கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (1)

Loading

இஸ்லாமிய அழைப்பாளரும், அலஸ்னா நிறுவனத்தின் நிறுவனருமான டேனியல் ஹகீகத்ஜு, இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் மீது நவீனத்துவம் தொடுக்கும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர். நாத்திகம், தாராளவாதம், பெண்ணியவாதம், மதச்சார்பின்மைவாதம் போன்ற ஆதிக்கக் கருத்தியல்கள் இவரின் பிரதான பேசுபொருள்களாக விளங்கின்றன. Dark Storms: The Modernist Challenge to Islam எனும் கருப்பொருளில் அவர் வழங்கிய ஆன்லைன் கோர்ஸின் சுருக்கப்பட்ட வடிவமே இந்தத் தொடர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மெளதூதியைக் குறிவைக்கும் இந்துத்துவர்கள்

Loading

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மெளதூதி, சையித் குதுப் புத்தகங்களுக்குத் தடை விதிக்கும் முடிவை எடுத்திருப்பது பதற்றத்தால் அல்லது கோழைத்தனத்தால்தான்.

முதலில், பாடத்திட்டம் தொடர்பான ஒரு கடிதம் யாருக்கு எழுதப்பட வேண்டும்? பிரதமருக்கா அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவுக்கா (யூஜிசி)? யூஜிசி ஏதாவது சொல்லியிருந்தால் அந்தக் கல்வி நிறுவனம் அதுகுறித்து ஒரு நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, கல்விப்புலத்துக்கு சம்பந்தமில்லாத, அரசியல் உள்நோக்கு கொண்ட சிலர் ஆற்றிய வினைக்கு AMU போன்ற ஒரு மதிப்புக்குரிய கல்வி நிறுவனம் இப்படி எதிர்வினையாற்றியிருக்கக் கூடாது. இதற்குப் பதிலாக, பல்கலைக்கழகத் தன்னாட்சி, அறிவுசார் சுதந்திரம், எதுவெல்லாம் “Indic” ஆகியவற்றை விவாதத்துக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் AMU ஒரு நியாயமற்ற, பிளவுவாதக் கோரிக்கைக்குப் பணிந்துவிட்டது!

மேலும் படிக்க
nv ramana tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்’: என்.வி. ரமணாவின் பேச்சும் செயல்பாடும்

Loading

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஓய்வு பெற்றார். தனது பதவிக்காலத்தில் அரசியலமைப்பைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி 29க்கும் மேற்பட்ட உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். எனினும், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், நடுவர் மன்ற மறுஆய்வு தேவைப்படும் 53 வழக்குகள் முன்பிருந்ததைப் போலவே கிடப்பில் போடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க
psychoanalysis tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நவீன மனநல மருத்துவத்தின் வன்முறை

Loading

நண்பர்களோடு உளநிலை குறித்து உரையாடும்போது “டிப்ரஷனா இருக்கு..” என்பது தவிர்க்க முடியாத வசனமாகிவிட்டது. கவலை, துக்கம் என உளம் சார்ந்த இயல்பான அனைத்து இடர்பாடுகளும் டிப்ரஷனாக மட்டுமே அடையாளம் காணப்படுகிறது. ஏன் தொடர்ந்து அனைவரும் ஒரே விதமாகத் தங்களின் உளநிலையை மொழிப்படுத்துகின்றனர் என்று ஆழ்ந்து பார்த்தால், அதைத்தான் உள மருத்துவர்களும், anti-depressants தயாரிக்கும் நிறுவனங்களும் விரும்புகின்றன என்பது புலப்படும்.

இப்படி மொழி ஒரே விதமாக அமையும்போது உரையாடுவதற்கு வசதியாக அமைந்துவிடுகிறது. உள மருத்துவர்களும் எளிமையாக “உன் செரடோனின் (serotonin) அளவு குறைவாக இருப்பதால்தான் உனக்கு டிப்ரஷன்..” என்று சொல்வதற்கு வசதியாக இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதில் இவர்களுக்கு ஆர்வமில்லை. அதற்கான சட்டகமும் அவர்களிடம் இல்லை. ஒரு பாக்டீரியாவை நீக்குவதுபோல அதை நீக்க முனைகிறார்கள். அவ்வளவுதான். மூளையின் வேதியியல் கூறுகளைக் கொண்டு மட்டுமே மானுட நிலைமையை (human condition) சொல்லிவிட முடியுமா?

