தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)

Loading

மக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 5) – சையித் குதுப்

Loading

‘இயற்கை’ என்றால் என்ன? அது இந்த பிரபஞ்சத்தின் பருப்பொருளா? இந்தப் பருப்பொருளின் உண்மைநிலை என்ன? அவர்கள் பருப்பொருள் என்று கூறுவதை நிலையான ஒன்றாக எண்ணினால் அதன் உண்மை நிலையை வரையறுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கும். பருப்பொருள் குறைகிறது, அதிகரிக்கிறது எனில் அதிகரிப்பதுதான் இயற்கையா? அதுதான் பருப்பொருளா? அல்லது இந்த அதிகரிப்பு நிகழும் வடிவம்தான் பருப்பொருளா? இந்தக் கடவுள் ஒரு நிலையில் நிலைத்திருப்பதில்லை! அவர் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறார், முன்னேறுகிறார்! இவற்றில் எந்த நிலையில் அது மனித அறிவைப் படைக்கும் திறனைப் பெறும்? அதுதான் தன் வடிவத்தை என்றும் இயங்கக்கூடியதாகப் படைத்துள்ளதா? கதிர்களிலிருந்து அணுவை நோக்கி, அணுவிலிருந்து பருப்பொருளை நோக்கி… அணுவிலிருந்து கதிர்களை நோக்கி! இந்தக் கடவுள் எப்போது படைக்கும் திறனைப் பெற்றது? எந்த நிலையில்? எவனது அறிவை இயற்கை படைத்ததோ அந்த மனிதனைப் படைத்தது யார்? அந்த இயற்கை ஆரம்பத்திலேயே அதனைப் படைத்ததா? அல்லது அவனது இருப்பிற்குப் பின்னர் அவனது அறிவைப் படைத்ததா?

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 4) – சையித் குதுப்

Loading

மனிதன் இறைவனிடமிருந்து பெற்ற இஸ்லாமியக் கண்ணோட்டம் தூய அருட்கொடையாகும். அது அறியாமைமிகுந்த, பலவீனமான மனிதனை பலனில்லாமல் வீணாகக் களைப்படைவதிலிருந்து காப்பாற்றி அவனது ஆற்றல்களை அவனுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான பணிகளில் பயன்படச் செய்தது. அந்த அருட்கொடையை மனிதனுக்கு வழங்கிய இறைவன் அதையே அவனுக்கு ஆதாரமாக, அளவுகோலாக ஆக்கியுள்ளான். அது, மனிதன் அதனைப்பெற்று அதனடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன் வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் அதனையே அளவுகோலாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான். ஆனால் மனிதர்கள் இந்த அருட்கொடையை விட்டுவிட்டதனால் வழிகெட்டுத் தடுமாறித் திரிந்தார்கள். சிரிப்பூட்டக்கூடிய, அழுகையை உண்டாக்கக்கூடிய கண்ணோட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்கினார்கள். அவை அவர்களின் வாழ்வை சீர்குலைத்ததோடு பெரும் குழப்பத்திலும் காரிருளிலும் அவர்களைத் தள்ளிவிட்டன.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 3) – சையித் குதுப்

Loading

மனிதன் பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிக்கேற்பவே அவன் படைக்கப்பட்டுள்ளான். (பூமியில் இறைவனின் பிரதிநிதியாகச் செயல்படுவதே அவன் ஆற்ற வேண்டிய பணியாகும்) பொருள்களின் விதிகளை அறிந்து அவற்றை வசப்படுத்துவதில் மனிதன் முன்னேறிச் செல்கிறான். ஆனால் அதேபோன்று அவனால் தன்னைக்குறித்த உண்மைநிலையை அறிந்துகொள்ள முடியவில்லை. மனிதப் படைப்பின் இரகசியங்கள், வாழ்வு மற்றும் மரணம் குறித்த இரகசியங்கள் மறைவாகவே உள்ளன. அவற்றைக்குறித்து சிறிதளவுகூட அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 9) – மரியம் ஜமீலா

Loading

“கிழக்குப் பாகிஸ்தானில் இஸ்லாத்திற்கும் ஐக்கிய பாகிஸ்தானிற்கும் விசுவாசமான பல இலட்சக்கணக்கான முஸ்லிம் வங்காளிகளும் வங்காளியல்லாதோரும் இந்திய இராணுவம் மற்றும் முக்தி பாஹினியின் கூட்டுக் கொலைகள், கூட்டுக் கைதுகள் மற்றும் பரவலான இரையாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு கொடூர ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். ராக்கெட் மற்றும் குண்டுகளால் தாக்கப்படும் வங்காளியல்லாத முஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதிகள் நிர்மூலமாக்கப்படும் அபாயத்தில் உள்ளன. டாக்காவில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வங்காளியல்லாத முஸ்லிம்கள் துடைத்தழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். மத மற்றும் கல்வி நிறுவனங்கள் அழிக்கப்பட்டு மூடப்படுகின்றன. வங்காள முஸ்லிம் உலமாக்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது கைது செய்யப்படுகிறார்கள். பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகள் நடைபெறுவது சிரமமாகிவிட்டது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஒடுக்குமுறை என்ற கட்டுக்கதைகளை ஒலித்துக் கொண்டிருந்த வல்லரசுகளும் பிற நாடுகளும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் என்று கூறப்படுவதன் ஆக்கிரமிப்புப் படைகள் செய்யும் அடக்குமுறைகள் மட்டும் அடக்குமுறைகளே இல்லை என்பது போலும் அவை நன்மையானவை என்பது போலும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. தயவு செய்து இந்த இரத்தக் களரியையும் ஒடுக்குமுறையையும் நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுங்கள்!”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ரூமியை இஸ்லாம்நீக்கம் செய்வதன் பின்னுள்ள அரசியல்

