கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கமால் மௌலா: கோயிலாக மாற்றப்பட்ட பள்ளிவாசல்!

Loading

மத்திய பிரதேசத்தில் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கமால் மௌலா பள்ளிவாசல், உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் தெளிவான வழிகாட்டல்கள் உள்ள போதும், பள்ளிவாசல்களுக்கான உரிமை கோரல்களை இந்து வலதுசாரிகள் தொடர்ந்து முன்வைக்கின்றனர். நீதிமன்றங்களும் அவற்றை அனுமதிக்கின்றன.

‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் முறையாக பின்பற்றப்படும்’ என்று பாபரி பள்ளிவாசல் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியதை மிகப்பெரும் கேடயமாக நம்பியிருக்கும் முஸ்லிம்களுக்கு இத்தகைய தீர்ப்புகள் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

நீதியை நிலைநாட்டி, முஸ்லிம்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் நீதித்துறைக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கொடிக்கால் மாமா — முக்கால் நூற்றாண்டுக் காலப் பெருந்தடம்

Loading

எழுபத்தைந்து வருட ஓட்டமென்பது இரு தலைமுறைக் காலங்களையும் தாண்டிய ஒன்று. அத்தகைய நெடிய காலத்தை வெறும் எண்களுக்குள் குறுக்கிவிட இயலாத அளவிற்கு நிகழ்வுகளும் படிப்பினைகளும் ஈகங்களும் நிறைந்த வாழ்க்கை கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வுடையது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அலீ ஃகாமினயீ: இஸ்லாமிய ஈரானைச் செதுக்கிய சிற்பி

Loading

பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இமாம் அலீ ஃகாமினயீ. அவர் இமாம் ஃகுமைனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.

அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிலருக்கான  சிறப்புச் சலுகையே மனிதநேயம்
விசாரணையின்றி ஆறாண்டுகளாக இந்தியச் சிறையில் வாடும் உமர் காலித்

Loading

இன்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் இரவு நேரச் செய்தி விவாதங்களில் காலித்தின் பெயரைத் தூற்றி, அவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்றும், தேச விரோதி என்றும் முத்திரை குத்துகின்றனர். மறுபுறம், இடதுசாரி ஆர்வலர்கள் தங்களின் போராட்டங்களில் அவரது பெயரை முழங்குவதோடு, அவரது முகம் பொறித்த டி-சர்ட்டுகளையும் அணிந்து கொள்கின்றனர்.
ஆறு ஆண்டுகளாக டெல்லி திஹார் சிறையில் விசாரணையும் இன்றி பிணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், தனது சிறை அனுபவங்களை ‘தி கார்டியன்’ இதழுக்கு வழங்கிய பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்த் திரை சொல்ல மறந்த கதை- ஹபீபி

Loading

தமிழ்த் திரை சொல்ல மறந்த கதை- ஹபீபி

ச. அகமது

திரையுலகில் முஸ்லிம்களை பெரும்பாலும் எதிர்மறையாக சித்தரிக்கும் நிலையில், அசல் தன்மையுள்ள கதைகளையும் கதை மாந்தர்களையும் பொது சமூகத்திற்கு அப்பட்டமாக ஒரு இருட்டு அறையில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

ஹபீபி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல தொடக்கமாகட்டும். ஹபீபியின் கரங்களை பற்றிக் கொண்டு நட்பு பாராட்ட ஓராயிரம் விரல்கள் வரட்டும். உலக அரங்கில் அவ்விரல்கள், அக்கரங்கள் நமது வாழ்வியலின் காத்திரமான கதைகளுக்காக கரவொலி எழுப்பட்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

Gen Z அரசியலின் தொடக்கமா CJP?

