நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘அத்தர்’ வாசிப்பு அனுபவம்

இத்தொகுப்பில் சிறிய கதைகளான ஒன்பதும் வெவ்வேறாகப் பிரிந்து, சொல்ல விளையும் களங்கள் ஆழமானவை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட புரிதலைக் காட்சிப்படுத்தும் புதுமை. ஏனெனில், அதில் கையாளப்பட்ட அமைப்பியல் நாம் மட்டும்தான் இவ்வாறு புரிந்துள்ளோமோ என கதைசொல்லியின் மனநிலையோடு ஒட்டாத அந்நியப்படுத்தலை வாசகருக்குத் தருவது அத்தர் மற்றும் பிறகதைகளின் சிறப்பு. கதைகள் ஒவ்வொன்றின் முடிவிலும் நவீனத்துவமான செருகுதல் என்னவாக இருக்கும் என்பதாக அடுத்த கதைக்குள் நுழைவதற்கு கால அவகாசம் கேட்டு நிறுத்திவைக்கிறது. அதன் நுட்பத்தை அறிவதற்காகவே இக்கதைகளை மீண்டும் வாசித்தேன்.

மேலும் படிக்க
salai basheer novel kasabath நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத்: ஆழ்மனத்தின் ஆறாத காயம் – முஹம்மது சேக் அன்சாரி

‘கசபத்’ காயல்பட்டினத் தமிழில் எழுதப்பட்ட அழகிய சுயசரிதை நாவல். காயல்பட்டினத் தமிழ் புதிதாக கேட்பவர்களுக்கு புதுமையாகவும் இனிமையாகவும் இருக்கும். அது இந்த நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. நாவலைப் படித்து முடிக்கும்போது நம் நாவும் அந்த வட்டார மொழியை உச்சரிக்கத் தவறாது.

நாவலாசிரியர் சாளை பஷீரின் ஊர் காயல்பட்டினம். அவரைச் சுற்றி நடந்த சுமார் நான்கு வருட நிகழ்வுகளை அற்புதமாக விவரித்திருக்கிறார் என்பதை விட காட்சிப்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பிறரின் கதையைக் கேட்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு நிறைய பொறுமை வேண்டும். கொட்டாவி விடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்! ஆனால், இந்த அலுப்புகள் எதுவும் இன்றி நாவலை முடிக்கும்வரை சலிப்புத் தட்டாமல் நகர்த்தியிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

மேலும் படிக்க
sundar sarukkai seermai நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (3)

What is God? என்ற நூலில் ஜேக்கப் நீடில்மென் ஜென் ஞானியைச் சந்தித்த நிகழ்ச்சியைப் பகிர்ந்திருப்பார். ஜென் தத்துவ ஞானியான டி.டி. சுசுக்கியிடம் நீடில்மென் சுயம் என்றால் என்ன என்று கேட்பார். அதற்கு அவர் அதைக் கேட்பது யார் என்பார். உறுதியாக “நான்தான் கேட்கிறேன்” என்று நீடில்மென் பதில் சொல்வார். அப்படியானால், எங்கே என்னிடம் காட்டு பார்க்கிறேன் என்பார் சுசுக்கி.

சுயத்தைக் காட்ட முடியாது! இதை தர்க்கமுறைக்குள் கொண்டு வரமுடியாது. மெய்மை குறித்த ஐயமும் இப்படியான புதிர்களுக்குள் நம்மைக் கொண்டு செல்லும். வெளி, காலம் என்பது உண்மையான ஒன்றா? அதாவது, அனுபவபூர்வமாக உணர்வது வெளியின் நிதர்சனத்தைதானா? பிளேட்டோ, அரிஸ்டாட்டில் தொடங்கி வெளி, காலம் குறித்த புரிதல்கள் என்னவாக இருந்துள்ளன? அவற்றிலிருந்து நவீன அறிவியல் எந்த அளவிற்கு வேறுபடுகிறது என்பது பற்றி விரிவான விளக்கங்கள் நான்காம் அத்தியாயத்தில் உள்ளன. நீங்களும் வாசியுங்கள்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (2)

விஞ்ஞானிகள் பற்றிய கற்பிதங்களே அறிவியலாய் நமக்கு போதிக்கப்படுகின்றன. சுய முன்னேற்றத்திற்கான உந்துதலாகவே விஞ்ஞானிகள் பொதுச் சமூகத்திற்கு அறிமுகமாகியுள்ளார்கள். போற்றப்படும் விஞ்ஞானிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் முன்வைத்த கருத்தாக்கங்களைக் கொண்டு மேன்மேலும் அறிவியலை வளர்த்தெடுப்பதற்கு அறிவியலாளர்கள் மிக முக்கியமானவர்கள். அந்த வகையில், அறிவியலாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எப்படி அறிவியல் செய்கிறார்கள் என இரண்டாம் அத்தியாயம் முழுமையாக அலசுகிறது.

