குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஸியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதம்

ஃபலஸ்தீனின் கஸ்ஸா பகுதியின் மீது சென்ற ஆண்டு மே மாதம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் தொடுத்தது. 11 நாட்கள் அது நிகழ்த்திய கோரத் தாண்டவத்தில் சுமார் 250 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். தற்போது அதேபோன்றதொரு தாக்குதலை இஸ்ரேல் கட்டவிழ்த்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் 31 ஃபலஸ்தீனர்களை அது கொன்றுள்ளது. 250க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர்.

மேலும் படிக்க
அறிவியல் என்றால் என்ன? நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (1)

சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிவியல் என்றால் என்ன? என்ற நூலை நண்பர் கொள்ளு நதீம் மூலமாகப் பெற்றேன். பொறுமையாக ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அறிவியல் குறித்துப் பல்வேறு புரிதல்கள் நமக்கு இருக்கலாம். பொதுவாக தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் அறிவியலை நாம் புரிந்து வைத்திருப்போம். ஆனால், உண்மையில் அறிவியல் என்றால் என்ன, எவையெல்லாம் அறிவியல், எவையெல்லாம் அறிவியல் இல்லை, அறிவியல் எப்படி இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்துகிறது, மனிதர்களுக்கு இவ்வுலகம் குறித்த புரிதலை எப்படி மாற்றியமைக்கிறது என்பன பற்றி மிக விரிவாக இந்நூல் விளக்குகிறது.

இந்தக் கட்டுரையை புத்தக விமர்சனமாக அன்றி, எனக்குப் புரிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுதுகிறேன். இந்தப் பகுதி முதல் அத்தியாயம் பற்றியது. மீதமுள்ள அத்தியாயங்கள் குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

நரக மாளிகை (நூல் அறிமுகம்)

முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகளின் மீது சங் பரிவாரம் நிகழ்த்தும் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டங்களை, அதன் நாசகர சித்தாந்தத்தை பல புத்தகங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. மேழி புக்ஸ் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூலான நரக மாளிகை அத்தகைய கொடூரங்களை நிகழ்த்தும் இந்து தேசியவாத இயக்கத்தின் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு பற்றியும், இந்து ராஷ்டிரக் கனவின் பெயரால் எத்தகைய மனித மிருகங்களை அது உருவாக்குகிறது என்பதையும் பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் கதாநாயகியைக் கொண்ட மிஸ் மார்வல் தொடர் எப்படியிருக்கிறது?

அமெரிக்க முஸ்லிம்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அடையாளச் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைத் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் கரிசனத்தோடு சித்தரிக்க முயன்றுள்ளது மிஸ் மார்வல் தொடர். நியூயார்க் நகரத்தில் இருக்கும் பள்ளிவாசலையும், அதனுள்ளே இயங்கும் ஒரு பண்பாட்டு வெளியையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. அதேபோல், பல்வேறு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட, அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இஸ்லாமியர்கள் தங்களது பண்டிகைகளையும், வீட்டு விஷேசங்களையும் ஒன்றிணைந்து கொண்டாடுவதைக் காட்டுவது நெகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. உதாரணமாக, கமலா கானின் அண்ணன் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்வார். அவரும், இஸ்லாமியர் அல்லாத கமலாவின் மற்ற நண்பர்களும் பாகிஸ்தான் முஸ்லிம்களின் பண்பாட்டு உலகிற்குள் நுழைந்து, ஈத், திருமணம் முதலான அவர்களின் கொண்டாட்டங்களில் மகிழ்வோடு கலந்துகொள்ளும் காட்சி அத்தனை இனிமையாக இருந்தது.

மேலும் படிக்க
The Evolution of Atheism: The Politics of Modern Movement tamil தமிழ் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

நாத்திகவாதத்தின் பரிணாமம் (நூல் அறிமுகம்)

சமகாலத்தில் தீவிரமாக அலசப்படும் ஒரு தோற்றப்பாடாக நவநாத்திகம் (New-Atheism) மாறியிருக்கிறது. அந்த வகையில், நவநாத்திகவாதத்தை அதன் அறிவுத் தத்துவம், பண்பாட்டு நோக்கு மற்றும் சமூக-அரசியல் பரிமாணம் எனப் பல்வேறு கோணங்களில் ஆராயும் மிக முக்கியமான புத்தகமாக சமூகவியல் ஆய்வாளர் ஸ்டிபன் லெட்ரூவின் The Evolution of Atheism: The Politics of Modern Movement உள்ளது. யோர்க் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்திற்காகச் சமர்பிக்கப்பட்ட ஆய்வை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பொதுவாக, சமூகவியல் பரப்பில் மத நம்பிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், சமூக-அரசியல் விவகாரங்களை அணுகுவதில் அவர்களது மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது போன்ற கேள்விகளை ஆய்வு செய்வதிலேயே ஆய்வாளர்கள் அதிகம் கரிசனம் கொள்கிறார்கள். ஆனால், மதத்தைத் துறந்தவர்கள் அல்லது நாத்திகர்களின் சமூக நடத்தை எப்படியிருக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் சமூகவியல் துறையில் மிக அரிது. அந்த இடைவெளியை இப்புத்தகம் பூர்த்தி செய்ய முயல்வதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க
bulldozer politics bjp tamil afreen fatima கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் பயங்கரவாதம்: இஸ்ரேலைப் பின்பற்றும் இந்தியா

உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.

இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.

மேலும் படிக்க
hijab tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: ஆதிக்க எதிர்ப்புக் குறியீடு – யாசிர் காழி

தற்போதைய பிரச்னையை ஹிஜாப் அணிவதற்கான உரிமை தொடர்பான விஷயமாக மட்டும் நாம் சுருக்கிப் புரிந்துகொள்ளக் கூடாது. அவர்கள் தங்களின் நாகரிகமே ஆதிக்கம் செலுத்த வல்லது என்றும், தாங்களே பலம்மிக்கவர்கள் என்றும் நிறுவ நினைக்கிறார்கள். முஸ்லிம்களை தங்களுக்குக் கீழானவர்கள், இரண்டாந்தரக் குடிகள் என்று நிறுவ முனைகிறார்கள். அதற்காக அவர்கள் இஸ்லாமிய அடையாளங்களைக் குறிவைத்து ஒடுக்குகிறார்கள். அந்த அடிப்படையில் இப்போது அவர்களின் தெரிவாக ஹிஜாப் உள்ளது. பல பண்பாடுகளில் தலையை மறைக்கும் வழக்கம் இருந்தாலும் தற்போது இஸ்லாமியப் பண்பாடு அளவுக்குப் பரவலாக அது இல்லை எனலாம்.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

‘க’ஞானம்

முதுகு ஒட்டிக் கொண்டு வியர்த்து எண்ணெயாகி டைல்ஸ் தரை நழுவியது. சற்று நகர்ந்த பிறகு பழைய இடத்திலுள்ள வியர்வையின் மினுமினுப்பில் ஜன்னலின் கிராதி கோணவும் தலையின் சூடு மெழுகாகி இளகியது. அதற்கு மேல் தொடர மனமில்லை. எழும்பி அமர்ந்து கொண்டான் நூகு.

பச்சையும் கருமையுமாக இடது கெண்டைக்காலில் முந்திரிக்கொத்து போல சுருண்டிருந்த சுருள் நரம்பு பிரச்சினைக்கு விபரீத கரணி ஆசனம் சிறந்தது என யோகாச்சார்யன் இஸ்மாயீல் திருவனந்தபுரம் வானொலியில் சொல்லியதைக் கேட்டிருந்தான். அதன் பேரில் ஒரு வாரமாக காலை அல்லது மாலை என நூகின் யோகாசனப் பயிற்சி தீவிரமடைந்தது.

மேலும் படிக்க
malcom x tamil குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒடுக்கப்பட்ட மக்களுடன் அணிசேர்தல்

நாம் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமே.

– மால்கம் X (மாலிக் அல்-ஷப்பாஸ்)

மேலும் படிக்க
gyanvapi mosque tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஞான்வாபி மஸ்ஜித் – கிணற்றுக்குள் பூதம்!

பாபர் மசூதியுடன் எதுவும் முடிந்துவிடவில்லை. நிஜத்தில் பாபர் மசூதி பலவித வரிசை மாற்றங்களுக்கும், பெருக்கல் சாத்தியங்களுக்கும் அரசியல் இந்துத்துவத்தை இட்டுச் சென்றிருக்கிறது. இப்போது சந்திக்கு இழுத்து விடப்பட்டுள்ள ஞான்வாபி மசூதி – வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்திற்கு அருகமையில் உள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும். காசி விசுவநாதர் ஆலயத்தின் நிர்வாகத்தை அரசு 1983 முதல் தன்வசம் எடுத்துக்கொண்டு நடத்தி வருகிறது. அதற்கு முன்பாக இருந்த மடாதிபதிகளில் ஒருவரான சுவாமி ராஜேந்திரா என்பவர் இந்த விவகாரம் பற்றிப் பேசும்போது, (இன்கே பாஸ் ராம் நஹீ ரஹங்கே.. யே பெரோஜ்கார் ஹோ ஜாயேங்கே) ‘இவர்களுக்கு (இந்துத்துவர்கள்) ராம் இல்லாது போனால், வேலை வெட்டி இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள்’ என்றார். மேலும் விவரமாகப் பேசுகையில், “இப்போது புதியதொரு வேலையைத் துவக்க ஒரு தளம் (ராமர் கோவில் மூலம்) அவர்களுக்குக் கிடைத்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க