கட்டுரைகள் 

நினைவலைகளும் புதுப்புது அனுபவங்களும்

எல்லாம் ஒரு கனவுபோல நிகழ்ந்துவிடுகின்றது. கனவுக்கும் நிஜத்திற்கும் மத்தியிலுள்ள மெல்லிய திரை சில சமயம் அகற்றப்பட்டுவிடுகிறது. நாம் எதிர்பார்க்காதவற்றையும் வாழ்வு கொண்டு வந்துவிடுகிறது. எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்கள் சில சமயங்களில் நம் கண்ணோட்டங்களைக்கூட மாற்றிவிடுகின்றன. வாழ்வு அதன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. நாம் வலுக்கட்டாயமாக அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தர்க்கத்திற்கு அப்பால்

கனவுகள் எப்படி தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவையோ அப்படித்தான் நம் வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்வுகளும். அப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளத்தான் செய்வார்கள். பெரும்பாலோர் அவற்றை கவனிப்பதில்லை அல்லது அவற்றைக் குறித்து சிந்திப்பதில்லை. மிகச் சிலரே அவற்றிற்குப் பின்னாலிருக்கும் மறைகரம் குறித்து சிந்திக்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பொறாமையும் அகங்காரமும்

மனதின் பேராசையையும் அகங்காரத்தையும் வெல்வதுதான் ஆன்மீகத்தின் நோக்கம். நம்மைச் செயல்படத் தூண்டும் காரணிகளாக இருக்கும் அகங்காரத்தையும் பேராசையையும் அகற்றி அந்த இடத்தில் இறைதிருப்தியை அமர வைப்பதுதான் இஸ்லாம் கூறும் ஆன்மீகத்தின் நோக்கம். இந்த நிலைதான் மனிதன் ஆன்மீகத்தின் உச்ச நிலை. இறைதிருப்தியே அவனை செயல்படத் தூண்டுகிறது. அகங்காரமோ பேராசையோ அல்ல. நாம் அகங்காரத்திற்கு முன்னால்தான் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறோம். பணிவுக்கு முன்னால் அகங்காரத்தை வெளிப்படுத்த மாட்டோம். புகழை விரும்பாதவர்களை நாம் புகழ்வதும் புகழ்வெறி கொண்டவர்களை நாம் சிறுமைப்படுத்த எண்ணுவதும் இதனால்தான். நம்முடைய செயல்பாடுகளுக்குப் பின்னால் இறைதிருப்தி இருந்தால் மட்டுமே நாம் ஒத்திசைந்து செல்ல முடியும். ஒரு அகங்காரம் இன்னொரு அகங்காரத்தை சகித்துக்கொள்ளாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அதிகாரமும் அநியாயமும்

அதிகாரம் இடம்பெயரக்கூடியது. அது யாரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருக்காது. இன்று ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் நாளை ஒடுக்கப்படுபவர்களாக மாறலாம். இன்று ஒடுக்கப்படுபவர்கள் நாளை ஆட்சியாளர்களாக மாறலாம். அதிகாரம் எப்படி பறிக்கப்படுகிறது? அது எப்படி கைமாறுகிறது? என்பதின் உண்மைநிலையை நாம் அறிய மாட்டோம். வெளிப்படையான காரணங்களை நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அவைதாம் உண்மையான காரணிகளாக இருக்குமானால் ஒடுக்கப்படுபவர்கள் எப்போதும் ஒடுக்கப்படுபவர்களாக, ஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

ஆம் நான் எழுதுகிறேன்

இப்படியொரு காலம் கனிந்து வர வேண்டும் என்றும் மொழி என் வசப்பட வேண்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். அபுல் ஹசன் நத்வீ, செய்யித் குதுப் ஆகியோரின் புத்தகங்களை படிக்கும்போதெல்லாம் இப்படியொரு மொழிவளத்தை என் மொழியில் நான் பெற வேண்டும் என்று என் மனம் துடியாய் துடிக்கும். ஆச்சரியமாக இருக்கிறது, அன்று நான் செய்த பிரார்த்தனையை இன்று நினைத்துப் பார்க்கிறேன். அது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன். என்னையும் அறியாமல் என்னிடமிருந்து எழுத்து பீறிடுகிறது. என்னை அதற்கு ஒப்புக் கொடுக்கிறேன் என்பதைத் தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. இது நான் அதிகமாக எழுதிக் குவிக்கும் காலமாக இருக்கும் என நான் நம்புகிறேன். என் இறைவன் அதற்கு அருள்புரிய வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தூக்கமும் மனம் அடையும் அமைதியும்

இரவில் வெளிப்படும் மனிதன் வேறு. பகலில் வெளிப்படும் மனிதன் வேறு. பகல் அவனை வெட்ட வெளிச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது. அவன் தவறு செய்ய அஞ்சுகிறான், வெட்கப்படுகிறான். இரவு அப்படியல்ல. அது அவனை மூடி மறைக்கிறது. இரவுக்குள் செல்லச் செல்ல அவனது மிருக உணர்ச்சி கூர்மையாகிக் கொண்டே செல்கிறது. அது அவனது அறிவை மழுங்கடிக்கும் எல்லை வரை செல்கிறது. இரவில் விரைவாகத் தூங்கும் மனிதர்கள் பாக்கியவான்கள். தூக்கம் பெரும் திரையாக உருவெடுத்து அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாக மாறிவிடுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

குற்றவுணர்வு என்ன செய்கிறது?

மனிதனின் அகத்திற்கும் புறத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அகத்தில் உள்ளதே புறத்திலும் வெளிப்படும். நாவு சொல்லும் பொய்யையும் புறத்தோற்றம் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவரது முகத்தைப் பார்த்தே அவர் உண்மையாளரா, பொய்யரா என்பதை நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள முடியும். பல சமயங்களில் ஒருவரது முகத்தைப் பார்த்தே நாம் அவரைக் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆன்மாவின் வெளிச்சமும் இருளும் அவரது முகத்திலும் பிரதிபலிக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

உறவுச் சிக்கல்கள்

பொறுமைக்கு தொடர் பயிற்சி அவசியம். ஒரு மனிதன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கிக் கொள்ள வேண்டும். தன் கோபத்தை, வெறுப்பை, பொறாமையை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறும் மனிதன் மகத்தான மனிதனாக மாற்றடைகிறான். பொறுமை என்பது தீய உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவற்றின் மூலமாக நமக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு நேர்ந்துவிடாமல் காத்துக் கொள்வதும் ஆகும்.

மேலும் படிக்க