karnataka hijab issue update காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: கர்நாடக அரசின் ஒடுக்குமுறைக்குத் துணை போகும் நீதிமன்றம் – எழுத்தாளர் காமராசன்

Loading

கர்நாடகாவில் இந்து தேசியவாதிகளால் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படும் சூழலில், அதற்குத் துணை போகும் வகையில் நீதிமன்றத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான காமராசன் தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க
hijab issue tamil கட்டுரைகள் காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப் விவகாரம்: இந்து தேசியவாதத்துக்குத் தீனி போடும் பெண்ணியவாதிகள்

Loading

ஹிஜாப் சர்ச்சையாக்கப்படுவதை எப்படி புரிந்துகொள்வது?
தேர்தல் கணக்குகளுக்காகவும் பாஜக அரசின் பொருளாதாரத் தோல்வியை மறைக்கவும்தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றதா?
இந்து தேசியவாதத்துக்கு எப்படி பெண்ணியவாதம் தீனி போடுகிறது?
தேச அரசு எனும் வடிவம் அதனளவில் கொண்டிருக்கும் சிக்கல் என்ன?
போன்ற முக்கியமான விஷயங்கள் இந்நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
சர்மிளா சையத் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஷர்மிளா ஸெய்யித் எனும் தொழில்முறை முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரகர்

Loading

இன்று இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவது ஒரு லாபம் கொழிக்கும் தொழில். அதை செவ்வனே செய்து பெயர், புகழ், பணம், அதிகாரம் என அனைத்தையும் பெற முடிகிறது. ஷர்மிளா போன்ற பல இஸ்லாம் வெறுப்புப் பிரச்சாரகர்களுக்குள் இருக்கும் பொது அம்சங்களாக பின்வருவனவற்றைச் சொல்லலாம்: முஸ்லிம்/ பெண் அடையாளம், Victim playing, சர்வதேச அங்கீகாரம், விருதுகள் பெறுதல், மேலை நாடுகளில் அரசியல் அடைக்கலம் பெறுதல்.

தமிழகத்து முற்போக்கு சக்திகள் இவரைப் போன்ற உதிரிக்கு இடமளித்து முஸ்லிம்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளக் கூடாது என்பது என் வேண்டுகோள். சிஏஏ, சிறைவாசிகள் விடுதலை, ஹிஜாப் உள்ளிட்ட எல்லா உரிமைப் போராட்டங்களிலும் களமாடும் முஸ்லிம் பெண்கள்தாம் அந்தச் சமூகத்தின் பெண் பிரதிநிதிகள். ஷர்மிளா ஸெய்யித் அல்ல.

மேலும் படிக்க
Kareem Graphy கட்டுரைகள் காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: எது பொதுப் பண்பாடு?

Loading

இந்து தேசியவாதிகளால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது சர்ச்சையாக்கப்படுவது தொடர்பாக OH Tamil யூடியூப் சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த நேர்காணல்.

மேலும் படிக்க
media one c dawood கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

“பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸை விமர்சித்ததற்காக ‘மீடியா ஒன்’ இலக்காக்கப்பட்டிருக்கிறது” – நிர்வாக ஆசிரியர் சி.தாவூத்

Loading

“எங்களது ஆசிரியர் குழுவின் கொள்கை முடிவுகள் ஒன்றிய அரசின் கொள்கைகளை, சிஏஏ – என்ஆர்சி விவகாரங்களில் உட்பட, விமர்சிப்பதாக அமைகிறது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஸின் வகுப்புவாத அரசியலையும் விமர்சித்து வருகிறோம்” என்று சொல்லும் தாவூத், இவ்வாறு இருந்தபோதிலும் செய்தி சேகரிப்பதில் புறவயமான அணுகுமுறையைத் தாங்கள் மேற்கொள்வதாக குறிப்பிடுகிறார்.

“அரசின் கொள்கைகள் மீதான எங்கள் விமர்சனத்தில் புறவயமான அணுகுமுறையையும் உண்மையையும் கடைப்பிடிக்கிறோம். விமர்சனபூர்வமாக இருப்பதுதானே ஊடகத்தின் பணி” என்று தெரிவிக்கும் அவர், 2020, 2021ல் டெல்லியின் எல்லைப்புறங்களில் விவசாயிகள் போராட்டம் வெடித்தபோது, களத்திலிருந்து மீடியா ஒன் பல்வேறு கோணங்களையும், காட்சிகளையும் ஒளிபரப்பியதாகச் சொல்கிறார்.

மேலும், மீடியா ஒன் ஒளிபரப்பை நிறுத்த தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு கேரளாவின் ஊடகப் வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க
bajrang dal tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து ஆதிக்கவாதத்தின் சராசரி முகம் : ஒரு பஜ்ரங் தள ஊழியருடன் உரையாடல் – மோயுக் சாட்டர்ஜீ

Loading

அகமதாபாத்தில் சில பஜ்ரங் தள ஊழியர்களுடன் பணியாற்றிய சொந்த அனுபத்திலிருந்து நேரடிப் பதிவாக ஆசிரியர் இதை எழுதியிருக்கிறார். இந்தியா முழுக்க வலதுசாரி ஆயுதக் குழுக்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் செய்திகள் அதிகரித்து வரும் இவ்வேளையில், பஜ்ரத் தளத்தின் ஊழியர்களுடைய தினசரி வாழ்க்கை மீது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி இது. மூன்று பகுதிகளைக் கொண்ட இந்தக் கட்டுரையில், இந்தக் குழுக்களிடம் வன்முறையைத் தாண்டி பல விசயங்களிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். குஜராத் போன்று இந்தியாவின் சில பகுதிகளில் இந்தக் குழுக்களும் ஊழியர்களும் அந்தந்தப் பகுதிகளின் தினசரி வாழ்க்கையுடன் கலந்திருக்கிறார்கள். அந்தப் பகுதிவாசிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களாக, பஞ்சாயத்து செய்பவர்களாகச் செயல்படுகிறார்கள்.

