சிறுகதை முக்கியப் பதிவுகள் 

ஒரு சொல் (சிறுகதை)

Loading

“இருபத்தஞ்சு வருஷம் கால் நூற்றாண்டு உழச்சுப்போட்டுதான் இக்கிறேன். மாசச் செலவுக்கு இல்லன்னு சொல்லி யார்ட்டயும் போய் நின்னதில்ல. இன்னிக்கு இந்த மாதிரி சிக்கல். புது முயற்சி எடுத்தா கொஞ்ச நாளய்க்கு நடக்குது, அப்புறம் வாய் பாக்க வேண்டியீக்குது. அல்லாஹ்தான் தரணும். காச உண்டாக்க முடியலன்டா எவன்டயும் போய் நிக்க மாட்டேன். அது மட்டும் உறுதி. பேசாம தோல்விய ஒத்துக்கிட்டு மல்லாக்கப் படுத்துறுவேன்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் மதரசாக்கள் – நிழலும் நிஜமும்

Loading

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இன்னும் 8.5 கோடி குழந்தைகள் பள்ளியையே எட்டிப் பார்க்காத நிலையில், மதரசாக்கள் தன்னளவில் அறிவொளியைப் பரப்பியே வருகின்றன. அதிலும், மதரசாக்களில் பயில்பவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களாகவும் பெண்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கான உணவு, உறையுள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளோடு அவர்களுக்கான கல்வியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு இல்லையென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காத தற்குறிகளாகத்தான் ஆவார்கள். நவீனச் சிந்தனை என்ற போர்வையில் மதரசாவை மட்டும் குறிவைத்துத் தாக்குபவர்கள் சிறுபான்மைச் சமுதாயத்திற்கு எதைக் கையளிக்கப்போகிறார்கள்?

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

அத்தர் (சிறுகதை)

Loading

வெள்ளை உடை தரித்த இரண்டு வீரர்கள் கையில் வாளுடனும் நீண்ட தலைப்பாகையுடனும் காவல் இருக்க, பச்சைத் தலைப்பாகையுடன் நீண்ட வெள்ளைத் தாடியுடன் இஸ்லாமிய ஸூஃபிப் பெரியவர் அகர் கட்டைகளிலான தஸ்பீஹ் மாலையை உருட்டிக்கொண்டிருந்தார். அருகில் மற்றொரு உருவம். ‘மினல்லாஹி இலல்லாஹி… மினல்லாஹி இலல்லாஹி…’ அதன் முதல் மணியை அவரது கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவில் உருட்டியபோது நான் ஓடையிலிருந்து தூக்கியெறியப்பட்டு அவர்களுக்குச் சமீபமாக நின்றுகொண்டிருந்தேன். மலாயன் புலிக்குட்டிகள் நான்கு ‘உர்ரெனச்‘ சுற்றிக்கொண்டிருந்தன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மதரசாக் கல்வித் திட்டம் – நேற்றும் இன்றும்

Loading

முகலாயர் காலத்தில், குறிப்பாக அக்பரின் காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் மதரசாக்களில் ஒருசேர கல்வி பயில ஊக்குவிக்கப்பட்டனர். ஏழ்மை அறிவுத் தேட்டத்திற்கான தடைகல்லாக இருக்கக் கூடாது என்பதற்காக மேல்படிப்பு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கும் நடைமுறையும் முதன்முதலாக மதரசாக்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மதரசாக்களின் மாணவர்கள் நல்லொழுக்கம், கணிதம், அளவையியல், வேளாண்மை, வடிவியல், எண்சோதிடம், வானவியல், அரசியல், பொதுநிர்வாகம், மருத்துவம், தர்க்கவியல், இயற்பியல் உள்ளிட்ட 18 வகையான பாடங்களைக் கற்றுத்தேற வேண்டியிருந்ததாக அபுல்ஃபஜல் தனது அய்ன் இ அக்பரியில் குறிப்பிடுகிறார். நவீன பாரதத்தின் தந்தை, இந்து மதச் சீர்திருத்த சிற்பி என்று புகழப்படும் ராஜாராம் மோகன்ராய் இத்தகைய இஸ்லாமியக் கலைக்கூடத்தில் பயின்றவரே.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

சங்குத்தவம் (சிறுகதை)