மேலும் படிக்க
salai basheer novel kasabath நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத்: நூல் மதிப்புரை – பேரா. ஆர்.முஹம்மது ஹசன்

எழுத்தாளர் சாளை பஷீர் அவர்களின் முதல் நாவலான ‘கசபத்’தை சமீபத்தில் படித்தேன். தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை ஊரான காயல்பட்டினம் தான் கதையின் நிகழ்விடம். காயல்பட்டினத்தை மையமாகக் கொண்டு அதன் வட்டார மொழியில் பண்பாட்டுப் பின்னணியில் வரும் முதல் நாவல் என நினைக்கிறேன்.

காயல்பட்டினம் மிகப் பழைமையான வரலாற்று எச்சங்களையும், பல ஸூஃபி அறிஞர்களின் தடங்களுடன் தமிழ்ச் செறிவும் கொண்ட இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் ஓர் ஊர். இந்நாவலின் ஆசிரியர் சாளை பஷீரின் சொந்த ஊரும்கூட. தான் கண்ட வாழ்வியல் முறைகளை, எளிய மனிதர்களை சிலாகித்த இடங்களை மிகையில்லாமல் பதிவு செய்திருக்கிறார் சாளை பஷீர். காயல்பட்டின ஊரார், குறிப்பாக இஸ்லாமியர்கள் என்றாலே சிவப்புத் தோல் உடையவர்கள், பெரும் செல்வந்தர்கள் எனப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைத்தெறிந்து இருக்கிறார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கிரானடா: முஸ்லிம் ஸ்பெயின் அழிப்பும், நிகழ்கால இந்தியாவும்

ஒரு படைப்பு அதன் இலக்கியச் சுவைக்காகவும், அது உண்டாக்கும் கிளர்விற்காகவும் வாசிக்கப்பதோடு, அது பேசும் அரசியலுக்காகவும்தான் மனங்கொள்ளப்படுகின்றது. கிரானடா நாவல் பேசும் அரசியலின் தகிப்பு நம்மை முழுமையாக தன் வசம் எடுத்துக்கொள்கின்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் இன்றைய தினத்திற்குள்ளும் அதன் கணத் துகள்களுக்குள்ளும் சொரிகின்றது. சிலுவையின் இடத்தை காவி அனிச்சையாகவே மாற்றீடு செய்துகொள்கின்றது. நிகழ்கால இந்தியாவுடன் கிரானடாவின் பனுவலை இணைத்துப் பார்க்காமல் வாசிப்பதென்பது ஒரு வகையில் கள்ள வாசிப்பில்தான் சேர்த்தி.

கிரானடா ஒன்றாம் நாவலின் இறுதிப் பகுதியில் இடம்பெறும் சலீமாவின் மீதான மத விசாரணையையும், அதன் பிறகு கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த கஷ்டிலியப் படையாளிகளால் அவள் கொலைக்களத்தை நோக்கி அழைத்துச் செல்லும் படலத்தையும் வாசித்துக்கொண்டிருக்கும் நாளில்தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளியாகின்றது. கர்நாடகக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கான மாநில அரசின் தடையை உறுதிப்படுத்திய தீர்ப்புதான் அது. இரத்தம் தோய்ந்த வரலாற்றின் ஓர் அத்தியாயம் தனது கூட்டாளியை இரத்தக் கவிச்சி மாறாமல் நோக்கி புன்னகைத்துப் புளகமெய்திய தருணம்.

மேலும் படிக்க
sufi bakli tomb நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ரகசியங்களின் திரைநீக்கம்: ஒரு ஸூஃபியின் டைரி (நூல் விமர்சனம்)

ரகசியங்களின் திரைநீக்கம் (கஸ்ஃபுல் அஸ்றார்) என்ற இந்த நூல் நாட்குறிப்பு வகைமையைச் சார்ந்தது. உலகில் நாட்குறிப்பு வகையிலான இலக்கியங்கள் புதிதல்ல. சீனர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்றாட அரச நிகழ்வுகளையும் அலுவல்களையும் குறித்து வைத்ததன் மூலமாகத் தங்களது வரலாற்றைத் தக்க வைத்துக் கொண்டனர் என்பார் க.ப.அறவாணன் (பார்க்க: தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?).

