தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 2)

Loading

ஒரு இறைத்தூதர் மற்றும் ஆட்சித் தலைவர் என்ற வகையில் நீடித்த அவருடைய பணிக்காலத்தின் போது, அரசவை எழுத்தரென்று ஒருவர் இருந்துகொண்டு அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. அதேபோல் அவருடைய ஆணைகளையும் மார்க்கத் தீர்ப்புகளையும் அன்றாடப் பேச்சுகளையும் அப்படியொருவர் எழுத்து வடிவத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், நபித்தோழர்கள் என்றறியப்படும் இறைத்தூதரோடு வாழ்ந்த முஸ்லிம்கள்தான் அவற்றைத் தங்கள் நினைவில் ஞாபகங்களாகவோ, அல்லது ஏதோவொரு வகையில் எழுத்து வடிவிலோ பாதுகாத்து வந்ததுடன் அடுத்தவர்களுக்கும் பரப்பினார்கள். இந்த அறிவிப்புகள் வாய்மொழியாகவோ, அல்லது எழுத்து வடிவிலோ தொடர்ச்சியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. அறிஞர்கள் அவற்றை நிரந்தரமான திரட்டுகளில் தொகுக்கும்வரை இந்நிலை தொடர்ந்தது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 7) – மரியம் ஜமீலா

Loading

“இஸ்லாத்தின் போதனைகளின்படி, நீதமான வழியில் ஒருவன் சம்பாதித்த அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருட்கொடைக்கு வரம்பு ஏதும் இல்லை. முறைகேடான சொத்து எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது முறைகேடானதே. முறையாக சம்பாதித்த சொத்து எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது முறையானதே. தனிச் சொத்துக்களை பலப்பிரயோகம் செய்து அரசாங்கம் கைப்பற்றுவதைவிட –சிறிய நோய்க்கு பெரிய நோய் கொண்டு சிசிச்சை அளிப்பதை விட- அநீதமாக செல்வம் குவிவதற்கு வழிவகுக்கும் முறைகேடான வழிகளனைத்தையும் தடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அறிமுகம்

Loading

“நான் சின்னஞ்சிறியவனாகவும் ஹஜ் பிரம்மாண்டம் கொண்ட ஒன்றாகவும் இருக்க, ஹஜ்ஜிலிருந்து தனிப்பட்ட முறையில் நான் கற்றுக் கொண்டதென்ன? இந்த அனுபவத்தால் எவ்வளவு தூரம் நோக்க முடிகிறது? தொடர்ந்துவரும் பக்கங்கள் இக்கேள்விகளுக்கு விடைகாண நான் மேற்கொண்ட எளிய முயற்சிகளின் விளைவாகும். எனது நோக்கம் ஹஜ்ஜின் போது என்ன செய்ய வேண்டுமென வாசகனுக்கு அறிவிப்பதல்ல. கிரியைகளின் வழிமுறைகள் (மனாசிக்) பற்றிய நூலை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம். அதற்குப் பதிலாக ஹஜ்ஜின் மெய்ப்பொருள் பற்றிய எனது கண்ணோட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஹஜ்ஜை நிறைவேற்றுவது முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வதற்கு இக்கருத்துகள் உதவ வேண்டும். அல்லது குறைந்த பட்சம், ஹஜ்ஜை பற்றி சிந்திக்கவாவது இவை உங்களைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.” – அலீ ஷரீஅத்தி

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா

Loading

“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 1)

Loading

நபிகளாரின் முன்மாதிரி நடத்தை மரபு, சுன்னாஹ் என்று அறியப்படுகிறது. கண்ணிய மதிப்பை பொறுத்தவரை அது திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்தான் வருகிறது என்றாலும், வேதப் புத்தகமே கூட அதன் கண்ணாடி வழியாகத்தான் பொருள்கொள்ளப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை நபிகளாரின் சுன்னாஹ்வானது வேதப் புத்தகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி, அதனை வடிவமைத்து, அதற்கு குறிப்பான பொருள் வழங்கி, அதனுடன் கூடுதல் விவரங்களைச் சேர்க்கும் பணியைச் செய்து வந்துள்ளது. எனவே, இஸ்லாத்தின் தூதுச் செய்தி எப்படி ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவுக்கு வெளியே பரவியது என்பதையும்; எப்படி அது பல்வேறு சட்டவியல், இறையியல், மறைஞான மரபுகளை உருவாக்கி வளர்த்தெடுத்தது என்பதையும்; இஸ்லாமிய நாகரிகத்தின் கலாச்சார பரிமாணங்களையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் முஹம்மது நபி விட்டுச்சென்ற பாரம்பரிய மரபினை படிப்பதிலிருந்தே துவங்க வேண்டியுள்ளது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 1)

