கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கறுப்புப் பணமும் இந்தியாவின் வறுமையும் – அருண் குமார்

Loading

ஊதிய உயர்வு காரணமாக வறுமை குறைந்துவருவதாக அரசு கூறுகிறது. ஆனால் கறுப்புப் பணம் மற்றும் பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் வறுமைக்கோடும் மாறி வருகிறது. அதாவது, வறுமை குறைகிறது என்பதைவிட வறுமையை உருவாக்கும் காரணிகள்தான் மாறிக்கொண்டே வருகின்றன என்பதே சரியாகும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதை கொள்கை வகுப்பதில் சேர்க்காமல் இருப்பது, அதைக் கட்டுப்படுத்துவதை மேலும் சிரமம் ஆக்குகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 8) – மரியம் ஜமீலா

Loading

“ஜமாத்தும் அதன் எழுத்துப் பணிகளும், தேசிய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நுழைந்து இஸ்லாத்தின்படி நம் வாழ்க்கையை எப்படி மறுகட்டமைப்பு செய்வது என்றும், நவீன காலத்தில் இஸ்லாத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும், உலகளாவிய அளவில் இஸ்லாம் எப்படி வழிகாட்டியாகத் திகழ முடியும் என்பதையும் மனமேற்கும்படியான வாதங்களுடன் எடுத்துரைத்தன. ஜமாத்தும் அதன் எழுத்துக்களும், மேற்கத்தியக் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் அதன் வாழ்க்கைத் தத்துவத்தையும், பொருள்முதல்வாதம் மற்றும் கம்யுனிசத்தையும் நுணுக்கமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, கற்றறிந்த வர்க்கத்தின் நலனுக்காக, அவற்றின் பலவீனங்களையும் பிழைகளையும், அவைகளை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் துயரமான விளைவுகளையும் மிக விரிவாக வெளிப்படுத்தின.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 7) – மரியம் ஜமீலா

Loading

“இஸ்லாத்தின் போதனைகளின்படி, நீதமான வழியில் ஒருவன் சம்பாதித்த அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருட்கொடைக்கு வரம்பு ஏதும் இல்லை. முறைகேடான சொத்து எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது முறைகேடானதே. முறையாக சம்பாதித்த சொத்து எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது முறையானதே. தனிச் சொத்துக்களை பலப்பிரயோகம் செய்து அரசாங்கம் கைப்பற்றுவதைவிட –சிறிய நோய்க்கு பெரிய நோய் கொண்டு சிசிச்சை அளிப்பதை விட- அநீதமாக செல்வம் குவிவதற்கு வழிவகுக்கும் முறைகேடான வழிகளனைத்தையும் தடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதற்கான அவசியம்

Loading

இஸ்லாம் என்பது இறைவன் எனும் அகண்ட சாரத்திலிருந்து பிரவாகிக்கும் அறிவுப் பிரளயமாகும். அதனைக் கற்றலானது அறிதல் (تعلّم), ஆழ்ந்தறிதல் (تفقّه) எனும் இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இஸ்லாத்தை அறிவது எல்லோருக்கும் சாத்தியம். ஆனால் இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதென்பது வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியம். முஸ்லிம் அல்லாதோர் கூட, ஒப்பீட்டு சமயக் கற்கைகளில் இஸ்லாமிய அறிவைப் பெறுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை புரிந்து ஏற்று நடத்தல், ஆன்மீகவெளியில் பயணப்படல் என்பன அவர்களுக்கு அசாத்தியமாகவே இருக்கின்றன. இதே நிலைமையை நம் மத்தியிலுள்ள இஸ்லாமியக் கல்லூரிகளிலும் ஆன்மீக அறிவகங்களிலும் நம்மால் காணமுடிகின்றது. இன்று இஸ்லாம் பேசுவோரில் அதிகமானோர் அதனை ஆழ்ந்தறிந்தவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா

Loading

“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 5) – மரியம் ஜமீலா

Loading

“இஸ்லாம் தனது மனித சமத்துவம் என்ற கருத்துருவாக்கத்தை ஒரு விளைவற்ற தத்துவமாக வழங்கவில்லை. இக் கருதுகோளின் அடிப்படையில் ஒரு சமூகத்தை நிறுவியது. அச் சமூகத்தில் பல்வேறு இனங்களையும் தேசங்களையும் முழுமையான சமத்துவத்தின் அடிப்படையில் ஒன்று சேர்த்தது. அனைத்து இன, நிற, மொழி அல்லது தேசிய வேறுபாடுகளும் அழிக்கப்பட்டன. அது மட்டுமல்ல. இதே கொள்கையின் அடிப்படையில் ஒரு உலகளாவிய தேசத்தை நிறுவி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டியது. முழு முஸ்லிம் உலகமும் ஒரே சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டது. முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத் திகழ்ந்தனர். ஒருவர் –அவர் கிழக்கிலிருந்து வந்திருப்பினும் மேற்கிலிருந்து வந்திருப்பினும்- இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் உடனே அவர் இஸ்லாமியச் சமூகத்தின் உறுப்பினராக மாறிவிடுவார்; மேலும் பிற முஸ்லிம்களைப் போன்றே சம உரிமைகளையும் தனிச் சலுகைகளையும் அனுபவிப்பார்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சர்வாதிகாரிகளின் மனநிலை: ஜெயாவை முன்வைத்து