ரோமப் பேரரசனான மார்கஸ் ஆண்டோனியஸ் அரேலியஸ் எழுதிய ’தியானங்கள்’ (Meditations) நூலும் நாட்குறிப்பு வகைமைச் சார்ந்த தத்துவார்த்த நூலே ஆகும். தனிமனித ஒழுக்கம், அறவிழுமியங்கள், தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்துக்குமான தொடர்பு, இயற்கையின் இயல்புகள் போன்ற விஷயங்களின் மீது அப்புத்தகம் புத்தொளிப் பாய்ச்சுவதால் ஸ்தோயிக் மரபினர் என்றில்லாமல் அனைவரும் வாசிக்கக்கூடிய பொது பனுவலாக அது திகழ்கிறது.

’தியானங்கள்’ மனித வாழ்விற்கான நெறிமுறைகளை முதன்மையாகப் பேசுகின்றதென்றால் ’ரகசியங்களின் திரைநீக்கம்’ பரம்பொருளுக்கும் படைப்பினத்திற்குமான உறவை, காதலை, பக்திப் பரவசத்தைப் பேசுகிறது. ரூஸ்பிஹானின் நூல் முதன்மையாக இறைக் காதலையும் ஒன்றிணைவையும் பேசுவதால் இஸ்லாமிய மெய்யியல் நூல் என்ற தளத்தையும் தாண்டி அனைத்து மரபைச் சேர்ந்த ஆன்மிகச் சாதகர்களுக்குமான பொது நூலாகவுள்ளது.

மேலும் படிக்க
salai basheer novel kasabath நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத் – நுகர்வியத்திற்கு எதிரான குரல்

சாளை பஷீர் தன் வரலாற்றிலிருந்தே காயல்பட்டினத்தின் கடந்த கால வரலாற்றை, தன்னைச் சூழ உள்ள மனிதர்களை, தன் சுயத்தின் நீட்சியை முகிழ்க்கச் செய்கிறார். அவரது கதை மாந்தர்களில் வெள்ளந்தி மனிதர்கள், எளியவர்கள், புத்தகப் பிரியர்கள், அடுத்தவரைச் சுரண்டி வாழ்பவர்கள், அடுத்தவர்களுக்கு உதவுபவர்கள், சம்பாத்தியமே வாழ்க்கை என அலைபவர்கள் எனப் பல்வேறு மனிதர்கள் வந்து போகிறார்கள். அவர் பாத்திர வடிவமைப்பை மிகக் கச்சிதமாக அமைத்திருப்பது அவரின் அனுபவத்தின் துணை கொண்டே. நாவலில் வரும் முதல் கதாபாத்திரமான தாவூதப்பா முதல் இறுதிக் கதாபாத்திரமான குட்டை ஷாஃபி வரை எந்தக் கதாபாத்திரமும் புனைவில் உருவாக்கப்படவில்லை என்பது மிகத் தெளிவு. மிகவும் தத்ரூபமாக அவர்களை எங்கள் மனக்கண் முன்பு நிறுத்துகிறார் சாளை பஷீர்.

மேலும் படிக்க
social media islam tamil நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சமூக ஊடகம் தொடர்பான இஸ்லாமிய ஒழுங்குகளை நினைவூட்டும் புத்தகம்

எதிர்மறையான விசயங்கள் வேகமாகப் பரவும் இயல்புடையவை என்பதை அவை சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவுகின்றன. ஆனாலும் அவற்றை நேர்மறையான, நல்ல விசயங்களைப் பரப்புவதற்கும் பயன்படுத்த முடியும், நாம் சில ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால். இந்தச் சிறிய புத்தகம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில ஒழுங்குகளை நமக்கு நினைவூட்டுகிறது.

மேலும் படிக்க
social media islam tamil நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சமூக ஊடகங்களை நாம் சரியான முறையில்தான் பயன்படுத்துகிறோமா?

தற்காலத்தில் சமூக ஊடகங்களை நாம் முழுமையாகத் தவிர்க்க முடியாது. ஆனாலும் நம்முடைய பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வாறு செய்யவில்லையெனில் தேவையற்ற விசயங்களில் நம்முடைய நேரங்களை, ஆற்றல்களை வீணாக்கியதற்காக நாம் வருத்தப்படக்கூடியவர்களாக, நம்மை நாமே நொந்து கொள்ளக்கூடியவர்களாக மாறிவிடுவோம். இழந்த காலத்தை நாம் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. நமக்கு வழங்கப்பட்டுள்ள நேரமும் ஆரோக்கியமும் ஆற்றல்களும் மிக முக்கியமானவை. அவை தேவையற்ற விவகாரங்களில் வீணடிக்கப்பட்டுவிடக் கூடாது.

இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். இது நம்மை நாமே பார்த்துக் கொள்வதற்கான, சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான கண்ணாடி.

மேலும் படிக்க