தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 3) – சையித் குதுப்

Loading

ஜாஹிலிய்யாவை அறிந்தவரால்தான் இஸ்லாத்தின் அவசியத்தை, சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும். இந்த மார்க்கத்தின் பரிபூரணத் தன்மையையும் ஒத்திசைவையும் அது வெளிப்படுத்தும் உண்மையின் எளிமையையும், அதனைத்தவிர மற்ற கொள்கைகளையும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளையும் அறிந்தவரால்தான் மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். அச்சமயத்தில்தான் இந்த மார்க்கம் உண்மையான அருட்கொடையாகத் தென்படும். அதன் அழகியலும் எளிமையும் தெளிவும் ஒத்திசைவும் நெருக்கமும் மனித அறிவுக்கும் உள்ளத்திற்கும் ஒட்டுமொத்த மனித வாழ்வுக்கும் மிகப் பெரிய அருட்கொடையாகும். அது மனித இயல்போடு முழுவதுமாக ஒன்றிப் போகக்கூடியது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 2) – சையித் குதுப்

Loading

“கிருஸ்தவர்கள் ரோம அரசாட்சியை வென்றபோதிலும் அவர்களால் சிலைவணக்கத்தை அடியோடு அழிக்க முடிவில்லை. மாறாக சிலைவழிபாடு அவர்களின் மார்க்கத்தோடு ஒன்றுகலந்தது. கிருஸ்தவமும் சிலைவழிபாடும் ஒன்றிணைந்து புதிய மார்க்கமாக தோற்றம் பெற்றது. இந்த இடத்தில்தான் இஸ்லாம் கிருஸ்தவத்தைவிட்டு வேறுபடுகிறது. அது சிலைவழிபாட்டை அடியோடு வீழ்த்தி தன் தூய கொள்கைகளை மக்களிடையே பரப்பியது.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 1) – சையித் குதுப்

Loading

மனிதனின் கண்ணோட்டத்திற்கும் சமூக அமைப்பிற்குமிடையே என்றும் அறுபடாத உறுதியான தொடர்பு உண்டு. அவனது சமூக அமைப்பு, இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்தும் அதில் மனிதனின் நிலை மற்றும் அவன் படைக்கப்பட்ட நோக்கம் குறித்தும் தெளிவுபடுத்தக்கூடிய அந்த விளக்கத்திலிருந்தே வெளிப்படும் ஒன்றாகும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் அல்லாமல் கட்டமைக்கப்படும் சமூக அமைப்பு வாழத் தகுதியற்ற செயற்கையான சமூக அமைப்பாக இருக்கும். அது நிலைத்திருக்கும் காலகட்டம் மனிதனுக்குத் துன்பம் மிகுந்த, அதற்கும் அவனது இயல்புக்குமிடையே மோதல் நிகழும் காலகட்டமாகத்தான் இருக்கும். அது இயல்பான தேவை மட்டுமல்லாமல் அமைப்பியல் ரீதியான தேவையும்கூட.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 3) – சையித் குதுப்

Loading

மனித சமூகத்தை அப்பியிருந்த காரிருளிலிருந்து அதனை விடுவிக்கவே இஸ்லாம் வந்தது. அந்தக் காரிருளில் அகப்பட்டு மனித சமூகம் வழிதெரியாமல் தடுமாறித் திரிந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமூகத்திற்கு தனித்துவமிக்க ஒரு கண்ணோட்டத்தையும் இறைச்சட்டங்களின் ஒளியில் சீரான ஒரு வாழ்க்கையையும் அளிக்கவே இஸ்லாம் வந்தது. அன்று மனித சமூகத்தை அப்பியிருந்த காரிருள் இன்றும் மனித சமூகத்தை அப்பியிருக்கிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 2) – சையித் குதுப்

Loading

“நாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளை தேடிச் செல்வதன் நோக்கம் வெறுமனே பண்பாட்டை அறிவதோ இஸ்லாமிய நூல்களில் ஒன்றை அதிகப்படுத்துவதோ அல்ல. நிச்சயமாக மூளைவிளையாட்டுக்குப் பயன்படும் இதுபோன்ற வெற்று அறிவை நாம் நோக்கமாகக் கொள்ளவில்லை. இதுபோன்ற அற்ப நோக்கத்திற்காக நாம் பெருமுயற்சி செய்ய மாட்டோம்.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 1) – சையித் குதுப்

