விளையாட்டு வீரர்களையும் திரைப்பட நடிகர்களையும் தங்களின் முன்மாதிரிகளாக எடுத்துக் கொள்ளும் மாணவர்கள், ஏன் தினமும் சந்திக்கும் ஆசிரியரை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்வதில்லை? தொழில்நுட்ப வளர்ச்சியும் கற்றலுக்கான புதிய வழிகளும் பாடப்புத்தகங்களைத் தாண்டிய கற்றலை இன்று சாத்தியமாக்கியுள்ளன. இச்சூழலில் ஆசிரியருக்கான சவாலும் பொறுப்பும் அதிகரித்துள்ளன.
தொழில்நுட்பம் ஒரு கருவி மட்டுமே. கற்றலை உயிர்ப்பிக்கும் சக்தி ஆசிரியரிடமே இருக்கிறது.
2026 சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்திய ஃபிஃபா அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் இந்த போட்டித் தொடரில் எழுந்தன. அத்துடன் சர்வதேச அரசியலின் பிரதிபலிப்பாகவும் இந்த போட்டிகள் இருந்தன. விளையாட்டுப் போட்டிகளில் இருக்க வேண்டிய போட்டி மனப்பான்மையை கடந்து அதனை அரசியல் பழிவாங்கும் தளமாக அமெரிக்கா பயன்படுத்தியது. இதற்கு ஃபிஃபா முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.
ஆட்டத்தின் அழகை கெடுக்கும் அமைப்புகளின் அநீதிகளையும் ஏகாதிபத்தியத்தின் போலித்தனங்களையும் உலகம் ஒருபோதும் மறக்காது என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் வன்முறைகளும் இயல்பாக்கப்படுகின்றன. அவை தின நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. ஆனால், பெரும் பதவிகளிலும் அதிகார மட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் இந்துத்துவவாதிகள் தங்கள் செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வருகின்றனர்.
கும்பல் படுகொலை வழக்கு ஒன்றில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய ஒரு முஸ்லிம் பெண் நீதிபதிக்கு எதிராக திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரத்தை இந்துத்துவவாதிகள் மேற்கொண்ட நிலையில், நீதித்துறையும் இதில் உறுதியான நடவடிக்கையை இதுவரை எடுக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
1948 நக்பா (பேரழிவு) நிகழ்விற்குப் பிறகு மிகப்பெரும் சவாலை ஃபலஸ்தீன மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் அதன் பிரதான போராட்ட இயக்கமான ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடும் நெருக்கடிகளையும் புதிய சவால்களையும் எதிர்நோக்கும் காலத்தில் கலீல் அல் ஹய்யா இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் முன்னணி நாடாக ஈரான் உருவெடுத்துள்ள நிலையில் ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட அல் ஹய்யாவின் தலைமையில் இயக்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அடக்கி ஆள வேண்டும் என்று போதனை செய்யும் இஸ்லாம், அநீதிக்கும் வரம்பு மீறலுக்கும் எதிராக கோபம் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. கோபம் அதன் சரியான வடிவத்தில் இருக்கும்போது இயற்கையானது மட்டுமல்ல, உன்னதமானதுமாகும்.
நமது இறைநம்பிக்கையில் வேரூன்றிய, நம் நெறிமுறைகளால் வழிநடத்தப்படும், கண்ணியம் என்பது சிலருக்கு மட்டுமான சலுகை அல்ல — அது அனைவருக்கும் உரிய உரிமை என்பதை உறுதி செய்யும் ஓர் உலகத்தை நோக்கிய கோபமே நமக்குத் தேவை.
ஃபலஸ்தீன நிகழ்வுகளை மையமாக வைத்து இச்சிறிய, ஆனால் முக்கியமான பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது இக்கட்டுரை.
தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனர் தென்காசி மு.ந. அப்துர் ரஹ்மான் ஸாஹிபு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய மகனாரும் பன்னூலாசிரியரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே. ரிபாயி அவர்கள் ‘சமுதாய நீரோட்டத்தில் சங்கமம்’ என்ற பெயரில் ஒரு நூலாக எழுதியுள்ளார். தென் தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில் தொடங்கி அலையலையாக நடந்துவந்த இஸ்லாத்தை நோக்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் பெருந்திரள் மதமாற்றங்களைப் பற்றி அந்நூலில் இடம்பெற்றுள்ள ‘மத மாற்ற அலைகள்’ என்ற ஆறாவது அத்தியாயம் பேசுகிறது. மெய்ப்பொருள் வாசகர்களின் வாசிப்புக்கென அதை இங்கு அப்படியே தந்துள்ளோம். – மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர்
மத்திய பிரதேசத்தில் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கமால் மௌலா பள்ளிவாசல், உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் தெளிவான வழிகாட்டல்கள் உள்ள போதும், பள்ளிவாசல்களுக்கான உரிமை கோரல்களை இந்து வலதுசாரிகள் தொடர்ந்து முன்வைக்கின்றனர். நீதிமன்றங்களும் அவற்றை அனுமதிக்கின்றன.
‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் முறையாக பின்பற்றப்படும்’ என்று பாபரி பள்ளிவாசல் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியதை மிகப்பெரும் கேடயமாக நம்பியிருக்கும் முஸ்லிம்களுக்கு இத்தகைய தீர்ப்புகள் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.
நீதியை நிலைநாட்டி, முஸ்லிம்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் நீதித்துறைக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது.
எழுபத்தைந்து வருட ஓட்டமென்பது இரு தலைமுறைக் காலங்களையும் தாண்டிய ஒன்று. அத்தகைய நெடிய காலத்தை வெறும் எண்களுக்குள் குறுக்கிவிட இயலாத அளவிற்கு நிகழ்வுகளும் படிப்பினைகளும் ஈகங்களும் நிறைந்த வாழ்க்கை கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வுடையது.
பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இமாம் அலீ ஃகாமினயீ. அவர் இமாம் ஃகுமைனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.
அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!
இன்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் இரவு நேரச் செய்தி விவாதங்களில் காலித்தின் பெயரைத் தூற்றி, அவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்றும், தேச விரோதி என்றும் முத்திரை குத்துகின்றனர். மறுபுறம், இடதுசாரி ஆர்வலர்கள் தங்களின் போராட்டங்களில் அவரது பெயரை முழங்குவதோடு, அவரது முகம் பொறித்த டி-சர்ட்டுகளையும் அணிந்து கொள்கின்றனர்.
ஆறு ஆண்டுகளாக டெல்லி திஹார் சிறையில் விசாரணையும் இன்றி பிணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், தனது சிறை அனுபவங்களை ‘தி கார்டியன்’ இதழுக்கு வழங்கிய பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.