கட்டுரைகள் 

ஈமானும் ஈமானிய அனுபவங்களும்

Loading

ஈமானிய அனுபவங்கள் என்று நான் குறிப்பிடுவது இறைவனின் உதவியை, அருகாமையை, தோழமையை, கண்காணிப்பை, பராமரிப்பை ஆற்றலை, அவன் அமைத்த நியதிகளை நம்பிக்கையாளன் உணர்வதாகும். அவன் எந்த நிலையிலும் உதவியின்றி கைவிடப்படமாட்டான். அவன் எதிர்பாராத, அறியாத புறத்திலிருந்து அவனுக்கு உதவிகள் வந்துகொண்டேயிருக்கும். இக்கட்டான, சிரமமான சூழலில்கூட வெளியேறுவதற்கு மிக இலகுவான வழியை அவன் பெறுவான். இறைசார்ந்த வாழ்க்கையில் மட்டுமே இத்தகைய அனுபவங்கள் சாத்தியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பமும் இஸ்லாமிய இயக்கமும்

Loading

சாத்வீகமான, அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் ஆரம்பத்தில் கோமாளிகளாக, கோழைகளாக சித்தரிக்கப்பட்டலாம். ஆனால் பிற்பாடு அவர்கள்தாம் நிலைத்திருப்பார்கள். அறிவுப்பூர்வமான எதுவும் நீண்ட தர்க்கத்திற்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்படும். உணர்ச்சிகளைத் தூண்டுபவர்கள் உடனடி விளைச்சல்களை அறுவடை செய்யலாம். ஆனால் அவர்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

கடும்போக்குவாதம்

Loading

ஈமான் மென்மையை, பொறுமையை, சகிப்புத்தன்மையை ஏற்படுத்தும். அது உள்ளங்களை வென்றெடுப்பதற்கான சாத்தியமான வழிமுறைகளையே பின்பற்றும். அது ஒருபோதும் வெறுப்பூட்டும் பிரச்சாரத்திடம் அடைக்கலம் கோராது. நம்பிக்கையாளர்கள் ஒருபோதும் தங்களின் தனிப்பட்ட காழ்ப்புகளை, வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கு இஸ்லாத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவிட மாட்டார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

உறவுச் சிக்கல்கள்

Loading

பொறுமைக்கு தொடர் பயிற்சி அவசியம். ஒரு மனிதன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கிக் கொள்ள வேண்டும். தன் கோபத்தை, வெறுப்பை, பொறாமையை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறும் மனிதன் மகத்தான மனிதனாக மாற்றடைகிறான். பொறுமை என்பது தீய உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவற்றின் மூலமாக நமக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு நேர்ந்துவிடாமல் காத்துக் கொள்வதும் ஆகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பணிவும் கண்ணியமும்

Loading

கண்ணியம் என்பது அல்லாஹ் அளிப்பது. அது நம்மிடம் இருக்கும் திறமைகளைக் கொண்டு சம்பாதிக்க முடியாதது. தான் விரும்பியவர்களை அவன் கண்ணியப்படுத்துகிறான். தன் பக்கம் திரும்புவர்களையே அவன் விரும்புகிறான். அவன் யாரை கண்ணியப்படுத்த நாடுகிறானோ அவரை யாராலும் இழிவுபடுத்த முடியாது. அவன் யாரை இழிவுபடுத்த நாடுகிறானோ அவரை யாராலும் கண்ணியப்படுத்த முடியாது. பாவிகள் உண்மையான கண்ணியத்தை ஒருபோதும் பெற மாட்டார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அறிதல் முறைகள்

Loading

புத்தகங்களில் மற்றவர்களின் ஆய்வுகளை, அனுபவங்களை, அனுமானங்களை வாசிக்கின்றோம். பயணங்களில் பிரபஞ்சத்தை, இயற்கையை வாசிக்கின்றோம். மனிதர்களினுடனான சந்திப்புகளில் மனிதர்களை வாசிக்கின்றோம். ஒரு மனிதனின் சிந்தனையை விசாலப்படுத்துவதில் இந்த மூன்றுக்கும் பெரும் பங்கு இருக்கின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தனிமையும் வெறுமையும்

Loading

இறைநினைவு இல்லாத உள்ளங்களில் ஷைத்தானின் ஆதிக்கமே நிலைத்திருக்கும். அவை காற்றில் அடித்துச் செல்லப்படும் தூசிகள்போல எந்தவொன்றாலும் மிக எளிதாக இழுத்துச் செல்லப்பட்டுவிடும். அவை சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை இழந்த சூழலின் கைதிகள். சுதந்திரமான மனிதன் என்பவன் தன் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளவன்; இச்சைகளால் வழிநடத்தப்படாதவன்; எந்தவொன்றுக்கும் அடிமையாதவன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

குடும்பம் என்னும் வலுவான உந்து சக்தி

Loading

ஆன்மாக்களுக்கு மத்தியிலுள்ள ஒத்திசைவு வலுவான குடும்பத்திற்கான அடிப்படை. ஆண், பெண் தொடர்பு ஊடலும் கூடலும் கலந்ததுதான். மணவாழ்வு மேடு, பள்ளங்களைக் கொண்டதுதான். உங்களின் அடிமையைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு முழுமையாக அடிபணிந்து இருக்க முடியாது. எதிர்பார்ப்புக்கும் எதார்த்தத்திற்கும் மத்தியிலுள்ள இடைவெளி மிகப்பெரியது என்பதை மனம் உணர்ந்துகொள்ளும்போது அது சகிப்புடன் வாழ பழகிக்கொள்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்-1

Loading

ஒரு மனிதன் தான் செய்யும் பாவத்தை பாவம் என உணர்தலே அவன் அதிலிருந்து விடுபடுவதற்கான முதல் அடி. எந்தச் சமயத்திலும் அதனை அவன் நியாயப்படுத்தி விடக்கூடாது. அதற்கான நியாய வாதங்கள் அவனுக்குள் உருவாகிவிட்டால், அவற்றை அவன் வெளிப்படுத்தத் துணிந்து விட்டால் அவன் அடுத்த நிலைக்குச் சென்றுவிடுவான். அது வெளியேறுவதற்கு சற்று கடினமான நிலை. ஒருவன் தனக்கு நோய் இருப்பதை உணர்ந்தால்தானே அதற்கான சிகிழ்ச்சையை அவன் முன்னெடுக்க முடியும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி

Loading

பிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய அரசியல் சூழல் மற்றும் பின்னணியிலிருந்து ஆய்வு செய்வது அவசியம். இப்படியான ஒரு அரசியல் பின்னணியில் இரக்கமற்ற பயங்கரவாதத்தால் கொலையுண்ட மக்கள் அனைவருக்கும் நம் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.

மேலும் படிக்க