Loading

டைனோர்சர்களை அழித்த விண்கற்களின் தாக்குதல் உட்பட பல பேரழிவுகளில் இருந்து தப்பித்த உயிரினங்களில் ஒன்று கரப்பான்பூச்சி. ஒவ்வொரு நிலப்பரப்பின் சூழலுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் இந்த உயிரினத்தின் திறன் அபாரமானது.
இந்திய இளைஞர்களை குறிப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு எதிரொலியாக கரப்பான்பூச்சியின் பெயரால் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இணையத்தை பயன்படுத்தி பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் செல்வாக்கை பெற்று வரும் இந்த அணி, யாரை குறிவைத்து, எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தோற்றப் பின்னணியையும் அதன் செயல்பாட்டு முறையையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கண்ணியம், சுயாதீனம், சுய நிர்ணய உரிமையுடன் ஆதிக்கத்தை நிறுவிய ஈரான்!

Loading

‘வெனிசுலா மாதிரி’யை அப்படியே மீட்டுருவாக்கம் செய்து அதன் மூலம் ஈரான் தலைமைத்துவத்தின் அரசியல், ராணுவ நடத்தைகளை மாற்ற வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் முற்றிலும் சிதைந்துள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் காத்திரத் தன்மையும் அதன் கருத்தியல் பலமுமே அமெரிக்காவின் இத்தோல்விக்கான காரணமாகும்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் சமீபத்திய கூட்டு இராணுவ நடவடிக்கைகள் முழுமையான தோல்வி என்பதோடு, அவை ஈரானை அச்சுறுத்துவதிலும் பின்னடையச் செய்வதிலும் வெற்றி பெறவில்லை; அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கவும் இல்லை. மாறாக, இஸ்ரேலை மிகப் பலவீனமான ஒரு வியூகம்சார் நிலைப்பாட்டுக்கே அவை தள்ளியுள்ளன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலத்தின் விடியலும் வரலாற்றின் பாடமும்: முஹர்ரம் தரும் புரட்சிகர சிந்தனைகள்

Loading

ஹிஜ்ரத் என்பது வெறும் இடம்பெயர்வோ அல்லது ஒரு இடத்தில் இருந்து தப்பித்துச் செல்லும் நிகழ்வோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் உலகை மாற்றி அமைக்கும் பெரும் சக்தியாக மாறுவதற்கான மாபெரும் பாய்ச்சலாக அது அமைந்தது.
அதிகாரத்தின் நிழலில் நின்று அக்கிரமத்தையும் அநீதியையும் மேற்கொண்டவன் இறைநம்பிக்கையின் வலிமையோடு அழிக்கப்பட்டது முஹர்ரம் மாதத்தில்தான்.
சர்வாதிகாரத்தை தீர்க்கமாக எதிர்கொண்ட கர்பலா நிகழ்ந்ததும் இதே மாதத்தில்தான்.
கண்ணீர் சிந்துவதற்காக அல்ல, மாறாக, வரலாற்றை நெறிமுறை சார்ந்த வீரத்தோடு எதிர்கொள்ளும் பாடங்களையே ஹிஜ்ரத்யும் முஹர்ரமும் நமக்கு கற்றுத் தருகின்றன என்பதை விவரிக்கும் கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விசாரணை சிறைவாசிகளும் மறுக்கப்படும் மருத்துவ உரிமைகளும்

Loading

சிறையில் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். சமூகத்தில் உள்ளவர்கள் பெறும் அதே தரத்திலான சிகிச்சையை சிறைவாசிளும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச விதிகளும் நீதிமன்ற தீர்ப்புகளும் கூறுகின்றன.
ஆனால் நடைமுறையில் சிறைவாசிகளும் மருத்துவ சிகிச்சை தொடர்ந்து மறுக்கப்படுவதை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. தண்டனையும் இன்றி விசாரணையும் இன்றி அல்லல்படும் விசாரணை சிறைவாசிகளும் இந்த உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர்.
விசாரணை சிறைவாசிகளுக்கு மறுக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை இந்த கட்டுரை அலசுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் வெறுப்புக் குற்றங்கள்
ஜூன்– ஆகஸ்ட் 2025க்கான அறிக்கை

Loading

இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. சிவில் அமைப்புகள் இதனைக் குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (APCR) ஜூன் முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த வெறுப்புக் குற்றங்கள் குறித்த விபரங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் வெறுப்புக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை என்ற அவலத்தையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் படிக்க