கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

றமளான்: நம்பிக்கையின் மாதம்!

Loading

றமளான் மாதம் முழுவதும் தராவீஹ் தொழுகும் முஸ்லிம்களுள் பலர் மற்ற நாட்களில் பள்ளிவாசல்களில் நுழைவதுகூட அரிதாகிப்போவது ஏன்? முஸ்லிம்கள் றமளான் முழுவதும் நோன்பிருக்கிறார்கள்; அவர்களில் எந்த ஒருவரும் ஏன் தனிமையில் இருக்கும்போதுகூட உணவருந்துவதோ தண்ணீர் பருகுவதோ இல்லை? மற்ற நாட்களில் குர்ஆனைத் திறந்தும் பார்க்காத பலரால் எப்படி றமளானில் தினமும் அதை ஓத முடிகிறது?

மற்ற நாட்களில் இல்லாத வகையில் முஸ்லிம்களிடையே றமளானில் நிகழும் இப்படியான மாற்றம் வியப்பூட்டக்கூடியது. அந்த மாற்றம் அற்புதமானதும் அழகானதும்கூட! உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் றமளான் மாதத்தில் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் வணக்க வழிபாடுகளை அதிகரிப்பதிலும் பிரார்த்தனைகளின் மூலம் தங்களின் இறைவனது நெருக்கத்தை அடைய முயற்சிப்பதிலும் மிக அதிகமாக ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். அதேபோல், பாவச் செயல்களிலிருந்து விலகி தவ்பா செய்து இறைவனது பக்கம் மீள முயல்வதையும் நாம் கண்கிறோம்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஆண்மை தவறேல்!

Loading

ஆண்மை என்பதை ஏதோ நம் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வுகொண்டு மருக வேண்டிய ஓர் ஆதி பாவம் போல் சித்தரிக்கிறது இன்றைய கலாச்சாரம். ஆனால், நாம் ஒழுங்குபடுத்தி, வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு கொடை அது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

றமளானே வருக!

Loading

சென்ற ஆண்டு றமளான் நம்மை வந்தடைந்தபோது ஐவேளை கூட்டுத் தொழுகையும் ஜும்ஆ தொழுகையும் தடைப்பட்டு, அது முஸ்லிம்கள் பரிதவித்து நின்றிருந்த அசாதாரண நேரம். கொரோனா வடிவில் வந்திறங்கி விட்ட மாபெரும் சோதனையைப் பறைசாற்ற, நிற்பதற்கு இட நெருக்கடி மிகுந்த மக்காவின் கஆபா வளாகம் வெறிச்சோடிக் கிடந்த ஒரு காட்சி போதுமானதாக இருந்தது. உலகெங்கும் றமளானில் பொங்கி வழியும் உற்சாகம் அனைத்திற்கும் தடை ஏற்பட்டு, அவரவரின் தனிமையில் கழிந்தது நோன்பு. ஆண்டு ஒன்று உருண்டோடி, அச்சோதனையில் பெரும் மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடாத நிலையில், இதோ மீண்டும் றமளான். உலகெங்கும் மீண்டும் வீடடங்கு முன்னேற்பாடுகள். மீண்டும் கவலையுடன் முஸ்லிம்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா’: பிரான்ஸில் சட்டப்பூர்வமாகும் இஸ்லாமோ ஃபோபியா

Loading

பிரான்ஸின் செனட் அவையில் கொண்டுவரப்பட்டுள்ள ’பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா’ அந்நாடு முழுக்க பெரும் சர்ச்சைக்கும் விவாதங்களுக்கும் இட்டுச்சென்றுள்ளது. இந்தச் சட்ட வரைவானது இஸ்லாமோ ஃபோபியாவுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாக மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு ”இஸ்லாமியப் பிரிவினைவாதத்துக்கு” எதிரான மசோதா என்பதாக இதை முன்வைத்து வருகிறது.

பிரான்ஸ் நாடு 2004ல் ஹிஜாப், டர்பன் உள்ளிட்ட மத அடையாளங்களை பள்ளிக்கூடங்களில் தடை செய்தபோதும், 2011ல் முகத்திரை அணிவதைத் தடை செய்தபோதும், 2016ம் ஆண்டு பல பகுதிகளில் புர்கினி (முழு உடலையும் மூடும் வகையிலான நீச்சல் உடை) தடை செய்யப்பட்டபோதும் இதேபோன்ற விவாதங்கள் மேலெழுந்தன. பிரான்ஸின் மதச்சார்பின்மை எந்த அளவு மூர்க்கமாக மத அடையாளங்களை ஒடுக்குகிறது என்பது அப்போது பெரிதும் பேசப்பட்டது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இறைவனின் இருப்பை அறிவியலால் நிரூபிக்க முடியுமா?