மேலும் படிக்க
இஸ்லாமிய பெண்ணியம் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்! – உம்மு ஃகாலிது

Loading

தொடர்ச்சியாகவும் நீண்ட காலமாகவும் பெண்களிடம் பொய் சொல்லப்பட்டு வந்துள்ளது. பலர் ஒன்றிணைந்து தமது சுயலாபங்களுக்காகப் பெண்களை ஏமாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆணாதிக்கம் பற்றியோ, முஸ்லிம் ஆண்கள் பற்றியோ நான் பேசுவதாக எண்ண வேண்டாம். சில மேற்கத்திய சூன்யவாத நாத்திக மேட்டுக்குடிகளைப் பற்றிப் பேசுகிறேன். தமது சொந்த அஜென்டாக்களுக்காக, அவர்கள் பெண்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் சமூக வழமைகள் சிலவற்றை மாற்றி, இயந்திரங்களைப் போல மக்களைக் குறிப்பிட்ட வழியில் இயக்கியிருக்கிறார்கள்.ஊடகங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், புத்தகங்கள், நாவல்கள், பிரபல பத்திரிகைகள், பாடல் வரிகள், புகழ்பெற்ற கல்விநிலையங்கள் முதலானவற்றின் மூலம் உலகெங்கும் அவர்கள் பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். அமெரிக்கத் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஆறு சீசன்கள் வரை ஒளிபரப்பப்பட்ட தொடர் “செக்ஸ் அண்ட் த சிட்டி” (Sex and the City). அதன் மையக் கருத்து இதுதான்: ஒரு நவீனப் பெண் வாழ்வில்…

மேலும் படிக்க
law student abdul raheem issue கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அப்துல் ரஹீம் விவகாரமும் காவல்துறை சீர்திருத்தமும் – அ.மார்க்ஸ்

Loading

1. 2014 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி காவல்துறைச் சீர்திருத்தம் குறித்துப் பேசியிருந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. வெற்றிபெற்றிருந்தாலும் அது அந்த திசையில் நகர்ந்திருக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

2. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிவேண்டி உறுதியுடன் நின்று போராடினாலும் உடனடியாக நீதி கிடைப்பது கடினம். தொடக்கத்தில் அவர்கள் உறுதியாக நின்றாலும் கடைசிவரை அதைத் தொடரமுடிவதில்லை. நம் குற்ற நடைமுறை தொடர்பான வழமைகளும் இப்படியான அத்துமீறல்கள் பிரச்சினையில் மக்களுக்கு எதிராகவே உள்ளன.

3. நீதிபதி அனந்த நாராயண் முல்லா அவர்களின் ஒரு முக்கியத் தீர்ப்பு இங்கே குறிப்பிடத்தக்கது. “எந்த ஒரு கிரிமினல் கும்பலைக் காட்டிலும் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட காவல்துறையே பெரிய கிரிமினல் கும்பல்” – என்கிற புகழ்பெற்ற கருத்தை முன்வைத்த நீதியரசர் முல்லா அவர்களின் இவ் வாசகங்களை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. இப்படியான அவரது தீர்ப்பு நேர்மையான போலிஸ்காரர்களின் உற்சாகத்தைக் கெடுத்துவிடும் எனக் கூறி அதைத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் காவல்துறை முறையீடு செய்தபோது, “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்ல மீனைத் தேடும் முட்டாள் நானல்ல” எனக் கூறி அவர் அந்த மனுவைத் தள்ளுபடி செய்யவும் செய்தார்.

மேலும் படிக்க
mappila rebellion tamil நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் (நூல் அறிமுகம்)

Loading

மாப்ளா கிளர்ச்சி ஒரு வர்க்கப் போராட்டம் என்றபோதிலும், இந்து என்ற வகைமைக்குள் உள்ளடக்கப்பட்ட பல்வேறு சாதியினர் நிலப்பிரபுக்களின் அடக்குமுறையைச் சகித்துக் கொண்டபோது, முஸ்லிம்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தது ஏன்? அதற்கு ஒரே காரணம் இஸ்லாம் மட்டுமே. அதுதான் ஒன்றிணைவதற்கும் (பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்றுகூடுவது) போராடுவதற்கும் வலிமை கொடுத்தது. ஒருசில தருணங்களில் இந்தக் கிளர்ச்சிகளில் ஆலிம்களும் (மார்க்க அறிஞர்கள்) பங்கேற்றனர். பந்தலூர் மலையைச் சுற்றிலும் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே அனைத்து கிளர்ச்சிகளும் நடைபெற்றன. கேரளாவின், குறிப்பாக மலபார் பிரதேசத்தின், நிலவுடமை உறவுகளைக் குறித்து அறிந்துகொள்ள ஒருவர் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.

மேலும் படிக்க
social media islam tamil நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சமூக ஊடகம் தொடர்பான இஸ்லாமிய ஒழுங்குகளை நினைவூட்டும் புத்தகம்

Loading

எதிர்மறையான விசயங்கள் வேகமாகப் பரவும் இயல்புடையவை என்பதை அவை சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவுகின்றன. ஆனாலும் அவற்றை நேர்மறையான, நல்ல விசயங்களைப் பரப்புவதற்கும் பயன்படுத்த முடியும், நாம் சில ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால். இந்தச் சிறிய புத்தகம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில ஒழுங்குகளை நமக்கு நினைவூட்டுகிறது.

மேலும் படிக்க