கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மால்கம் X-ம் கவிதையும்: ஓர் இரகசிய உறவின் கதை

Loading

சிறையிலிருந்து விடுதலையான பின், அடிமை வம்ச பெயரை தூக்கி எறிந்து, மால்கம் X ஆனார், அந்தக் கவிஞர். அமெரிக்க கறுப்பர்களின் விடுதலையை நோக்கி ஓடத் தொடங்கிய அந்த இளைஞனால், அடுத்து கவிதை இயற்ற முடியவில்லை.
ஆனால், சொல்லே தன் செயலாக வாழ்ந்த அவருக்கு, கவிதையின் இலக்கணமே மேடைப் பேச்சில் கவிந்தது. ஆற்றல் மிக்க பேச்சாளராக உருமாறிய மால்கமின் வார்த்தைகளில் தெறித்தது வெறும் அரசியல் முழக்கங்களோ, ஆவேச உணர்வுகளோ அல்ல. அவை கவிதைகள்.
போராட்ட நாயகனாக அறியப்படும் மால்கம் X கவிதையுடன் கொண்டிருந்த ஆச்சர்யமான உறவை விவரிக்கும் கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சமுக மாற்றத்தின் அடிப்படை

Loading

மாற்றம் என்பது சமூகம் தொடர்பான ஒன்றாக இருப்பினும் கூட சமூகத்தின் அஸ்திவாரமாக  இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரிலும் இருந்து அது ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தம்மைத்தாமே மாற்றிக் கொள்ள வேண்டும். அனைவரிடமும் தத்தமது உடல்சார், உளம்சார், சிந்தனைசார், மன எழுச்சிசார் மாற்றங்கள் நிகழ வேண்டும். மாற்றங்கள் தனித்தனியாக ஒவ்வொரு தனிமனிதரிலும் நிகழத்தக்க மாற்றங்களே. இதுதான் சமூகத்தின் ஒட்டுமொத்த மாற்றமாகி மேம்பாட்டை நோக்கி நகரும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மகளிர் தினம் 2026: கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறக்கப்படும் உண்மைகள்!

Loading

நுகர்வுக் கலாச்சாரத்தின் மாயையிலிருந்து விடுபட்டு, தார்மீக விழுமியங்களை நோக்கிய பயணமே பெண்களுக்கு உண்மையான விடுதலையைத் தரும். 2026-ஆம் ஆண்டின் மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமாக முடிந்துவிடாமல், அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் ஒரு ‘செயல்பாட்டுத் தினமாக’ (Day of Action) மாற வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பத்ரு தரும் படிப்பினைகள்

Loading

முஸ்லிம்கள் சந்தித்த முதல் போர் என்று வர்ணிக்கப்படும் பத்ர் போர் ஏராளமான படிப்பினைகளை விட்டுச் சென்றது. இறை நம்பிக்கை, தலைமைத்துவம், மன உறுதி, அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பது என றமளான் மாதம் நடைபெற்ற இந்த போர் தரும் பாடங்களை விவரிக்கிறது இந்த கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் எங்கே?

Loading

அடையாளம், சமத்துவம், பாதுகாப்பு என அனைத்து கிளைப் பிரச்சனைகளுக்கும் நாம் தனித் தனியாக தீர்வை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்திற்கும் சர்வ ரோக நிவாரணியாக அரசியல் அதிகாரம் இருக்காது என்றாலும் இதில் பெரும்பான்மை பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால்தான் அரசியல் அதிகாரம் அவசியம் என்று வாதிடுகிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சாதிவாரிக் கணக்கெடுப்பும் சாதி ஒழிப்பும்

Loading

சாதி ஒழிப்பு இயக்க அறிவாளிகளுள் ஒருவராகத் திகழும் ஆனந்த் தெல்தும்ப்டேவின் The Caste Con Census நூல், சாதி ஒழிப்பு இயக்க வட்டாரத்தின் பொதுப்போக்குக் கருத்துகளுடன் முற்றிலும் மாறுபட்ட நிலையில் நின்று விவாதிக்கிறது. நூலின் முதன்மையான வாதங்களை குறைத்தலோ சுருக்கலோ இன்றித் தொகுத்துரைத்து, அவற்றின் மீதான விமர்சனங்களை இக்கட்டுரை முன்வைக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு நாள் மனிதர்கள்?!

Loading

“எவனுடைய இரண்டு நாட்கள் ஒரே மாதிரியாக கடத்தப்படுகின்றதோ அவன் மிகப் பெரிய நஷ்டவாளி.” (பைஹகீ)

இரண்டு நாட்களை ஒரே மாதிரியாக கடத்துபவன் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றான் என்றால் ‘இரண்டு றமளானை ஒரே மாதிரியாக கடத்துபவர்கள் எத்தகையவர்களாக இருப்பர்?! அப்படி ஒரே மாதிரியான நிலையில் தனது நாட்களை, குறிப்பாக றமளானை கடந்து போகின்றவர்கள் தங்களுடைய நிலை குறித்து அதிகம் சிந்தித்திட, அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்திட கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புதிய பாதைகளை உருவாக்கும் வங்கதேசத் தேர்தல்

Loading

ஜென் ஸீக்கள் தொடங்கிய போராட்டம் நாற்பது ஆண்டுகள் வங்கதேச அரசியலில் முக்கிய அங்கமாக இருந்த ஷேக் ஹஸீனாவை நாட்டை விட்டும் வெளியேற்றியது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளும் நிலையற்ற அரசாங்கங்களும் கொண்ட வங்கதேசத்தில் இன்று உருவாகியுள்ள புதிய அரசாங்கம் ஜனநாயகத்தின் திருப்புமுனையாக அமையுமா? வங்கதேச வரலாற்றுப் பின்னணியுடன் சமீபத்திய தேர்தல்குறித்த பகுப்பாய்வை இந்தக் கட்டுரை வழங்குகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கட்டுறுதி கொண்டவராக இருப்பதன் முக்கியத்துவம்

Loading

இஸ்லாம் ஆர்வமூட்டும் விளையாட்டு மரபுகள் மனம், உடல், ஆன்மா அனைத்தையும் ஒருசேர வலுப்படுத்துகின்றன. இஸ்லாத்தில் விளையாட்டிற்கு உடல் ரீதியான பயனையும் தாண்டி ஓர் உயர்ந்த நோக்கம் உள்ளது. அதுதான் ‘ஃபனா’ (fana) — அதாவது மனிதன் தனது ஈகோவை அல்லது சுயத்தைப் பூஜ்யமாக்கி, தன் நாட்டங்களை அல்லாஹ்வின் நாட்டத்தோடு இணைப்பதாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆலி முஸ்லியார்: மலபார் புரட்சியின் தலைமகன்

Loading

ஆலி முஸ்லியார் வெளிப்படுத்திய வார்த்தைகள், மரணத்தைக் கண்டு அஞ்சாத அவரது தீரத்தைக் காட்டுகின்றன: “நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். விரைவில் நாங்கள் எதிர்கொள்ளப் போகும் மரண தண்டனையைப் பற்றிய எண்ணம் எங்களைச் சிதைக்கவில்லை. எங்களைப் போன்ற நிரபராதிகள் அனுபவிக்கும் இந்த வலியும் துயரமும் ஒருபோதும் வீண் போகாது என்ற சிந்தனையே எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன.”

மேலும் படிக்க