கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனின் அபத்தங்களும் ஆபத்துகளும்

Loading

அடிப்படை உரிமைகளற்று, அன்றாடம் பெரும் நெருக்கடிகளுக்கிடையில் வாழ்க்கையை நகர்த்தியபடி, இத்தேசத்தின் குடிகள் ஆவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் ஈழ அகதிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்திருக்கும் சீரியல்தான் ஃபேமிலி மேன் 2. மட்டுமின்றி, முதல் சீசன் முழுவதும் பரவிக்கிடந்த இஸ்லாமிய வெறுப்பு இரண்டாவதிலும் சிதறிக்கிடக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?

Loading

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலமான ஃபலஸ்தீன், இஸ்லாமிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இப்ராஹீம், லூத், தாவூத், சுலைமான், மூஸா, ஈஸா (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்களின் பிறப்பு அல்லது இறப்பு இம்மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது. ’இறைத்தூதர்களின் பூமி’ எனும் புகழுக்குரிய ஃபலஸ்தீனில் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருப்பது தொட்டு அங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) விண்ணுலகப் பயணம் மேற்கொண்டது வரை அதை மிகுந்த சிறப்புமிக்கதாய் ஆக்கியிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

நடிகர் விவேக் மரணமும் கொரோனா தடுப்பூசி அச்சமும் – சில குறிப்புகள்

Loading

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இரு தினங்களுக்குமுன் நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்ததற்குக் காரணம் அவர் அதற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசிதான் என்ற அச்சம் இன்று பொது மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக இயற்கை மருத்துவம் போன்ற முறைகளை உயர்த்திப்பிடிப்போர் தடுப்பூசி அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி, நிலவும் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கு எதிர்முனையில் தடுப்பூசி பாதுகாப்பானது; கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அது அவசியமானது என்று அரசும் மருத்துவர்களும் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். விவேக் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலரும் அமைச்சரும் ஒரே குரலில் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

பாவத்தின் வசீகரம்

Loading

பாவத்திற்கு ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் அது மேலோட்டமான வசீகரம். அதனுள்ளே வெறுமையும் நிராசையும் அழிவும் இருக்கிறது. உண்மையில் அது நமக்கு நாமே செய்யும் தீங்கு. அதனுள் செல்லச் செல்ல நாம் நம் சுயத்தை இழந்துவிடுவோம். நம்மை நாமே மறந்து விடுவோம். அடிமைபோன்று செயல்படத் தொடங்கிவிடுவோம்

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தன்னிறைவு

Loading

நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் யார் மாதிரியும் ஆக வேண்டாம். இங்கு ஒவ்வொருவரும் தனித்துவமான படைப்புதான். ஒருவர் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது. உங்களின் திறமைகளை, செல்வங்களை, நேரங்களை முடிந்த மட்டும் நல்வழியில் பயன்படுத்துங்கள். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும். இறைவன் உங்களுக்கு எந்தப் பாதையை இலகுபடுத்தித் தருகிறானோ அதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பாதை. எந்தப் பணியில் நீங்கள் மனதிருப்தி அடைகிறீர்களோ அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய பணி.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தீய இச்சையின் பிடியிலிருந்து விடுபட

Loading

மனம் ஏதேனும் ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாகும்போது அது தன்னுடைய சுதந்திரத்தை இழக்கிறது. அந்த பழக்கத்தை இயல்பான ஒன்றாக, அது தன் வாழ்க்கையோடு இயைந்த ஒன்றாக மனம் எண்ண ஆரம்பிக்கிறது. இந்த இடத்திலிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது. அவன் அதற்கான நியாய வாதங்களை முன்வைக்கிறான். கோட்பாட்டளவில் அதனை நியாயப்படுத்தும் கருத்தியல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கத் தொடங்குகிறான்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

