கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

றமளான்: வயிற்றுக்கு ‘விடுமுறை’ தருவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Loading

அதிகமாக உண்பது, காண்பதையெல்லாம் உண்பது இன்றைக்கு ஒரு பெரும் சமூகப் பிரச்னையாய் ஆகியிருக்கிறது. முன்பெல்லாம் இப்படியான பண்பு கொண்டோர் தீனிப்பண்டாரம் என்று கிண்டல் செய்யப்படுவதுண்டு. இதையே இன்றைக்கு ஸ்டைலாக Foodie என்பதாக அவரவர் தம் சமூக வலைதளப் பக்கங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதிலென்ன பெருமிதமோ தெரியவில்லை! தற்காலத்தில் கார்ப்பரேட் உலகு ஏற்படுத்தும் மோசமான உணவுக் கலாச்சாரம் பற்றியும் உடல் ஆரோக்கியத்துக்கு அது ஏற்படுத்தும் தீங்கு பற்றியும் சமூக நலனில் அக்கறையுள்ள அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உடல் பருமன் (Obesity), இருதய நோய்கள் (Heart Diseases), மேலும் புற்று நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் (Chronic Diseases) எல்லாம் இன்று சர்வ சாதாரணமாக நம்மைத் தாக்குகின்றன. இத்தருணத்தில் வயிற்றுக்கு ’விடுமுறை’ அளிப்பது இப்படியான பல உடல்நலக்குறைபாட்டுக்கு நிவாரணியாக அமைகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

றமளான்: நம்பிக்கையின் மாதம்!

Loading

றமளான் மாதம் முழுவதும் தராவீஹ் தொழுகும் முஸ்லிம்களுள் பலர் மற்ற நாட்களில் பள்ளிவாசல்களில் நுழைவதுகூட அரிதாகிப்போவது ஏன்? முஸ்லிம்கள் றமளான் முழுவதும் நோன்பிருக்கிறார்கள்; அவர்களில் எந்த ஒருவரும் ஏன் தனிமையில் இருக்கும்போதுகூட உணவருந்துவதோ தண்ணீர் பருகுவதோ இல்லை? மற்ற நாட்களில் குர்ஆனைத் திறந்தும் பார்க்காத பலரால் எப்படி றமளானில் தினமும் அதை ஓத முடிகிறது?

மற்ற நாட்களில் இல்லாத வகையில் முஸ்லிம்களிடையே றமளானில் நிகழும் இப்படியான மாற்றம் வியப்பூட்டக்கூடியது. அந்த மாற்றம் அற்புதமானதும் அழகானதும்கூட! உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் றமளான் மாதத்தில் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் வணக்க வழிபாடுகளை அதிகரிப்பதிலும் பிரார்த்தனைகளின் மூலம் தங்களின் இறைவனது நெருக்கத்தை அடைய முயற்சிப்பதிலும் மிக அதிகமாக ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். அதேபோல், பாவச் செயல்களிலிருந்து விலகி தவ்பா செய்து இறைவனது பக்கம் மீள முயல்வதையும் நாம் கண்கிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

றமளானே வருக!

Loading

சென்ற ஆண்டு றமளான் நம்மை வந்தடைந்தபோது ஐவேளை கூட்டுத் தொழுகையும் ஜும்ஆ தொழுகையும் தடைப்பட்டு, அது முஸ்லிம்கள் பரிதவித்து நின்றிருந்த அசாதாரண நேரம். கொரோனா வடிவில் வந்திறங்கி விட்ட மாபெரும் சோதனையைப் பறைசாற்ற, நிற்பதற்கு இட நெருக்கடி மிகுந்த மக்காவின் கஆபா வளாகம் வெறிச்சோடிக் கிடந்த ஒரு காட்சி போதுமானதாக இருந்தது. உலகெங்கும் றமளானில் பொங்கி வழியும் உற்சாகம் அனைத்திற்கும் தடை ஏற்பட்டு, அவரவரின் தனிமையில் கழிந்தது நோன்பு. ஆண்டு ஒன்று உருண்டோடி, அச்சோதனையில் பெரும் மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடாத நிலையில், இதோ மீண்டும் றமளான். உலகெங்கும் மீண்டும் வீடடங்கு முன்னேற்பாடுகள். மீண்டும் கவலையுடன் முஸ்லிம்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மதீனாவில் நோன்பும் பெருநாளும்

Loading

இப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள உண்மை!

மேலும் படிக்க