கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ரூமியை இஸ்லாம்நீக்கம் செய்வதன் பின்னுள்ள அரசியல்

Loading

“மொழி என்பது வெறும் தொடர்புறுத்தலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நினைவின், பாரம்பரியத்தின், கலாச்சார முதுசத்தின் சேமிப்புக் களன்” என்கிறார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆன சினான் அண்ட்டூன் (Sinan Antoon). இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக இருப்பதனால், மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கொள்வது ஒரு அரசியல் வேலைத்திட்டம் (Political project) ஆகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு கவிஞர் தற்கால அமெரிக்க வாசகருக்கு புரியும் வண்ணம் அவர்கள் தான் ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மூலப்பிரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதன்மூலம், ரூமியின் விஷயத்தில், ஒரு ஷரியாத் துறை பேராசிரியரும் கூட உலகம் முழுக்க விரும்பி படிக்கப்படும் காதல் கவிதைகளை எழுத முடியும் என்று வாசிப்பவர்களால் அங்கீகரிக்க முடியும்.”

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அல்பாத்திஹா: ஆரம்பம் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அல்லாஹ்வைக்குறித்து, அவனது பண்புகள் குறித்து, அவன் படைப்புகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து சரியான கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதற்கு இஸ்லாம் மேற்கொண்ட நீண்ட நெடிய முயற்சியை திரும்பிப் பார்ப்பவர் – குர்ஆனின் வசனங்கள் இந்த முயற்சியை படம்பிடித்துக் காட்டுகின்றன – மனித சமூகத்தில் மண்டிக்கிடந்த தவறான கொள்கைகள், தீய கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் குவியல்களை அறியாமல் இஸ்லாம் மேற்கொண்ட இந்த நீண்ட நெடிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியாது. அந்தக் குவியல்களை ஆராய்ந்து பார்ப்பது இந்த முயற்சியின் அவசியத்தைத் தெளிவுபடுத்தும். மனிதனின் மனதை இத்தகைய பல்வேறு வகையான கடவுள்கள், கண்ணோட்டங்கள், யூகங்கள், புராணங்கள் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு இஸ்லாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதும் தெளிவாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கீழைத்தேயவாதம்: இஸ்லாத்தின் மீதான கருத்தியல் போர்

Loading

தூதுத்துவத்தில் உதயமான இஸ்லாமிய அரசியலின் வரலாற்றோட்டம் 1924ல் தற்காலிகமாக அஸ்தமித்தது. 18ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இந்த சரிவினையே மேற்குலக முதலைகள் தமது கோரப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக மாற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தையும் காலனித்துவ அடக்குமுறையையும் படிப்படியாக முஸ்லிம் நாடுகள் மீது திணித்தனர். அதனூடாகவே அல்ஜீரியா, மொரோக்கோ, துனீஷியா போன்ற ஆபிரிக்க நாடுகள் பிரான்ஸிடமும் இந்தோனேஷியா ஒல்லாந்தரிடமும் எகிப்து பிரிட்டிஷிடமும் துருக்கி ரஷ்யாவிடமும் லிபியா இத்தாலியிடமும் இரையாகின.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 1)

Loading

மனிதனே, உனது துவக்க நிலைக்கு திரும்பு. ஹஜ்ஜுக்கு செல். மிகச் சிறந்த படைப்பாக உன்னை படைத்த உனது மிகச் சிறந்த நண்பனை போய் பார். அவன் உனக்காக காத்திருக்கிறான். அதிகார மாளிகைகளை, செல்வப் புதையல்களை, தவறான வழியில் இட்டுச் செல்லும் ஆலயங்களை விட்டு நீங்கு. ஓநாயை மேய்ப்பவனாக கொண்ட மந்தையிலிருந்து நீ விலகு. அல்லாஹ்வின் இல்லத்தை (பைத்துல்லாஹ்) அல்லது மக்களின் இல்லத்தை (பைத்துந்நாஸ்) தரிசிப்பதற்காக செல்லும் கூட்டத்துடன் ‘மீக்காத்தில்’ சேர்ந்து கொள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கறுப்புப் பணமும் இந்தியாவின் வறுமையும் – அருண் குமார்

