ஃபலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு தேசத் தீர்வை ஆதரிப்பதாகக் கூறினாலும், உறவு இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக ஆகியிருக்கிறது. குறிப்பாக, ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல்களையோ, ஆயதுல்லாஹ் ஃகாமினயீயின் கொலையையோ இந்தியா கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
“உயிர்த் தியாகிகள் சிந்திய ரத்தத்திற்கு உண்மையாளர்களாக இருங்கள். சுதந்திரத்திற்காக பாதை அமைத்த அவர்களின் தியாகங்களை அரசியல் லாபங்களுக்காக வீணாக்கிவிடாதீர்கள். நமது முன்னோர்கள் தொடங்கியதை முடிப்பது நமது வேலை. விலை எவ்வளவு இருந்தாலும் இந்தப் பாதையை விட்டும் தவறிவிடாதீர்கள். இந்த நிலம் நமக்கு எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் இப்போதும் எப்போதும் உறுதியின் உறைவிடமாக காஸா இருக்கும்.” – யஹ்யா சின்வார்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 10 மாதத்துக்குள் இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஃகஸ்ஸாவில் இருந்த அவரின் மூன்று மகன்களைக் கொன்றது இஸ்ரேல்.
இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாகியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்று பலருக்கும் கேள்வி இருக்கும். குறிப்பாக இதற்கு 4 காரணங்களைச் சொல்லலாம்.
ஜூலை 31 நள்ளிரவில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவுத் தலைவரும் ஃபலஸ்தீனின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹனிய்யா படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பு ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், ஹனிய்யாவை படுகொலை செய்தது இஸ்ரேல்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒவ்வொரு வான்தாக்குதலும் டஜன் கணக்கான மக்களைக் காயப்படுத்தியது. ஒருநாள் தலை காயம், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு, பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் ஒரு கர்ப்பிணி வந்தார். அவர் மரணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அனஸ்தீசியா இல்லாதபோதும் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஐசியூ மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பிறந்த அக்குழந்தை, குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பத்து நாள்கள் போராட்டத்திற்குப் பிறகு அப்பெண்மணி மரணித்தார்
பல ஆண்டுகளாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இஸ்ரேல் இருப்பது நமக்குத் தெரியும். அதிலும் காஸா மீது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை நிகழ்த்தும்போது அமெரிக்கா அதற்கு பக்கபலமாக நின்று எந்த அளவுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். 1948ல் இஸ்ரேல் எனும் நாடு உருவான சமயம் தொட்டு (75 ஆண்டுகளாக) இரு நாடுகளுக்கும் மத்தியில் மிக பலமான உறவு இருந்துவருகிறது. இந்த உறவு வலுவாக இருப்பதற்கு 4 முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.
1973ல் அறபு-இஸ்ரேல் போர் நடந்தபோது சவூதியை ஆட்சிபுரிந்த மன்னர் ஃபைசல் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தார். அது அவர்களுக்கு பொருளாதார ரீதியான அடியைக் கொடுத்தது. உலக அரங்கில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியது. இதுபோல் ஒரு சரியான, தாக்ககரமான நடவடிக்கையை MBS எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.
இந்தத் தாக்குதல் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதைக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூற இது ஒன்றும் கிரிக்கெட் போட்டி அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இஸ்ரேல் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே உண்மை.
இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் அதன் உளவு மற்றும் இராணுவத் துறைகளின் தோல்விக்கும் அப்பாற்பட்டது; இஸ்ரேலுக்கு இதுவோர் அரசியல், உளவியல் பேரழிவு ஆகும். வெல்ல முடியாத அரசு என்று மார்தட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, இத்தாக்குதல் அதன் பலவீனத்தையும் படுமோசமான இயலாமையையும் காட்டியுள்ளது. ஃபலஸ்தீனை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, மத்தியக் கிழக்கு பகுதிக்கு தன்னை புதிய தலைமையாக ஆக்கிக்கொள்வதற்கான அதன் திட்டங்களுக்கும் இது பேரிடியாய் அமைந்துள்ளது.
உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.
இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.