போதிப்பவனும் போதிக்கப்படுபவனும்

Loading

அறம் போதிப்பவர்களின், மார்க்கம் சொல்பவர்களின் தவறுகள் மட்டும் ஏன் இந்த அளவு பூதாகரமானவையாகப் பார்க்கப்படுகின்றன? ஆம், அறம்போதிப்பவர்களை அம்பலப்படுத்தி பார்ப்பதில் மனிதர்களுக்கு ஒரு குரூரமான ஆனந்தம் இருக்கிறது. அதனால்தான் மற்றவர்களைவிட அவர்களின் தவறுகள் பூதாகரமானவையாக சித்தரிக்கப்படுகின்றன. தொடர்ந்து அவை குறித்து பேசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இன்னொரு அம்சமும் இருக்கிறது. அறம்போதிக்கும் அந்த மனிதர்களின் கீழ்மைகளைக் கொண்டு தங்களின் கீழ்மைகளை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள் மனிதர்கள். அவர்களுக்கு அதில் ஒருவித ஆறுதலும் மகிழச்சியும் உள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

றமளான்: வயிற்றுக்கு ‘விடுமுறை’ தருவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Loading

அதிகமாக உண்பது, காண்பதையெல்லாம் உண்பது இன்றைக்கு ஒரு பெரும் சமூகப் பிரச்னையாய் ஆகியிருக்கிறது. முன்பெல்லாம் இப்படியான பண்பு கொண்டோர் தீனிப்பண்டாரம் என்று கிண்டல் செய்யப்படுவதுண்டு. இதையே இன்றைக்கு ஸ்டைலாக Foodie என்பதாக அவரவர் தம் சமூக வலைதளப் பக்கங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதிலென்ன பெருமிதமோ தெரியவில்லை! தற்காலத்தில் கார்ப்பரேட் உலகு ஏற்படுத்தும் மோசமான உணவுக் கலாச்சாரம் பற்றியும் உடல் ஆரோக்கியத்துக்கு அது ஏற்படுத்தும் தீங்கு பற்றியும் சமூக நலனில் அக்கறையுள்ள அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உடல் பருமன் (Obesity), இருதய நோய்கள் (Heart Diseases), மேலும் புற்று நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் (Chronic Diseases) எல்லாம் இன்று சர்வ சாதாரணமாக நம்மைத் தாக்குகின்றன. இத்தருணத்தில் வயிற்றுக்கு ’விடுமுறை’ அளிப்பது இப்படியான பல உடல்நலக்குறைபாட்டுக்கு நிவாரணியாக அமைகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நேற்று அயோத்தி, இன்று காசி: ஞான்வாபி மசூதியும் விஸ்வநாதர் ஆலயமும் – அ.மார்க்ஸ்

Loading

நரசிம்மராவ் ஆட்சியின்போது 1991ல், “வணக்கத்தலங்களைப் பொருத்தமட்டில், 1947 ஆகஸ்ட் 15லிருந்த நிலையில் எந்த மாற்றமும் கூடாது” எனச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதாவது, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தியா முழுவதும் உள்ள வணக்கத்தலங்கள் யார் வசம் இருந்தனவோ அதில் எந்த மாற்றங்களும் இனி செய்ய முடியாது என்பது இதன் உள்ளடக்கம். அதற்கு முன்பாகப் பல ஆண்டுகளாக பாபர் மசூதிப் பிரச்னை இருந்ததால் அதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆக, இனி யாரும் எந்த ஒரு தரப்பின் ஆலயத்தையும், இது முன்னதாக எங்களிடம் இருந்தது; இதை இப்போது வைத்துள்ளவர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி பிரச்னை செய்ய இடமில்லை என்பதை அந்தச் சட்டம் உறுதிசெய்தது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

நோன்பும் மனக்கட்டுப்பாடும்

Loading

நோன்பின் மூலம் நீங்கள் தக்வா உடையவர்களாக ஆகலாம் என்று இறைவன் கூறுகிறான். தக்வா என்றால் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதும் தடுக்கப்பட்ட வழிகளைவிட்டு தவிர்ந்திருப்பதும் ஆகும். தக்வா என்பது இயல்பு நிலை. இந்த உலகில் ஒரு மனிதன் இங்கும் அங்கும் தடுமாறித் திரியாமல், ஏதோ ஒன்றுக்கு அடிமையாகிவிடாமல் இயல்பு நிலையில் நீடித்திருந்தாலே போதுமானது. உண்மையில் அதுதான் வெற்றி.

மேலும் படிக்க