விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது?
இஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.
ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும் இந்து நாஜிகளுக்குமே சொந்தமானது. ஒருபோதும் அது கம்யூனிசமாக முடியாது என்பதை இந்த இந்துக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்; அல்லது நாம் அவர்களுக்கு அதைப் புரியவைக்க வேண்டும்.
கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.
மனிதனுக்கு ஆரோக்கியம் அளப்பரிய செல்வமாகும். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமானவனாக ஒருவன் ஒரு நாளை அடைவதைவிட பெரும் பேறு எதுவும் இல்லை. எந்தவொன்றும் நம்மை விட்டுச் செல்லும்போதுதான் அதன் அவசியத்தை நன்குணர்கிறோம். மனிதன் இழப்பின்போதுதான் இருப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்கிறான். தினமும் நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் கற்றுத்தரும் பின்வரும் பிரார்த்தனையை சற்று கவனமுடன் வாசித்துப் பாருங்கள். இந்த பிரார்த்தனையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஆஃபியா’ என்ற வார்த்தை முழுமையான ஆரோக்கியத்தைக் குறிக்கும். ‘அல்அஃப்வு’ நம்முடைய பாவங்களை அவன் கண்டுகொள்ளாமல் மன்னித்து விடுவதைக் குறிக்கும். முதலில் அவனிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு பின்னர் ஆரோக்கியத்தைக் கேட்கிறோம். இரண்டையும் ஒருசேர கேட்க வலியுறுத்தப்பட்டிருப்பதற்கான சூட்சுமம் இரண்டிற்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதையே காட்டுகிறது:
இந்தப் புத்தகம் தவறான வாசிப்புக்குள்ளாகும் சாத்தியம் இருப்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான எச்சரிக்கை. தீவிரவாதத் தாக்குதல்களை சில வேளைகளில் அறவியல் அடிப்படையில் நியாயப்படுத்த முடியும் என நான் வாதிடவில்லை. என்னை வியப்புக்குட்படுத்தும் உண்மை என்னவென்றால் நவீன அரசுகள் முன்னெப்போதையும் விட எளிமையாகவும், பாரிய அளவிலும் மனிதர்களை அழித்து, சிதறடிக்கும் வலிமையைப் பெற்றிருக்கின்றன என்பதும், இத்தகைய ஆற்றலின் அருகில் கூட தீவிரவாதிகளால் நெருங்க முடியாது என்பதும்தான். நிறைய அரசியல்வாதிகள், பொது அறிவுஜீவிகள், இதழியலாளர்கள் ஆகியோர் மற்ற மனிதர்களைக் கொல்வது, இழித்துரைப்பது போன்றவற்றை மிகுந்த அறிவுக்கூர்மையோடு செய்வதும் என்னைத் துணுக்குறச் செய்கிறது. இவர்களின் பிரச்சினை கொல்வதோ, மனிதாயநீக்கம் செய்வதோ இல்லை, மாறாக எப்படிக் கொல்வது மற்றும் என்ன நோக்கத்துக்காக என்பதுதான் என்றே தோன்றுகிறது.
உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை? எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன? அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை?
“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”
அரபு ஜாஹிலிய்யா காலத்தைக் குறித்து நம்முடைய வரலாற்று நூற்களில் காணப்படும் தகவல்கள் யாவும் மேலோட்டமான நுனிப்புல் மேய்கின்ற தகவல்கள் ஆகும். அவற்றின் மூலமாக நாம் காண விளைகின்ற விஷயத்தை ஒருபோதும் சென்றடைய முடியாது. பொதுவாக நமது வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்ற தகவல்களைப் படித்தால் என்ன தோன்றுகின்றது? அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள்? இப்படிச் செய்தால்தான் இஸ்லாத்தின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்ற முடியும் என்று கருதியதால்!
‘இந்து’ எனும் சமூக அடையாளத்துக்குள் நம்மை மூழ்கடிப்பதே அவர்களின் நோக்கம். அந்த அடையாளத்தின் தலைமையாகவும் குரலாகவும் அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்வார்கள். ஆம், தலித்களை இந்துமயப்படுத்தியே தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் தீவிர (ரேடிகல்) தலித்களும், பழங்குடிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்து அடையாளத்தை மறுக்கவும் எதிர்க்கவும் செய்கிறோம். உண்மையில் நாம் இந்துக்களல்ல. பிறகு ஏன் நாம் அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும்? நம் சொந்த அடையாளங்களை நாம் ஏன் இழக்கவேண்டும்?