Loading

”இந்தக் காலத்தில் அறபியை மட்டும் படிச்சாப் போதுமா? உலகம் பூரா இங்கிலீஷ்காரன் தன்னோட பாஷையைத் திணிச்சி வச்சிருக்கான்… அதுலேர்ந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று மக்கள் கூடியிருந்த நிஜாமியா வளாகத்தில் நான் காலையில் முழங்கியபோது ஊர் மக்களுக்குக் கலககாரனாகத் தெரிந்தேன். ”கால் காசு படிப்புனாலும் இங்கிருந்து இராம்நாட் கிறிஸ்துவ ஸ்வார்ட்ஸ் ஸ்கூலுக்குத்தான் போகணும்” என்றேன்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும் – நூல் அறிமுகம்

Loading

பலரும் பதில் சொல்லத் தயங்கும் ஒரு கேள்வி, ஃகிலாஃபத் எப்படி மன்னராட்சியாக மாற்றப்பட்டது என்பதுதான். அதற்கு அளிக்கப்படும் மழுப்பலான பதில்கள் தெளிவின்மையை, குழப்பத்தை அதிகரிப்பவை. அது தாமாகவே அந்த நிலையை அடைந்துவிட்டது என்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தக்கூடியவை. இங்கு அது தானாக மாறவில்லை. தனிமனிதர்களின் சுயநலத்தால் அது வலுக்கட்டாயமாக மன்னராட்சியாக மாற்றப் பெற்றது என்பதை உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்”

Loading

இலங்கையில் இன மோதல் காரணமாகத் தமிழ்நாட்டில் சுமார் 110 முகாம்களில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் அகதிகள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். மொழியாலும், பண்பாட்டாலும் பல ஒற்றுமைகள் இருக்கும் தமிழ் நிலத்தில் தமிழர்கள் அகதிகளாக இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. தமிழ் அகதிகள் நிலையை மாற்ற பல்வேறு மட்டங்களில் உரையாடல்கள் உருவாக்க வேண்டியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அகதிகள் தொடர்பில் இந்திய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு அரசு, சட்டம் மற்றும் முகாம் அமைப்புகள் எப்படி உள்ளன என்பதில் சில புரிதல்களை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இது அந்த மக்கள் சந்தித்து வரும் சிக்கலான நிலையை வெளிப்படுத்த உதவும் என்று நினைக்கின்றேன்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை – நூல் அறிமுகம்

Loading

திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல. அதன் வசனங்களுக்கு மத்தியில் வெளிப்படையான, நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பம் முதல் இறுதிவரை நுண்ணிய இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. அதன் அத்தியாயங்களுக்கு மத்தியிலும் தொடர்புகள் இருக்கின்றன. அதன் அத்தியாயங்கள், வசனங்கள் இறைக்கட்டளையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதற்கு ‘இல்முல் முனாஸபாத்’ என்று பெயர். இது திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – நூல் அறிமுகம்

Loading

சையித் குதுப் எழுதிய புத்தகங்களில் முதன்மையான புத்தகமாக ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற புத்தகத்தையே கூறுவேன். தமிழில் 260 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்ட மிகச் சிறந்த புத்தகம். ஒவ்வொரு நம்பிக்கையாளனும் ஒரு பாடத்திட்டமாகக் கருதி பயில வேண்டிய புத்தகம் அது. இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் ஊழியர்களுக்கு – குறைந்தபட்சம் பொறுப்பாளர்களுக்கு – இந்தப் புத்தகத்தை வாசிக்கும்படி பரிந்துரைக்க வேண்டும். இஸ்லாம் குறித்து வாசிக்க விரும்புவோருக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகமும் மனித வாழ்வும் – ஒரு தத்துவார்த்த பார்வை

Loading

நாத்திகம் என்றால் என்ன? கடவுள் இல்லை என்ற ‘நம்பிக்கை’யைத்தான் நாம் நாத்திகம் என்கிறோம். கடவுள் இல்லை என்பது ஒரு நம்பிக்கையா? ஆதாரமின்றி அல்லது தர்க்க ரீதியான சரியான காரணமின்றி முன்வைக்கப்படும் கூற்றுகள் அனைத்துமே நம்பிக்கைகள்தானே!

கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் உண்டா என்று நாத்திகர்களிடம் கேட்டால், இருப்பதற்குத்தான் ஆதாரம் கொடுக்க முடியும்; இல்லாததற்கு ஆதாரம் கொடுக்கத் தேவையில்லை என்று அவர்கள் சொல்லக்கூடும். இவ்வாதம் ஏற்புடையதன்று. கடவுள் இல்லை என்று அவர்களுக்கு எப்படி தெரியும், அதைத் தக்க ஆதாரத்துடன் அவர்கள் முன்வைத்தால் நாமும் தெரிந்துகொள்ளலாம் அல்லவா!

மேலும் படிக்க