள் அதிகரித்து வரும் இவ்வேளையில், பஜ்ரத் தளத்தின் ஊழியர்களுடைய தினசரி வாழ்க்கை மீது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி இது. மூன்று பகுதிகளைக் கொண்ட இந்தக் கட்டுரையில், இந்தக் குழுக்களிடம் வன்முறையைத் தாண்டி பல விசயங்களிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். குஜராத் போன்று இந்தியாவின் சில பகுதிகளில் இந்தக் குழுக்களும் ஊழியர்களும் அந்தந்தப் பகுதிகளின் தினசரி வாழ்க்கையுடன் கலந்திருக்கிறார்கள். அந்தப் பகுதிவாசிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாக, பஞ்சாயத்து செய்பவர்களாகச் செயல்படுகிறார்கள்.

மேலும் படிக்க
இஸ்லாமிய பெண்ணியம் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்! – உம்மு ஃகாலிது

தொடர்ச்சியாகவும் நீண்ட காலமாகவும் பெண்களிடம் பொய் சொல்லப்பட்டு வந்துள்ளது. பலர் ஒன்றிணைந்து தமது சுயலாபங்களுக்காகப் பெண்களை ஏமாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆணாதிக்கம் பற்றியோ, முஸ்லிம் ஆண்கள் பற்றியோ நான் பேசுவதாக எண்ண வேண்டாம். சில மேற்கத்திய சூன்யவாத நாத்திக மேட்டுக்குடிகளைப் பற்றிப் பேசுகிறேன். தமது சொந்த அஜென்டாக்களுக்காக, அவர்கள் பெண்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் சமூக வழமைகள் சிலவற்றை மாற்றி, இயந்திரங்களைப் போல மக்களைக் குறிப்பிட்ட வழியில் இயக்கியிருக்கிறார்கள்.ஊடகங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், புத்தகங்கள், நாவல்கள், பிரபல பத்திரிகைகள், பாடல் வரிகள், புகழ்பெற்ற கல்விநிலையங்கள் முதலானவற்றின் மூலம் உலகெங்கும் அவர்கள் பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். அமெரிக்கத் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஆறு சீசன்கள் வரை ஒளிபரப்பப்பட்ட தொடர் “செக்ஸ் அண்ட் த சிட்டி” (Sex and the City). அதன் மையக் கருத்து இதுதான்: ஒரு நவீனப் பெண் வாழ்வில்…

மேலும் படிக்க