கட்டுரைகள் 

அநியாயம், அநியாயம்

Loading

நீதி என்பது இவ்வுலகில் செயல்படும் மாறா நியதிகளுள் ஒன்று. மனிதர்கள் நீதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அது தனக்கான இடத்தைப் பெற்றே தீரும். அது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு வடிவில் தனக்கான இடத்தை அடைந்தே தீரும். அநியாயக்காரர்கள் தற்காலிகமாக தப்பித்துவிட்டாலும் தங்களின் செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தண்டிக்கப்பட முடியாத உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டாலும் ஏதேனும் ஒரு வடிவில் தாங்கள் செய்த அநியாயங்களுக்கான விளைவுகளை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

ஆம் நான் எழுதுகிறேன்

Loading

இப்படியொரு காலம் கனிந்து வர வேண்டும் என்றும் மொழி என் வசப்பட வேண்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். அபுல் ஹசன் நத்வீ, செய்யித் குதுப் ஆகியோரின் புத்தகங்களை படிக்கும்போதெல்லாம் இப்படியொரு மொழிவளத்தை என் மொழியில் நான் பெற வேண்டும் என்று என் மனம் துடியாய் துடிக்கும். ஆச்சரியமாக இருக்கிறது, அன்று நான் செய்த பிரார்த்தனையை இன்று நினைத்துப் பார்க்கிறேன். அது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன். என்னையும் அறியாமல் என்னிடமிருந்து எழுத்து பீறிடுகிறது. என்னை அதற்கு ஒப்புக் கொடுக்கிறேன் என்பதைத் தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. இது நான் அதிகமாக எழுதிக் குவிக்கும் காலமாக இருக்கும் என நான் நம்புகிறேன். என் இறைவன் அதற்கு அருள்புரிய வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாத்திகம் என்னும் சீர்குலைவு

Loading

இறைவனை மறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவனை ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. மனிதன் தன் இயல்பு நிலையில் நிலைத்திருத்தலே போதுமானது. மேலோட்டமான அறிவு இறைவனை மறுக்கத் தூண்டலாம். ஆனால் ஆழமான அறிவு நிச்சயம் மனிதனை இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பெண் என்பவள்…

Loading

பெண்ணியம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடு. அதன் கண்ணோட்டத்தில் நின்று நாம் பெண்களைப் பார்த்தால் ஏமாந்துவிடுவோம். ஆண்களுக்கு எதிராக அது உருவாக்கி வைத்திருக்கும் சொல்லாடல்கள் போட்டி மனப்பான்மையை, காழ்ப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அதன் கண்ணோட்டங்கள் பெரும்பாலும் பாசாங்கானவை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தற்கொலை

Loading

இறைநம்பிக்கையாளர்கள் இறைவன் மீது எந்தச் சமயத்திலும் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். இந்த நம்பிக்கை மிக எளிய நம்பிக்கைததான் என்றாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் வலுவானது. இதுபோன்ற நம்பிக்கைகளே வாழ்க்கையே அழகுபடுத்தும். அதனை எளிதாகக் கடப்பதற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நான் ஏன் ஒரு முஸ்லிமாகப் போராடுகிறேன்?

Loading

1930களில் நாஸி ஜெர்மனியில் இருந்து தப்பிச்சென்ற யூத அரசியல் தத்துவவியலாளர் ஹன்னா ஆரன்ட் இப்படி எழுதினார், “ஒருவர் யூதர் என்பதற்காகத் தாக்கப்பட்டால் அவர் தன்னை யூதர் எனும் நிலையிலேயே தற்காத்துக்கொள்ள வேண்டும்; ஒரு ஜெர்மானியராகவோ, உலகக் குடிமகனாகவோ, மனித உரிமைப் போராளியாகவோ அல்ல.”

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஒரு கடலோரக் கிராமத்து நினைவுகள்

Loading

இதுபோன்று ஒருநாள் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலை இரவு உணவிற்குப் பின் (இரவு 8.30) என்னுடைய சகோதரி வாசிக்க நாங்கள் குழுமியிருந்து கேட்டோம். இரண்டு இரவுகளில் வாசித்து முடித்தோம். அப்போது எனது மூத்தும்மா (பெரியம்மா) அதில் வரும் சம்பவங்களை இடையிடையே நிறுத்தி விளக்கினார். அவருக்கு அப்போது (1988) அறுபத்தைந்து முதல் எழுபது வயதிற்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் இடையிடையே அதில் இடம்பெறும் பல சம்பவங்களையும் அவர்களால் விளக்கமுடிந்தது. மீண்டும் ஒருமுறை அந்த நாவல் அவ்வாறு படிக்கப்பட்டது. நாவலை முடித்தபோது சில விசயங்கள் கதையில் மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளதாகவும், முக்கால் பங்கு சம்பவங்கள் உண்மை என்றும், சில சம்பவங்கள் அவர்கள் காலத்தில் நடந்ததாகவும், சில அவர்களுக்கு முந்தைய தலைமுறையில் நடந்து கேள்விப்பட்டிருப்பதாகவும் கூறினார். நாவல் என்றால் புனைவுகள் இருக்கும் என்பது பெரியம்மாவிற்குத் தெரியாமல் இருந்தது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தூக்கமும் மனம் அடையும் அமைதியும்

Loading

இரவில் வெளிப்படும் மனிதன் வேறு. பகலில் வெளிப்படும் மனிதன் வேறு. பகல் அவனை வெட்ட வெளிச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது. அவன் தவறு செய்ய அஞ்சுகிறான், வெட்கப்படுகிறான். இரவு அப்படியல்ல. அது அவனை மூடி மறைக்கிறது. இரவுக்குள் செல்லச் செல்ல அவனது மிருக உணர்ச்சி கூர்மையாகிக் கொண்டே செல்கிறது. அது அவனது அறிவை மழுங்கடிக்கும் எல்லை வரை செல்கிறது. இரவில் விரைவாகத் தூங்கும் மனிதர்கள் பாக்கியவான்கள். தூக்கம் பெரும் திரையாக உருவெடுத்து அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாக மாறிவிடுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

சர்ச்சையாக்கப்படும் ஹலால் உணவு!

Loading

இந்து–முஸ்லிம் சமூக உறவுகளைக் குலைக்கும் விதமாக வலதுசாரி இந்துத்துவ இயக்கங்கள் நெடுங்காலமாகச் செய்துவரும் விஷமத்தனமான வெறுப்புப் பிரச்சாரத்தின் அறுவடையாக இந்த சொமேட்டோ, மெக்டொனால்ட் விவகாரங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. டெலிவரி பாயாகக்கூட எவ்வொரு முஸ்லிமும் தன்னிடம் வரக்கூடாது என நினைக்கும் ஒருவன், தன்னுடைய வாழ்நாளில் தான் எதிர்கொள்ளும் முஸ்லிம்களை எப்படி அணுகுவான் என்று யோசித்துப் பாருங்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இறைவனைப் படைத்தது யார்?

Loading

இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது.

இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஒரு காரணி உள்ளது. அந்தக் காரணிதான் இறைவன்.

மேலும் படிக்க