Loading

ஊதிய உயர்வு காரணமாக வறுமை குறைந்துவருவதாக அரசு கூறுகிறது. ஆனால் கறுப்புப் பணம் மற்றும் பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் வறுமைக்கோடும் மாறி வருகிறது. அதாவது, வறுமை குறைகிறது என்பதைவிட வறுமையை உருவாக்கும் காரணிகள்தான் மாறிக்கொண்டே வருகின்றன என்பதே சரியாகும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதை கொள்கை வகுப்பதில் சேர்க்காமல் இருப்பது, அதைக் கட்டுப்படுத்துவதை மேலும் சிரமம் ஆக்குகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதற்கான அவசியம்

Loading

இஸ்லாம் என்பது இறைவன் எனும் அகண்ட சாரத்திலிருந்து பிரவாகிக்கும் அறிவுப் பிரளயமாகும். அதனைக் கற்றலானது அறிதல் (تعلّم), ஆழ்ந்தறிதல் (تفقّه) எனும் இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இஸ்லாத்தை அறிவது எல்லோருக்கும் சாத்தியம். ஆனால் இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதென்பது வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியம். முஸ்லிம் அல்லாதோர் கூட, ஒப்பீட்டு சமயக் கற்கைகளில் இஸ்லாமிய அறிவைப் பெறுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை புரிந்து ஏற்று நடத்தல், ஆன்மீகவெளியில் பயணப்படல் என்பன அவர்களுக்கு அசாத்தியமாகவே இருக்கின்றன. இதே நிலைமையை நம் மத்தியிலுள்ள இஸ்லாமியக் கல்லூரிகளிலும் ஆன்மீக அறிவகங்களிலும் நம்மால் காணமுடிகின்றது. இன்று இஸ்லாம் பேசுவோரில் அதிகமானோர் அதனை ஆழ்ந்தறிந்தவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சர்வாதிகாரிகளின் மனநிலை: ஜெயாவை முன்வைத்து

Loading

பெயரளவிலேனும் திராவிடத்தைக் கொண்டிருந்த ஓரியக்கம் இல்லாமலாகும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எச்சித்தாந்தம் என்பது கடும் அச்சுறுத்தலை தரும் கேள்வி. மாற்று கட்சியாக திமுக இருந்தபோதிலும் சமூகநீதியையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தும் அமைப்புகள் அல்லது கட்சிகளே தற்போதைய தேவை. ஆயினும் நிலைமை என்னவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிமுகவுடைய வீழ்ச்சியின் பலனை பாஜக அனுபவிப்பதென்பது மாற்றுஅரசியலை நாடும் அனைத்து அமைப்புகளின் தற்காலிக தோல்வியென்றே கூறலாம். எனினும் நாம் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை. தீயவைகள் தங்களை முற்றாக வெளிப்படுத்தியபிறகு நன்மைக்கான காலம் கனியவே செய்யும் என்பதுதான் மனிதச்செயல்பாடுகளுக்கான ஆதார சிந்தனையாக இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இதுதான்டா போலீஸ் – வில்லவன்

Loading

இதுநாள் வரை அவர்கள் போலீசின் தடியடி காட்சிகளை பார்த்திருக்கக்கூடும். ஒரு சப்.இன்ஸ்பெக்டர் சிறுவன் ஒருவனினை கைது செய்து வாயில் சுட்ட செய்தியை படித்திருப்பார்கள். ஆனாலும் அத்தகைய கொடுமைகள் அவர்கள் வாழ்வில் குறுக்கிட வாய்ப்பில்லை என்பதால் மூளையில் ஏறியிருக்காது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

Loading

சென்னை, சேலம், கோவை, வேலூர், புதுக்கோட்டை, அலங்காநல்லூர் முதலான இடங்களில் கூடியிருந்த மக்களைக் காவல்துறையினர் வன்முறையாக வெளியேற்றத் துவங்கினர். வெளியேற மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையினரே வாகனங்களைக் கொளுத்துகிற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. மெரினாவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் வாகனங்களைப் போலீசாரே தாக்கி உடைத்தனர். சில இடங்களில் அவை எரியூட்டவும் பட்டன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா?

Loading

உண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.

மேலும் படிக்க