கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (1)

இஸ்லாம், நவீனத்துவம் ஆகியவற்றின் சில பகுதிகள் பரஸ்பரம் ஒத்துப்போகக்கூடும். ஆனால், இரண்டையும் நாம் குழப்பிக்கொண்டால் சிக்கல் உருப்பெறும். ஒரு சிந்தனைச் சட்டகம் உங்கள் சிந்தனையை, உணர்வை, அறிவுக்கும் நெறிமுறைக்குமான உங்களது உரைகல்லை, உலகம் குறித்த உங்களது புரிதலை, சுயம்சார் புரிதலை எல்லாம் தீர்மானிப்பதாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மில் பலருக்கு இஸ்லாம் குறித்து குழப்பங்களும் சந்தேகங்களும் எழக் காரணமும் சிந்தனைச் சட்டகம் சார்ந்ததே. இதை சரியாக இனங்காணாததன் விளைவாகவே நவீனத்துவ முஸ்லிம்கள் தடம் புரள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இஸ்லாத்தின் விளிம்பில் நிற்பவர்கள். அதனால் சிலபோது நவீனத்துவ கருத்துநிலையின் பக்கம் முழுமையாகச் சாய்ந்துவிடுவார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (5)

எப்படி குழப்பங்களை எதிர்கொள்ளப் போகிறோம்?
• பாரம்பரிய இஸ்லாமிய அறிவு மரபில் நிலைகொள்ள வேண்டும்.
• எதுவெல்லாம் பாரம்பரிய அறிவுக்கும் பண்பாட்டுக்கும் மாற்றாக எழுகின்றதோ அதை விசாரணைக்குள்ளாக்க வேண்டும்.
• இஸ்லாமிய அறிவு மரபின் ஞானத்தையும், அதன் உயர் மதிப்பீடுகளையும் நாம் கண்டடைவதோடு, அவற்றை நிறுவுவதற்கு உழைக்க வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (4)

கடந்த காலத்திலும் தற்காலத்தைப் போன்று முஸ்லிம்களிடையே பல குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன. இன்று நவீனத்துவம் வகிக்கும் இடத்தை முற்காலத்தில் கிரேக்கத் தத்துவம் வகித்தது. அதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் முகங்கொடுத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, கிரேக்கத் தத்துவவியலாளர்கள் இந்தப் பிரபஞ்சம் நிலையானது, தொடக்கமும் முடிவுமற்றது என்றனர். அதற்கு சில அடிப்படைகளையும் முன்வைத்தனர். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் வானியலாளர் எட்வின் ஹபிள் போன்றோரின் தலையீட்டுக்கு முன்புவரை இந்தக் கருத்தமைவுதான் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தது. இஸ்லாமிய வரலாற்றின் முதல் நான்கு தலைமுறைகளுக்குள்ளாகவே முஸ்லிம் உலகில் இது அறிமுகமாகிவிட்டது. தத்துவவியலாளர்களான அரிஸ்டாட்டில், பிளேட்டோ முதலானோரை அநேகர் கற்க முற்பட்டார்கள். சிலர் அதை இஸ்லாத்துடன் குழப்பிக்கொள்ளும்போது வழிகேட்டுக்கு அது காரணமாக அமைந்தது. அவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் சூழலும் உருவானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (3)

தொழில்நுட்பம், அறிவியல், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் சமூகம் தொடர்ச்சியாக சிறந்த தெரிவை நோக்கி முன்நகர்வதாய் முற்போக்குவாதம் கருதுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன் ஜான் ஸ்டீவர்ட் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பெண்களைப் போல் ஆண்கள் ஆடை அணிவதாகச் சொல்லி திருநங்கைகளை நகைப்புக்குள்ளாக்கினார். அனைவரும் சிரித்தார்கள். ஜான் ஸ்டீவர்ட் நவீனமானவராகவும் தாராளவாதியாகவும் அறியப்படுபவர்தான். இப்போது அவர் அப்படி செய்தால் Transphobic என்று எல்லாரும் அவர் மீது பாய்ந்திருப்பார்கள். ஏனெனில், இன்று சமூகம் முன்நகர்ந்திருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில், சரி – தவறு என்ற மதிப்பீடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகக் கருதுவது முற்போக்குவாதத்தின் ஓர் அடிப்படை.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (2)

மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் ஐரோப்பிய வரலாற்றை செவ்வியல் காலம், மத்திய காலம், நவீன காலம் என மூன்றாக வகைப்படுத்துவார்கள். பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கம் உள்ளிட்டவற்றின் வரலாறு செவ்வியல் காலத்தைச் சார்ந்தது. 16 – 18ம் நூற்றாண்டு காலப்பிரிவில்தான் மறுமலர்ச்சிக் காலம், அறிவொளிக் காலம் என்பன வருகின்றன. இது நவீன காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அப்போது தோன்றிய கருத்தியல்கள் குறித்தே நாம் அதிகம் கரிசனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேற்குலக வரலாற்றின் முப்பகுதிகள்:

• செவ்வியல் காலம் கி.பி. 500க்கு முன்
• மத்திய காலம் கி.பி. 500 முதல் கி.பி. 1500 வரை
• நவீன காலம் கி.பி. 1500க்குப் பின்

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (1)

இஸ்லாமிய அழைப்பாளரும், அலஸ்னா நிறுவனத்தின் நிறுவனருமான டேனியல் ஹகீகத்ஜு, இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் மீது நவீனத்துவம் தொடுக்கும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர். நாத்திகம், தாராளவாதம், பெண்ணியவாதம், மதச்சார்பின்மைவாதம் போன்ற ஆதிக்கக் கருத்தியல்கள் இவரின் பிரதான பேசுபொருள்களாக விளங்கின்றன. Dark Storms: The Modernist Challenge to Islam எனும் கருப்பொருளில் அவர் வழங்கிய ஆன்லைன் கோர்ஸின் சுருக்கப்பட்ட வடிவமே இந்தத் தொடர்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்

இயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை மறுக்கும் இந்த ஆதிக்கக் கருத்தியல்களின் முன்னால் மற்ற மதங்கள் போல் அது ஒருபோதும் மண்டியிடாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா? ஆம் முரண்படுகிறது.

பலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் கிடையாது. குறைந்தபட்சம் இன்றளவில் கிடையாது. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிடவும் முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கின்ற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்றதொரு செயலாகும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் கேள்வி-பதில்கள் மொழிபெயர்ப்பு 

ஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது?

பொது இடங்களுக்கான முஸ்லிம் உடை ஒழுங்குகள் என்பவை இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்தவை. உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டும், எதனை மறைக்கக் கூடாது என்பது குறித்த நம்முடைய நம்பிக்கையானது இறைவழிகாட்டுதல்களிலிருந்து வருவது. இறைவனை நம்புகிறவர்கள் என்ற அடிப்படையில் நாம் அந்த இறைவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, அவற்றின் அகிலத்துவ முக்கியத்துவத்தையும் மெய்யறிவையும் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறோம். பிறருக்கு இவை எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முஸ்லிம்களிடத்தில் இவ்வுயர் விதிகளிலிருந்து பிறக்கும் தர்க்க நியாயமேனும் இருக்கின்றது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஒரு முஸ்லிம் ஐயவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ

முஸ்லிம் அறிவுத்துறை வரலாறு நெடுகிலும் இத்தகைய முஸ்லிம் ஐயவாதிகள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் எந்தெந்த தத்துவங்களை எல்லாம் அபாயகரமானவையாகவும் நாசகரமானவையாகவும் கண்டார்களோ அவற்றை மதிப்பீடு செய்யவும், நிலைகுலையச் செய்யவும், விமர்சனத்திற்கு உட்படுத்தவும், வீழ்த்தவும் எல்லாவிதமான பகுத்தறிவு மூலோபாயங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. இன்றைய முஸ்லிம்கள் தொலைத்துவிட்டவொரு அரிய கலை இது.

மேலும் படிக்க