Loading

இஸ்லாத்திற்கென்று தனித்த, அனைத்தையும் தழுவிய ஒரு உலகக் கண்ணோட்டம் இருக்கின்றது. இஸ்லாம் முன்வைக்கும் இறைக் கோட்பாடு தொடங்கி, அது கொண்டுவர விரும்பும் சமூக மாற்றம் வரை அனைத்தும் அதிலிருந்தே பிறக்கின்றன. அதனை இரத்தின சுருக்கமாக, திட்டவட்டமான முறையில் வரைவிலக்கணம் செய்யும் முயற்சியில் சையித் குதுப் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி) என்பது புத்தகத்தின் தலைப்பு. இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக நிலைநிறுத்த உழைக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய சாராம்சமான விசயங்களை அதில் முன்வைத்துள்ளார். இஸ்லாமிய உலகக் கண்ணோட்டம் என்பதென்ன என்று விளங்க முயலும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் நல்லதொரு அறிமுகப் பிரதியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஆய்வுக் கட்டுரை: இஸ்லாமிய பார்வையில் அரசியல் பொருளாதாரம்

Loading

தனது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மீது உழைப்பாளி மட்டுமே சட்டபூர்வமாக உரிமை கோர முடியும். எனவே, யாரேனும் ஒருவர் மற்றவர்களை வேலைக்கமர்த்தி, அவர்களுக்குக் கூலியையும் கருவிகளையும் வழங்கி, அவர்களின் உழைப்பில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களை தனது உடமையாக்கிக் கொள்வதென்பது இஸ்லாத்தை பொறுத்தவரை நினைத்தும் பார்க்கவியலாத ஒன்று.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஆத்ம ஆனந்தங்கள் – சையித் குதுப்

Loading

மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன். என்னால் செய்யமுடிந்த அளவுக்கு செய்திருக்கிறேன். ஆயுள் நீடித்தால் நான் செய்ய ஆசைப்படுகின்ற பல விடயங்கள் உண்டு. அவை முடியாமற் போனாலும் கவலை என் உள்ளத்தை அரிக்கப் போவதில்லை. அடுத்தவர்கள் நிச்சயமாய் அவற்றை செய்வார்கள். நிலைத்து நிற்கத் தகுதிபெற்றிருந்தால், என்றுமே அவற்றுக்கு மரணமில்லை. இப்பிரபஞ்சத்தை அவதானித்துக் கொண்டிருக்கும் அந்த தெய்வீகக் கண்காணிப்பு, ஒரு நல்ல சிந்தனையை சாகவிடாது என்ற திருப்தி எனக்கிருக்கிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

மனிதனும் இஸ்லாமும்

Loading

இச்சுருக்கமான ஏழு உரைகளின் வழியாக ஷரீஅத்தி இஸ்லாமிய சித்தாந்தம், அதன் உலகநோக்கு, மனிதனின் சிறைகள், ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதில் சுதந்திர சிந்தனையாளரின் பொறுப்பு ஆகியன பற்றி அறிவொளியூட்டும் மனச்சித்திரமொன்றை உருவாக்கியிருக்கிறார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சூஃபியிசம் என்றால் என்ன?

Loading

சூஃபிகள் எதை நம்புகின்றனர்? எதை அடைய முயலுகின்றனர்? என்ன செய்கின்றனர்? இதைப் பற்றிப் பேசும் பிற எழுத்தாளர்கள் போலன்றி, மார்டின் லிங்ஸ் இம்மூன்று கேள்விகளுக்கும் சமநீதியுடன் பதிலளிக்கிறார். எனவே, ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்ற முதன்மைக் கேள்விக்கு அவரால் மிக வளமாக பதிலளிக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கோணத்திலிருந்து வருகின்றன என்றபோதும், அவை அனைத்தும் விவகாரத்தின் வேர் நோக்கியே செல்கின்றன.

மேலும் படிக்க