குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்?

Loading

உண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்?

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்

Loading

காலம் என்று ஒன்று இருக்கிறதா? நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம்? இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

LGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குதல்

Loading

அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பு எனும் பாலியல் சாய்வு  பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என்றும், அதன்படியே அவர்கள் பாலுறவுச் செயல்களில் ஈடுபடலாம் என்றும் ஊக்குவிப்பது மட்டுமே அவர்கள் மீதான கரிசனை எனும் புரிதலையே நாம் இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அவர்கள்மீது கொள்ளும் உண்மையான கரிசனை,  செய்யக்கூடிய உண்மையான உதவி என்பது அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பை எப்படி நெறிப்படுத்தலாம், சுயகட்டுப்பாடுடன் கூடிய கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ அவர்களுக்கு எப்படி உதவலாம் எனச் சிந்திப்பதிலேயே இருக்கிறது எனக் கருதுகிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

உலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

Loading

தன்னிடம் இருப்பவற்றை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகள் என்பதை உணராதவன் அவற்றை தன் திறமையின் விளைச்சலாகக் கருதி கர்வம்கொள்வான். அவற்றைப் பெற்றிராத மற்றவர்களை இழிவாகக் கருதுவான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிவில் சமூகம்: இஸ்லாமிய வரலாற்றில் அதன் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும்

Loading

நபியவர்களின் (ஸல்) காலத்தில் சிறந்தொரு சிவில் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை விழுமியங்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், உமையாக்களின் காலப்பகுதியில் அதிகாரச் சக்திகளுக்கு எதிரான சிவில் சமூகத்தின் எதிர்ப்பரசியல் செயற்பாடுகள் துளிர்விட ஆரம்பித்தன. தொடர்ந்து, அப்பாஸிய காலப்பிரிவில் சிவில் சமூகத்தின் ஏனைய கூறுகளான தொழிற்சங்கங்களின் எழுச்சி, அறிஞர்களின் செல்வாக்கு, சமூகநலச் செயற்திட்டங்களின் மேம்பாடு போன்றவை வளர்ச்சிகண்டன. ஆனால், உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசிக் காலப்பிரிவிலும், புதிய தேசிய அரசுகளது தோற்றத்தின் பின்புலத்தில் இயங்கிய சர்வதிகார அரசியல் சக்திகளாலும் சிவில் சமூகக் கட்டமைப்புகள் காவுகொள்ளப்பட்டன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வாழ்வென்பது யாதெனில்…

Loading

வாழ்க்கை என்பது வெறுமனே அனுபவித்தல் மட்டுமல்ல. அப்படியான ஒரு வாழ்க்கையும் மரணமும் ஒன்றுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் இறுதியில் வெறுமையையும் விரக்தியையும் தவிர வேறெதுவும் மிஞ்சப் போவதில்லை. வாழ்வதென்பது இயந்திரங்கள் செயல்படுவதைப்போன்று செயல்படுவது அல்ல. அப்படிப்பட்டவர்களை காலம் விரைவில் மறக்கடித்துவிடும். அவர்களும் தங்களைத் தாங்களே மறந்துவிடுவார்கள். வாழ்க்கை தீராத அறிதலையும் கண்டடைதலையும் வேண்டி நிற்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை

Loading

மதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர அது உருவாக்கும் எந்தக் கேள்விகளுக்கும் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் – 2

Loading

மனிதனுக்கு ஆரோக்கியம் அளப்பரிய செல்வமாகும். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமானவனாக ஒருவன் ஒரு நாளை அடைவதைவிட பெரும் பேறு எதுவும் இல்லை. எந்தவொன்றும் நம்மை விட்டுச் செல்லும்போதுதான் அதன் அவசியத்தை நன்குணர்கிறோம். மனிதன் இழப்பின்போதுதான் இருப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்கிறான். தினமும் நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் கற்றுத்தரும் பின்வரும் பிரார்த்தனையை சற்று கவனமுடன் வாசித்துப் பாருங்கள். இந்த பிரார்த்தனையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஆஃபியா’ என்ற வார்த்தை முழுமையான ஆரோக்கியத்தைக் குறிக்கும். ‘அல்அஃப்வு’ நம்முடைய பாவங்களை அவன் கண்டுகொள்ளாமல் மன்னித்து விடுவதைக் குறிக்கும். முதலில் அவனிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு பின்னர் ஆரோக்கியத்தைக் கேட்கிறோம். இரண்டையும் ஒருசேர கேட்க வலியுறுத்தப்பட்டிருப்பதற்கான சூட்சுமம் இரண்டிற்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதையே காட்டுகிறது:

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை!”

Loading

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன?’, ‘அதன் நோக்கம் என்ன?’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றைக் குறித்தும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அருட்கொடைகளும் நன்றிகெட்டத்தனமும் -1

Loading

சொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.

மேலும் படிக்க