Loading

பெயரளவிலேனும் திராவிடத்தைக் கொண்டிருந்த ஓரியக்கம் இல்லாமலாகும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எச்சித்தாந்தம் என்பது கடும் அச்சுறுத்தலை தரும் கேள்வி. மாற்று கட்சியாக திமுக இருந்தபோதிலும் சமூகநீதியையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தும் அமைப்புகள் அல்லது கட்சிகளே தற்போதைய தேவை. ஆயினும் நிலைமை என்னவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிமுகவுடைய வீழ்ச்சியின் பலனை பாஜக அனுபவிப்பதென்பது மாற்றுஅரசியலை நாடும் அனைத்து அமைப்புகளின் தற்காலிக தோல்வியென்றே கூறலாம். எனினும் நாம் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை. தீயவைகள் தங்களை முற்றாக வெளிப்படுத்தியபிறகு நன்மைக்கான காலம் கனியவே செய்யும் என்பதுதான் மனிதச்செயல்பாடுகளுக்கான ஆதார சிந்தனையாக இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மௌதூதியின் சிந்தனைகளும் தமிழ் அறிவுலகமும்: உரையாடல்களுக்கான முன்னுரை

Loading

மௌதூதியின் சிந்தனைகளை நாம் மீள்வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் மேற்கில் வளர்ச்சியுற்ற தேசியம், ஜனநாயகம், செக்குலரிசம் பற்றிய மௌதூதியின் விமர்சனங்கள் இன்று நாம் உரையாடும் பின்நவீன, பின்காலனிய கருத்துநிலைகளோடு பொருந்திபோககூடியது. மேலும் மேற்கின் கடுமையான எதிரியாக அறியப்பட்ட அவர்தான் மேற்கின் அறிவுவளர்ச்சியை அது மேற்குக்கு மட்டும் உரியதல்ல, மாறாக முழுமனித குலத்தின் பாரம்பரிய சொத்து என்பார். இவ்வாறு பலகோணங்களில் அவரின் சிந்தனைகளை முழுமையாக பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு முன்னால் அவற்றை எலலாம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 4) – மரியம் ஜமீலா

Loading

“எமது ‘பெருங்குற்றம்’ என்னவெனில், இஸ்லாமிய நம்பிக்கை விஷயத்தில் நாம் நயவஞ்சகர்களாக இல்லாதிருப்பதும் நம் சமூக அலுவல்களை இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கும் முயற்சிகளில் நாம் பேரார்வத்துடன் இருப்பதுமே ஆகும். இஸ்லாம்தான் எங்கள் மார்க்கம் என நாம் பிரகடனப்படுத்தும் பொழுது, இயல்பாகவே இஸ்லாம் தான், இஸ்லாம் மட்டுமே, எங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் –அது நன்னடத்தை சம்பந்தமான, நம்பிக்கை அல்லது கொள்கை, கல்வி அல்லது ஒழுக்கம் சம்பந்தமான, சமூக கலாச்சார முயற்சிகள், அரசியல், பொருளாதார அமைப்பு, சட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் என எல்லாவற்றையும்- வழி நடத்துவதாக அமையும். அணு அளவேனும் நம்மை மாசுபடுத்தும் எந்தவொரு அந்நிய செல்வாக்கையும் நம் தனி மற்றும் தேசிய வாழ்விலிருந்து துடைத்தெறிய வேண்டும். இவ்விஷயத்தில் எத்தகைய சமரசத்தையும் பொருட்படுத்த மாட்டோம்; எதைப் பிரகடனம் செய்தோமோ அதையே நடைமுறைப்படுத்துவோம்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பத்தாண்டுகளின் நிகழ்காலம்

Loading

இத்தனை திரளான மக்கள் கூட்டம் கூடிக்கலைந்த பின்னும் நம்முடைய நிகழ்ச்சிநிரல் என்ன மாற்றமடைந்திருக்கிறது? ஒடுக்குமுறைக்கு எதிராக களம்கண்ட இத்தனை லட்சம் இளைஞர்களின் அடிப்படை அறத்தை நாம் என்ன செய்யப் போகிறோம்? நேர்மையான சமூகத்தின்பால், அறத்தின்பாற்பட்ட அரசியலின் பால் அவர்களை செலுத்த நம்மிடமுள்ள திட்டங்களும், செயல்பாடுகளும் என்னென்ன?

மேலும் படிக்க