Loading

“மொழி என்பது வெறும் தொடர்புறுத்தலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நினைவின், பாரம்பரியத்தின், கலாச்சார முதுசத்தின் சேமிப்புக் களன்” என்கிறார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆன சினான் அண்ட்டூன் (Sinan Antoon). இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக இருப்பதனால், மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கொள்வது ஒரு அரசியல் வேலைத்திட்டம் (Political project) ஆகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு கவிஞர் தற்கால அமெரிக்க வாசகருக்கு புரியும் வண்ணம் அவர்கள் தான் ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மூலப்பிரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதன்மூலம், ரூமியின் விஷயத்தில், ஒரு ஷரியாத் துறை பேராசிரியரும் கூட உலகம் முழுக்க விரும்பி படிக்கப்படும் காதல் கவிதைகளை எழுத முடியும் என்று வாசிப்பவர்களால் அங்கீகரிக்க முடியும்.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

அல்பகறா (பசுமாடு) அத்தியாயம் – முன்னுரை (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிரமங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அல்பாத்திஹா: ஆரம்பம் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அல்லாஹ்வைக்குறித்து, அவனது பண்புகள் குறித்து, அவன் படைப்புகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து சரியான கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதற்கு இஸ்லாம் மேற்கொண்ட நீண்ட நெடிய முயற்சியை திரும்பிப் பார்ப்பவர் – குர்ஆனின் வசனங்கள் இந்த முயற்சியை படம்பிடித்துக் காட்டுகின்றன – மனித சமூகத்தில் மண்டிக்கிடந்த தவறான கொள்கைகள், தீய கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் குவியல்களை அறியாமல் இஸ்லாம் மேற்கொண்ட இந்த நீண்ட நெடிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியாது. அந்தக் குவியல்களை ஆராய்ந்து பார்ப்பது இந்த முயற்சியின் அவசியத்தைத் தெளிவுபடுத்தும். மனிதனின் மனதை இத்தகைய பல்வேறு வகையான கடவுள்கள், கண்ணோட்டங்கள், யூகங்கள், புராணங்கள் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு இஸ்லாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதும் தெளிவாகும்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

திருக்குர்ஆனின் நிழலில் – முன்னுரை

Loading

திருக்குர்ஆன் ஓர் நித்தியத்துவப் பிரதி. அருளப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா விரிவுரைகள் அதற்கு. உலகம் சுழன்று கொண்டிருக்கும் வரை அவை தொடர்ந்த படியேதான் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில். அற்புதமான தரிசனங்களை தந்தபடியே இருக்கும். மனிதன் தனது சிந்தனை என்ற பிஞ்சுக் கைகளால் இறைஞானப் பெருங்கடலை அள்ளிப்பருகி விடுவதற்கான அசாத்திய முயற்சி. இலக்குகளை அடையுந்தோறும் நீண்டுகொண்டே செல்லும் முடிவுறாப் பயணம். அத்தகைய திருக்குர்ஆன் வியாக்கியான மரபில் சையித் குதுபின் ‘திருக்குர்ஆனின் நிழலில்’-க்கு மறுக்கமுடியாத ஓர் இடம் எப்போதும் உண்டு. முன்முடிவுகளின்றி காலியான திறந்த மனத்தோடு திருக்குர்ஆனுடன் உரையாடி, உறவாடி அவர் தன் நெஞ்சத்தில் நிரப்பிக் கொண்ட ஒளியை ஏனைய மனிதர்களோடு பகிர்ந்துகொள்ள எடுக்கப்பட்ட பிரயத்தனத்தில் உதித்த இந்த தஃப்சீரை அழகுற தமிழுக்கு பெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம், வல்ல இறைவனின் உதவியை மட்டுமே நம்பி….

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 2) – சையித் குதுப்

Loading

மனிதச் சிந்தனை இந்தக் கண்ணோட்டத்தை உருவாக்காவிட்டாலும் அது மனிதனின் செயல்படும் தளத்திற்கு எதிரானதல்ல. அதனைப் பெற்று அதனடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே மனிதனின் பணி. நாம் ஏற்கனவே முன்னுரையில் குறிப்பிட்டவாறு இதனை தீர்மானிக்கப்பட்ட வேறு வகையான மதிப்பீடுகளைக்கொண்டு மதிப்பிடவோ வேறொரு கண்ணோட்டத்தைக்கொண்டு அணுகவோ முடியாது. மனிதன் தனக்குத் தேவையான மதிப்பீடுகளையும் அளவுகோல்களையும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டே அவன் தன்னைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையான விசயங்களை அவன் இறைவேதத்திலிருந்தே பெற வேண்டும். வேறு எந்த ஒன்றிலிருந்தும் அவற்றைப் பெறக்கூடாது. இது ஒன்றே அவனது நிகழ்கால வாழ்க்கையில் அவன் காணும் சிந்தனைகள், கண்ணோட்டங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கான அளவுகோல். இதன்மூலம் அவன் சரியானதையும் தவறானதையும் அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க