Loading

பெருமானார் எவ்வாறு அதிகாரத்தை வென்றெடுத்தார்கள்? அவர்கள் செய்துகொண்ட எண்ணற்ற உடன்படிக்கைள், அந்த அதிகாரத்தை வலுவூட்டுவதில் எத்தகைய பாத்திரம் வகித்தன? நபிவரலாறு பற்றிய ஆய்வாளர்கள் நபிகளாருடைய கடிதங்கள், உடன்படிக்கைகள், ஆவணங்கள் என இதுநாள்வரை 250 முதல் 300 வரையானவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அசல் கடிதங்களில் சில இன்றும் பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றன. எழுத்துத் திறன்கள் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காத அந்தக் காலத்திலேயே, நபியவர்களாரின் கடிதங்களும் உடன்படிக்கை ஆவணங்களும், அதேபோல குர்ஆனின் அனைத்து வேதவெளிப்பாடுகளும் மிகவும் கவன சிரத்தையுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்கும்போது வெகுசுவாரஸ்யமாக இருக்கிறது. இத்தனைக்கும் அப்போது மக்காவில் வெறும் 17 பேருக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 5) – மரியம் ஜமீலா

Loading

“இஸ்லாம் தனது மனித சமத்துவம் என்ற கருத்துருவாக்கத்தை ஒரு விளைவற்ற தத்துவமாக வழங்கவில்லை. இக் கருதுகோளின் அடிப்படையில் ஒரு சமூகத்தை நிறுவியது. அச் சமூகத்தில் பல்வேறு இனங்களையும் தேசங்களையும் முழுமையான சமத்துவத்தின் அடிப்படையில் ஒன்று சேர்த்தது. அனைத்து இன, நிற, மொழி அல்லது தேசிய வேறுபாடுகளும் அழிக்கப்பட்டன. அது மட்டுமல்ல. இதே கொள்கையின் அடிப்படையில் ஒரு உலகளாவிய தேசத்தை நிறுவி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டியது. முழு முஸ்லிம் உலகமும் ஒரே சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டது. முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத் திகழ்ந்தனர். ஒருவர் –அவர் கிழக்கிலிருந்து வந்திருப்பினும் மேற்கிலிருந்து வந்திருப்பினும்- இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் உடனே அவர் இஸ்லாமியச் சமூகத்தின் உறுப்பினராக மாறிவிடுவார்; மேலும் பிற முஸ்லிம்களைப் போன்றே சம உரிமைகளையும் தனிச் சலுகைகளையும் அனுபவிப்பார்.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 3) – சையித் குதுப்

Loading

ஜாஹிலிய்யாவை அறிந்தவரால்தான் இஸ்லாத்தின் அவசியத்தை, சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும். இந்த மார்க்கத்தின் பரிபூரணத் தன்மையையும் ஒத்திசைவையும் அது வெளிப்படுத்தும் உண்மையின் எளிமையையும், அதனைத்தவிர மற்ற கொள்கைகளையும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளையும் அறிந்தவரால்தான் மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். அச்சமயத்தில்தான் இந்த மார்க்கம் உண்மையான அருட்கொடையாகத் தென்படும். அதன் அழகியலும் எளிமையும் தெளிவும் ஒத்திசைவும் நெருக்கமும் மனித அறிவுக்கும் உள்ளத்திற்கும் ஒட்டுமொத்த மனித வாழ்வுக்கும் மிகப் பெரிய அருட்கொடையாகும். அது மனித இயல்போடு முழுவதுமாக ஒன்றிப் போகக்கூடியது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 2) – சையித் குதுப்

Loading

“கிருஸ்தவர்கள் ரோம அரசாட்சியை வென்றபோதிலும் அவர்களால் சிலைவணக்கத்தை அடியோடு அழிக்க முடிவில்லை. மாறாக சிலைவழிபாடு அவர்களின் மார்க்கத்தோடு ஒன்றுகலந்தது. கிருஸ்தவமும் சிலைவழிபாடும் ஒன்றிணைந்து புதிய மார்க்கமாக தோற்றம் பெற்றது. இந்த இடத்தில்தான் இஸ்லாம் கிருஸ்தவத்தைவிட்டு வேறுபடுகிறது. அது சிலைவழிபாட்டை அடியோடு வீழ்த்தி தன் தூய கொள்கைகளை மக்களிடையே பரப்பியது.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 4) – மரியம் ஜமீலா

Loading

“எமது ‘பெருங்குற்றம்’ என்னவெனில், இஸ்லாமிய நம்பிக்கை விஷயத்தில் நாம் நயவஞ்சகர்களாக இல்லாதிருப்பதும் நம் சமூக அலுவல்களை இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கும் முயற்சிகளில் நாம் பேரார்வத்துடன் இருப்பதுமே ஆகும். இஸ்லாம்தான் எங்கள் மார்க்கம் என நாம் பிரகடனப்படுத்தும் பொழுது, இயல்பாகவே இஸ்லாம் தான், இஸ்லாம் மட்டுமே, எங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் –அது நன்னடத்தை சம்பந்தமான, நம்பிக்கை அல்லது கொள்கை, கல்வி அல்லது ஒழுக்கம் சம்பந்தமான, சமூக கலாச்சார முயற்சிகள், அரசியல், பொருளாதார அமைப்பு, சட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் என எல்லாவற்றையும்- வழி நடத்துவதாக அமையும். அணு அளவேனும் நம்மை மாசுபடுத்தும் எந்தவொரு அந்நிய செல்வாக்கையும் நம் தனி மற்றும் தேசிய வாழ்விலிருந்து துடைத்தெறிய வேண்டும். இவ்விஷயத்தில் எத்தகைய சமரசத்தையும் பொருட்படுத்த மாட்டோம்; எதைப் பிரகடனம் செய்தோமோ அதையே நடைமுறைப்படுத்துவோம்.”

மேலும் படிக்க