முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதும், முஸ்லிம் பெண்களை அந்தச் சமூகத்து ’அடிப்படைவாத’ ஆண்களில் இருந்து விடுவிப்பதும் தங்களுடைய கடமைதான் என தம்மைத் தாமே ஒரு மீட்பராகவும் சக்திமானாகவும் கருதும் சிபிஎம் மனநிலையில் இருந்தே ஜிப்ஸி உருவாகியிருக்கிறது.
இறைநம்பிக்கையாளர்கள் இறைவன் மீது எந்தச் சமயத்திலும் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். இந்த நம்பிக்கை மிக எளிய நம்பிக்கைததான் என்றாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் வலுவானது. இதுபோன்ற நம்பிக்கைகளே வாழ்க்கையே அழகுபடுத்தும். அதனை எளிதாகக் கடப்பதற்கு வழிவகுக்கும்.
1930களில் நாஸி ஜெர்மனியில் இருந்து தப்பிச்சென்ற யூத அரசியல் தத்துவவியலாளர் ஹன்னா ஆரன்ட் இப்படி எழுதினார், “ஒருவர் யூதர் என்பதற்காகத் தாக்கப்பட்டால் அவர் தன்னை யூதர் எனும் நிலையிலேயே தற்காத்துக்கொள்ள வேண்டும்; ஒரு ஜெர்மானியராகவோ, உலகக் குடிமகனாகவோ, மனித உரிமைப் போராளியாகவோ அல்ல.”
இதுபோன்று ஒருநாள் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலை இரவு உணவிற்குப் பின் (இரவு 8.30) என்னுடைய சகோதரி வாசிக்க நாங்கள் குழுமியிருந்து கேட்டோம். இரண்டு இரவுகளில் வாசித்து முடித்தோம். அப்போது எனது மூத்தும்மா (பெரியம்மா) அதில் வரும் சம்பவங்களை இடையிடையே நிறுத்தி விளக்கினார். அவருக்கு அப்போது (1988) அறுபத்தைந்து முதல் எழுபது வயதிற்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் இடையிடையே அதில் இடம்பெறும் பல சம்பவங்களையும் அவர்களால் விளக்கமுடிந்தது. மீண்டும் ஒருமுறை அந்த நாவல் அவ்வாறு படிக்கப்பட்டது. நாவலை முடித்தபோது சில விசயங்கள் கதையில் மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளதாகவும், முக்கால் பங்கு சம்பவங்கள் உண்மை என்றும், சில சம்பவங்கள் அவர்கள் காலத்தில் நடந்ததாகவும், சில அவர்களுக்கு முந்தைய தலைமுறையில் நடந்து கேள்விப்பட்டிருப்பதாகவும் கூறினார். நாவல் என்றால் புனைவுகள் இருக்கும் என்பது பெரியம்மாவிற்குத் தெரியாமல் இருந்தது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் பதற்றப்படவில்லை. பத்து இலட்சம் பேர் மதம் மாறியபோதும் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொள்ளவில்லை. மீனாட்சிபுரத்திலே 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்குள்ளாகக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
நாமொரு தேசிய அரசின் கீழ் வாழ்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அவ்வரசு நம் பெயரால் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, அவை அறம் சார்ந்தவையா, அறம் பிறழ்ந்தவையா? அவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் தகுமா, தகாதா? என்று நாம் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் ஒரு இராணுவப் பள்ளியைத் தொடங்க உள்ளதாம். உத்தர பிரதேசத்தில் புலந்தர் சாகர் மாவட்டத்தில் அது அமையுமாம். முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திரசிங்கின் நினைவாக ‘ராஜு பையா சைனில் வித்யா மந்திர்’ என்னும் பெயரில் அடுத்த ஆண்டு முதல் அப்பள்ளி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் நான்காம் கலீஃபாவான இமாம் அலீ (ரழி) அவர்களே, முதல் முக்கிய எழுத்தணிக் கலைஞர் என்று முஸ்லிம்களால் கருதப்படுகிறார். ஆக, அவர் தொட்டுத் தொடங்கும் தொடர்வரிசை, நூற்றாண்டுகள் நெடுக இடைவிடாது நகர்ந்து இன்றுவரை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நாட்டில் எந்தப் பிரிவுக்கும் இல்லாத ஒரு தண்டனையை இந்தப் பிரிவுக்கு மட்டும் கொடுக்கிறார்கள். அப்படியானால் இதற்குப் பின்னுள்ள நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல. முஸ்லிம் ஆண்களை உள்ளே பிடித்துப் போட இவர்களுக்கு ஒரு சட்டம் புதிதாகக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.