மேலும் படிக்க
bulldozer politics tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் அழகியலும் இந்து தேசியக் களியாட்டமும்

Loading

முஸ்லிம்களைத் தாக்குவதைக் கண்காட்சியாக்குவதன் மூலம் ஒரு பெருங்கொண்ட மக்கள்திரள் சத்தும் சாரமுமற்ற வாழ்வில் ஒரு உந்துசக்தியைப் பெறுவதாக உணர்கிறார்கள். அகத்திலும் புறத்திலும் இருக்கும் வாழ்க்கை பாரத்தைத் தாங்க முடியாத மக்களுக்கு அவர்களது வலியை குணப்படுத்துவதற்குப் பதிலாக வலியை மறத்துப்போகச் செய்யும் போதை வஸ்துகளைக் கொடுத்து பிறழ்ச்சியான இன்பத்திளைப்பில் திளைக்கச் செய்வதற்கு எவ்வகையிலும் மாறுபட்டதல்ல இந்து தேசியவாத அரசியல். போதை கிடைத்துக்கொண்டே இருக்க, முஸ்லிம்கள் வதைபட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு முஸ்லிம் வதை என்பது வெகுமக்கள் திரளின் களியாட்டத்துக்கான தியேட்டராகவும், முஸ்லிம்களின் கண்ணீரும் அங்கலாய்ப்பும் ஃபாசிஸ்ட் போர்னோகிராஃபியாகவும் மாறிவிட்டது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறிவியலின் தத்துவம் – ஓர் அறிமுகம்

Loading

அறிவியல் என்றால் என்ன என்று கேட்டால் இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலானவை அறிவியல் என்றே பலரும் பதிலளிப்பார்கள். ஆம், இவையெல்லாம் அறிவியல் ‘பாடங்களே’ என்றாலும், ஏன் நாம் இவற்றை மட்டும் அறிவியல் என்கிறோம்? மற்ற பாடங்களையும் துறைகளையும் ஏன் அறிவியல் என்று அழைப்பதில்லை? இந்தத் துறைகளிடம் உள்ள எந்தத் தன்மை இவற்றை அறிவியல் என்று அடையாளப்படுத்துகிறது? யார் இந்தத் துறை அறிவியல் என்றும், இந்தத் துறை அறிவியல் இல்லை என்றும் முடிவு செய்வது? எதன் அடிப்படையில், எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவை எடுப்பது?

மேலும் படிக்க
sita ramam review tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சீதா ராமம்: காதல் காவியம் அல்ல, காவி விஷம்!

Loading

சீதா ராமம் திரைப்படத்தில் பல காட்சிகளில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாக இடம்பெறுகிறது. அதை நைச்சியமாக முன்வைப்பதற்கெல்லாம் படக்குழுவினர் மெனக்கெடவே இல்லை. அதுபோல, தெலுங்குப் படத்துக்கே உரிய க்ரிஞ்சு அம்சங்கள் திரைப்படம் நெடுக இடம்பெறுகின்றன. ஆனால் யூடியூபில் பட விமர்சனம் தரும் பிரஷாந்த், ப்ளூ சட்டை போன்ற பலர் இதை ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க
ali manikfan tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அலீ மனிக்ஃபான்: பேரண்ட ஆற்றலின் தூதர்

Loading

அந்தக் கல் கட்டடத்தின் வாயிலிற்கு ஓலை கிடுகினாலான கதவு.. சன்னலின் இடத்தில் வட்ட வடிவிலான சிமிட்டி கிராதிகள்.

அந்த கிடுகு , கிராதி துளைகள் வழியாக அரூப மாயாவியான காற்றானது குடிலுக்குள் வருவதும் போவதுமாக இருந்தது. வீட்டின் உள்ளே வாழ்க்கையை அன்றாடம் நகர்த்திச் செல்வதற்குத் தேவையான மிக எளிய தளவாடங்களே இருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் வளர்ந்து நின்றன. அந்த மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

தலைப்பாகையும் கை பனியனும் லுங்கியும் அணிந்திருந்த அவர் எங்கள் நண்பர்கள் குழாமை பனங்கற்கண்டும் எலுமிச்சை சாறும் கலந்த பானகம் தந்து வரவேற்றார். அவர்தான் அலீ மனிக்ஃபான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் கதாநாயகியைக் கொண்ட மிஸ் மார்வல் தொடர் எப்படியிருக்கிறது?

Loading

அமெரிக்க முஸ்லிம்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அடையாளச் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைத் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் கரிசனத்தோடு சித்தரிக்க முயன்றுள்ளது மிஸ் மார்வல் தொடர். நியூயார்க் நகரத்தில் இருக்கும் பள்ளிவாசலையும், அதனுள்ளே இயங்கும் ஒரு பண்பாட்டு வெளியையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. அதேபோல், பல்வேறு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட, அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இஸ்லாமியர்கள் தங்களது பண்டிகைகளையும், வீட்டு விஷேசங்களையும் ஒன்றிணைந்து கொண்டாடுவதைக் காட்டுவது நெகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. உதாரணமாக, கமலா கானின் அண்ணன் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்வார். அவரும், இஸ்லாமியர் அல்லாத கமலாவின் மற்ற நண்பர்களும் பாகிஸ்தான் முஸ்லிம்களின் பண்பாட்டு உலகிற்குள் நுழைந்து, ஈத், திருமணம் முதலான அவர்களின் கொண்டாட்டங்களில் மகிழ்வோடு கலந்துகொள்ளும் காட்சி அத்தனை இனிமையாக இருந்தது.

மேலும் படிக்க
bulldozer politics bjp tamil afreen fatima கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் பயங்கரவாதம்: இஸ்ரேலைப் பின்பற்றும் இந்தியா

Loading

உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.

இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.

மேலும் படிக்க