ஃபலஸ்தீனின் குழந்தைகள்
![]()
ஃபலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலை அங்குள்ள குழந்தைகள் உடல், மன, மற்றும் உள ரீதியாக கடுமையாக பாதித்துள்ளன. தாங்கள் ஃபலஸ்தீனில் பிறந்த ஒரே காரணத்திற்காகவே படுகொலை செய்யப்படுகிறோம் என்பதை உறுதியாக நம்பும் அந்த குழந்தைகள் சர்வதேச சமூகம் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எத்தனை பிரச்சகைள் வந்தாலும் அது எந்த ரூபத்தில் வந்தாலும் அவை அனைத்தையும் கடந்து ஃபலஸ்தீன மக்கள் உறுதியாக உள்ளார்கள் என்று அவர்களை புகழ்வது சர்வதேச சமூகத்தின் வழமையாக மாறியுள்ளது. ஆனால், இந்த புகழ்ச்சிக்கு பின்னால் நமது கையாளாகாத தன்மையும் மறைந்துள்ளதை வசதியாக மறந்து விடுகிறோம்.