Loading

அறிவியல் சொல்வது மட்டுமே உண்மை என்று நம்புவது அறிவியல்வாதம் எனப்படுகிறது. இன்று நாத்திகர்கள் பலர் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ குருட்டுத்தனமாக இந்தக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். இதன் விளைவாக அவர்கள் எழுப்பும் அபத்தமான கேள்விகளுள் ஒன்று, இறைவன் இருக்கின்றான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா என்பது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள் – பேரா. இர்ஃபான் அஹ்மது உரைத் தொகுப்பு

Loading

கடந்த பிப்ரவரி மாதம் 25 அன்று ஆஸ்திரேலியா இந்தியா முஸ்லிம் மன்றம் (AIMF) நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பேரா. இர்ஃபான் அஹ்மது, ‘இந்து ஓரியண்டலிசத்தின் முகங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். 2014ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் போக்கும் நகர்வும் புதிய பரிமாணத்தை எட்டியிருப்பதை அறிவோம். அதை வெறுமனே அரசியல் ரீதியில் அணுகாமல், அதன் அறிவுசார் அடித்தளத்தை நாம் இனங்காண வேண்டும் என்கிறார் இர்ஃபான் அஹ்மது. அதைக் குறிக்கவே ‘இந்து ஓரியண்டலிசம்’ எனும் புதிய பதத்தைப் பயன்படுத்துகிறார்.

இங்கு முதன்மையானது அறிவமைப்புதான் (Knowledge System) என்று சுட்டிக்காட்டும் அவர், சமகால அரசியல் போக்கானது கடந்த காலத்திலிருந்து (குறிப்பாக நேரு, காந்தி, பட்டேல் போன்றோர் பாதையிலிருந்து) தடம் புரண்டதால், திசை மாறியதால் உருவாகியிருப்பதாக நிலவும் பொதுக் கருத்தைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, கடந்த காலத்தின் நீட்சியாக தற்போதைய சூழலைக் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறைச்சாலைகளில் மட்டும் இந்திய முஸ்லிம்களுக்குக் கூடுதல் ‘பிரதிநிதித்துவமா’?!

Loading

முஸ்லிம் மக்கள் தொகையைவிடவும் சிறைச்சாலைகளில் அவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், மேற்குவங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் தம் மக்கள் தொகை வீதத்தைவிடவும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.

அஸ்ஸாம், கேரளா, பிஹார் (ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும்) ஆகிய மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம் சிறைவாசிகளின் வீதமும் மொத்த முஸ்லிம் மக்கள் தொகை வீதமும் பொருந்திப்போகின்றன.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

நபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – ஓவியர் மதுரை ரஃபீக் நேர்காணல்

Loading

அரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை, பூக்களைப் பார்த்து அதே மாதிரி வரைந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, தாஜ்மஹாலைச் சொல்லலாம். மேலிருக்கும் Dome (மைய மண்டபத்தின் கூம்பு வடிவக் கூரை) மலரின் மொட்டாகவும், சுற்றியுள்ளவை இலையாகவும், மினாராக்கள் மல்லிகைக் கொடியாகவும் உருவகிக்கலாம்.

நபிகள் நாயகம் அவர்கள் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைக்கான கிரியா ஊக்கியாகவே வினை புரிந்ததிருப்பதை வரலாறு பதிவுசெய்துள்ளது. Miniature Painting நுண்கலையில் புதிய தனி பாணியொன்றைக் கட்டியமைத்தது முஸ்லிம்களே.

மேலும் படிக்க
காஷ்மீர் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

குணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்!

Loading

குணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன. ஆனாலும் நீதிக்கான கஷ்மீரிகளின் போராட்டம் தொய்வின்றி தொடர்கிறது. அந்த வகையில், பிப்ரவரி 23ம் தேதியான இன்று கஷ்மீர் பெண்களின் போராட்ட நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை

Loading

மௌலானா மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை ஆதாரமற்றவை. காழ்ப்புணர்ச்சி, அறியாமை, குறுகிய மனப்பான்மை, சிந்தனைக் குழப்பம் ஆகிய காரணங்களினாலேயே எழுந்துள்ளன.

மேலும் படிக்க