கட்டுரைகள் 

இந்திய கறுப்புப் பணம்: அளவும் அதன் முதலீட்டு முறைகளும் – ஜெயரஞ்சன்

Loading

ஆக, சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம்வாயிலாக வெளியேறியிருப்பதாகக் கொண்டால், மிகக்குறைந்த அளவாக கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ரூ. 350 லட்சம் கோடியாகும். இவ்வாறு Mispricing வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்ட கள்ளப் பணம், மொத்த கள்ளப் பணத்தில் ஏறத்தாழ 84 விழுக்காடு ஆகும். இம்முறையின்றி வேறுசில வழிகளும் இருக்கின்றன. அவற்றை நான் இங்கு விவாதிக்கவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கருப்புப் பண ஒழிப்பு: மக்கள் விரோத மோடி அரசின் முட்டாள் சாகசம் – பிரபாத் பட்நாயக்

Loading

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தின் முன்னாள் பொருளாதாரத் துறை பேராசிரியரும் பன்னூலாசிரியருமான திரு. பிரபாத் பட்நாயக் ‘தி சிட்டிசன்’ இணைய இதழுக்காக எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே பகிர்கிறோம். தமிழாக்கம்: ‘ஃபிரண்ட்லைன்’ பத்திரிக்கையின் ஆசிரியர், விஜயசங்கர் ராமச்சந்திரன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 1) – மரியம் ஜமீலா

Loading

மரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் முதற் பகுதி கீழே.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்டும்!

Loading

சவூதியை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ளும் இந்த பாமர உளவியலுக்குப் பின்னாலிருக்கும் காரணிகளை விளங்கிக் கொள்ளும்போதே நாம் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமாகும். அதே போல், அது தனது தோற்றம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பதென்ன என்பது பற்றியும் புரிந்து கொள்வது முக்கியம். சுருக்கமான இக்கட்டுரையின் வரம்புகளுக்குள் நின்று இவை பற்றி இயன்றவரை பார்க்கலாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

தத்துவமும் விஞ்ஞானமும் – ஜமாலுத்தீன் ஆஃப்கானி

Loading

மனிதன் பெற்ற முதற் கல்வி மதக் கல்வியாகும். ஏனெனில், விஞ்ஞான அறிவினை ஈட்டி, ஆதாரங்களையும் விளக்கங்களையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சமூகமே தத்துவார்த்த அறிவினைப் பெற்றிருக்க முடியும். எனவே, எமது மதத் தலைவர்கள் முதலில் தம்மைத் தாம் சீர்திருத்தி, தமது விஞ்ஞானத்தினதும் அறிவுத் துறையினதும் பயன்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யாத வரையில் முஸ்லிம்கள் ஒருபோதும் சீர்திருந்தப் போவதில்லை என நாம் உறுதியாகக் கூற முடியும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

போபால் ‘மோதல் கொலைகள்’: போலீஸின் திரைக்கதையை கிழித்தெறியும் ராகேஷ் ஷர்மா

Loading

போபால் ‘மோதல் கொலைகள்’ பற்றி மத்திய பிரதேச அரசும் போலீஸும் சொல்லி வரும் கதைகளை பிரபல ஆவணப்பட இயக்குனர் ராகேஷ் ஷர்மா ஒரு திரைப்பட இயக்குனரின் பார்வையிலிருந்து உடற்கூராய்ச்சிக்கு உட்படுத்தி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனை தமிழாக்கம் செய்து கீழே தந்திருக்கிறேன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக? – மௌலானா மௌதூதி

Loading

இஸ்லாமிய அரசின் தனித்தன்மையே இறைநம்பிக்கைதான். அப்பழுக்கில்லாத, எந்தவித குறையும் இல்லாத, உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், குடிமக்கள் மீது அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது என்பதையும், குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் கூட முதலில் தாம் இறைவனின் அடிமைகள் என்கிற உணர்வுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அடுத்து தமது நாட்டு குடிமகன் மீது இறைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பனூ குறைளா சம்பவம்: ஒரு மீளாய்வு

Loading

இஸ்லாத்தின் பெயரால் கொலைபாதகங்களை நிகழ்த்திவரும் ஒரு சமகால கிரிமினல் கும்பலை (ISIS) ஆதரிப்பதென இவர்கள் எடுத்திருக்கும் அநீதமான நிலைப்பாடு, இவர்களை எப்படியெல்லாம் தரம்தாழ்ந்து பேச வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது சினமும் பரிதாபமும் கலந்தவொரு உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு தலித் போராளியின் வாழ்வும் அவர் காட்டிய வழியும்

Loading

‘இறைவனின் இந்த இஸ்லாமியத் தத்துவங்கள் உலகெல்லாம் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சூழலிலும் எடுத்துச் செல்ல வெண்டிய மாபெரும் தத்துவங்களாகும். இவை இரகசியமாகக் கூட்டங்களில் சொல்லப்படவேண்டியவை அல்ல. மாறாக மலை மீதும், குன்றின் மீதேறியும் நின்று வெளிப்படையாக அனைத்து மக்களுக்கும் எட்ட வைக்கப்பட வேண்டிய உயர்ந்த தத்துவங்களாகும். அனைத்து மக்களுக்கும் வழி காட்டக் கூடிய கருத்துக்களாகும். இறைவன் ஒருவனே, நீங்கள் அவனையே நம்புங்கள். முஹம்மது நபி அவர்களையே ஏற்றுக் கொள்ளுங்கள், பின்பற்றுங்கள்”.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

முஹம்மது அபூ ஸஹ்றா – ஓர் அறிமுகம்

Loading

அவரது நூல்களுள் அனைத்தைக் காட்டிலும் மிகப் பிரபலமானவை, ஒரு தொடராய் அமைந்த எட்டு நூல்கள்தாம். அவை ஒவ்வொன்றையும் அவர் இஸ்லாமிய வரலாற்றிலிருந்த முன்னணி அறிஞர்களுள் ஒருவரது வாழ்வு, கண்ணோட்டங்கள், புலமைத்துவம் ஆகியவற்றை ஆராய்வதற்கு ஒதுக்கியிருக்கிறார். அவ்வறிஞர்கள் பின்வருமாறு: அபூ ஹனீஃபா, மாலிக், அல்-ஷாஃபியீ, அஹ்மது இப்னு ஹன்பல், ஸைது இப்னு அலீ, ஜாஃபர் அஸ்-சாதிக், இப்னு தைமிய்யா மற்றும் இப்னு ஹஸ்ம்.

மேலும் படிக்க